ஒரு ஆடவனின் கண்ணுக்கு தன்னுடைய மார்பினை இவ்வளவு பக்கத்தில் காண்பித்துவிட்டோமே என கூச்சப்பட்டு உடைகளை வேகமாக சரி செய்துக்கொண்டாள்.
“ஸ்டூடண்ட்ஸ் எல்லாரும் கிளம்புங்க”
ராஜேஷின் கணீர் குரலை கேட்டு அனைவரும் மரியாதையுடன் கிளம்பினார்கள்.
மஞ்சுவும் மீனாவும் கவலையுடன் மெதுவாக நடந்து சென்றனர்.
ரகு தனக்கு அருகில் இருப்பதையும் மறந்து மீனாட்சியின் பின்னழகை ராஜேஷ் நன்றாக ரசித்துக்கொண்டிருந்தான்.
அது சென்னையின் புறநகர் பகுதியில் அமைந்திருக்கும் ஒரு மெக்கானிக் ஷாப்.
அங்கே இரு சக்கர வாகனத்தில் ஆரம்பித்து கனரக வாகனங்கள் வரை அனைத்து வண்டிகளுக்கும் சர்வீஸ் செய்யப்படும்.
அதற்கு பின்னால் இருக்கும் ஒய்வெடுக்கும் அறையில் ராஜேஷ் கோபத்துடன் நின்றிருந்தான்.
அருகில் கருமை நிறத்தில், ஒல்லியான தேகத்துடன் தலையில் சுருட்டை முடியோடு ஒருவன் தரையில் கிடந்தான்.
மீனாட்சிடம் கடிதம் கொடுத்துவிட்டு ஓடிய அதே நபர்தான்.
“நாயே! இனிமே இப்படி செய்வியா ? செய்வியா ?” என கோபத்துடன் அவனது இடுப்பில் கால் வைத்து ராஜேஷ் மிதித்தான்.
“இல்ல, இனிமே செய்யமாட்டேன்” கதறியபடி மிதி வாங்கிக்கொண்டிருந்தான்.
இதற்கு மேல் அடித்தால் தாங்கமாட்டான் என யோசித்து மிதிப்பதை ராஜேஷ் நிறுத்தினான்.
கை நீட்டி அவனை பிடித்து எழுப்பியதும் தட்டு தடுமாறி சேரில் அமர்ந்துக்கொண்டான்.
“ஏண்டா இப்படியா உயிர் போற மாதிரி அடிப்பே, அய்யோ! அம்மா” வலியால் துடித்தான்.
ராஜேஷ் ஒரு சிகரெட்டை பற்ற வைத்து புகை விட்டுக்கொண்டே பேசினான்.
“லவ்வுக்கு உன்கிட்டபோயி ஐடியா கேட்டு வந்தேன்பாரு, உன்னையெல்லாம் கொல்லனும்டா”
“ஸாரிடா அவ இப்படி அடிப்பான்னு எதிர்பாக்கல”
“அதெல்லாம் இருக்கட்டும், உன்ன ஹெல்மேட் போட்டுதானே அந்த லெட்டர் கொடுக்க சொன்னேன். இப்போ அவ உன்ன கரெக்ட்டா அடையாளம் கண்டிபிச்சுட்டா. என்ன பண்றது ?”
“ஸாரி ஸூமால் டெக்னிகல் டிஃபெக்ட், நெக்ஸ்ட் டைம் கரெக்ட் பண்ணிடுறேன்”