ராஜேஷின் காலில் விழுந்தது முதலே மீனாட்சியின் மனது நிலையாக இல்லை.
மஞ்சுளா அவளுக்கு ஆறுதல் சொல்லிவிட்டு சென்றதும், வீட்டிற்கு சென்று யாரையும் பார்க்காமல் நேராக தன்னுடைய அறைக்கு சென்று கதவை தாழிட்டுக்கொண்டாள்.
நெஞ்சில் ஒட்டிக்கொண்டிருந்த துப்பட்டாவை எடுத்து மெத்தையின் மீது போட்டுவிட்டு ட்ரெஸ்ஸிங் டேபிளில் இருக்கும் நிலக்கண்ணாடி முன்னால் சென்று மீனாட்சி நின்றாள்.
தனது பருவ வீக்கத்தின் பிளவை ஒரு ஆணுக்கு தெரியும்படி அஜாக்கிரதையாக இருந்துவிட்டோமே என அதை தொட்டுப்பார்த்து துடித்தாள்.
எவரேனும் தவறு செய்துவிட்டு, ராஜேஷை எதிர்த்து பேசினாலே உச்சி வெயில் பொழுதில் கல்லூரியை பத்து முறை வட்டமடித்து வர சொல்லுவான்.
சுடும் மணலில் வெறும் கால்களுடன் நிற்க வைப்பான்.
அதையெல்லாம் ஒப்பிட்டு பார்க்கும்போது, எனக்கு அவன் கொடுத்தது மிகச்சிறிய தண்டனைதான்.
அவனை நான் அடித்தும்கூட என்னை சித்தரவதை செய்யாமல் எதற்காக விட்டுவிட்டான் ?
ஒருவேளை பெண் என்பதாலா ?
இல்லை இருக்காது அவனுக்கு பெண்களை பார்த்தாளே பிடிக்காது.
பிறகு எதற்காக என் கைகளை தூக்கிக்கொண்டு நிற்க சொன்னான்.
இதெல்லாம் ஒரு தண்டனையா என்றெல்லாம் எனக்கு தோன்றியதே.
ஒருவேளை என்னுடைய உடலை முழுவதுமாக ரசிப்பதற்காக செய்தானோ ? ஒரு கணம் மீனாட்சியின் நெஞ்சு பயத்தில் ஏறி இறங்கியது.
நிச்சயமாக இருக்கலாம். அவன் என்னை இன்று பார்த்த பார்வையே சரி இல்லை.
மீனாட்சிக்கு பலர் முன்னிலையில் அப்படி நின்றதை இப்போதும் நினைத்தாலும் மிகவும் கூச்சமாக இருந்தது.
ராஜேஷை சரியான முரடன் என்றுதானே நினைத்தோம், ஒருவேளை காமுகனாக இருப்பானோ என சிந்தித்தாள்.
இதை யாரிடம் போய் சொல்வது, எவரும் நம்பமாட்டார்களே என மீனாட்சி துடித்தாள்.
அவள் அப்படி துடித்தாலும், அந்த லெட்டரில் இருந்ததை படித்ததிலிருந்தே அவளது உடல் உஷ்ணமாகிவிட்டது.