மதன மோக ரூப சுந்தரி – 4 45

ஆதிராவோ எரிச்சலை வெளிப்படுத்தினாள்.. முழு ரிங்கும் சென்று கால் கட் ஆனதாலேயே அந்த எரிச்சல்.. மீண்டும் டயல் செய்து செல்ஃபோனை காதில் வைத்துக் கொண்டாள்.. அந்தப்பக்கம் ரிங் போகிற கேப்பில்,

“சொல்றேன்ல.. இரு.. பேசிட்டு வந்துடுறேன்..!!”

என்று இந்தப்பக்கம் தென்றலிடம் சொன்னாள்..!! தென்றல் இப்போது ஒருவித அவஸ்தையுடன் ஆதிராவையே பார்த்துக் கொண்டிருந்தாள்..!! கால் மீண்டும் பிக்கப் செய்யப்படவில்லை.. ஆதிரா திரும்ப முயற்சித்தாள்.. நான்காவது முறையாக முயற்சிக்கும்போதுதான் கால் பிக்கப் செய்யப்பட்டது..!! ஆதிரா இந்த முனையில் ‘ஹலோ’ என்று சொல்ல வாயெடுக்கும் முன்பாகவே.. அடுத்த முனையில் கதிரின் குரல் அவசரமாக ஒலித்தது.. தூக்க கலக்கமும், எரிச்சலும் மிகுந்த குரல்.. எடுத்ததுமே படபடவென பொரிந்து தள்ளினான்..!!

“ஹலோ.. யாருங்க இது..?? காலங்காத்தால..?? கால் பிக்கப் பண்ணலைன்னா விட மாட்டிங்களா.. திரும்ப திரும்ப பண்ணிட்டே இருக்கீங்க..?? கொஞ்சம் கூட மேனர்ஸ் இல்ல..?? ச்சே..!!”

ஆதிரா ஓரிரு வினாடிகள் அப்படியே ஸ்தம்பித்துப் போனாள்.. கதிரிடமிருந்து இந்த மாதிரி ஒரு ரெஸ்பான்ஸை அவள் சுத்தமாக எதிர்பார்த்திரவில்லை..!! என்ன செய்வது என்று திருதிருவென விழித்தவள்.. பிறகு திக்கித் திணறி சொன்னாள்..!!

“நா..நான்.. நான்.. ஆ..ஆதிரா பேசுறேன் கதிர்..!!”

அழைப்பு விடுத்தது ஆதிரா என்று புரிந்ததும்.. அந்தப்பக்கம் கதிருமே திகைத்துப் போனான்.. அவசரப்பட்டு வார்த்தைகளை சிந்திவிட்டோமே என்று அவனிடம் ஒரு பதற்றம்.. அவன் பேசிய வார்த்தைகளில் ஒருவித தடுமாற்றம்..!!

“ஆ..ஆதிரா நீங்களா..?? நா..நான் வேற யாரோன்னு நெனச்சுட்டு.. என்னன்னவோ..!! ஸா..ஸாரி.. ஸாரிங்க.. ஐ’ம் ரியல்லி வெரி ஸாரி..!!”

“ப..பரவால..!!”

“அ..அன்னோன் நம்பரா இருந்தது.. அதான்.. யோசிக்காம.. ஸாரி..!!”

“இ..இதுதான் என் நம்பர்..!!”

“அப்படியா..?? அப்போ எங்கிட்ட இருக்குறது உங்களோட பழைய நம்பரா..??”

“அப்படித்தான் இருக்கும்..!! நா..நான் மைசூர் போனதுல இருந்து இந்த நம்பர்தான் யூஸ் பண்றேன்..!!”

“ஓ.. சரி சரி..!! ஸேவ் பண்ணிக்கிறேங்க ஆதிரா..!!”

“ம்ம்..!! அ..அப்புறம்.. இன்னைக்கு அந்த ப்ரொஃபஸர போய் பாக்கலாம்னு பேசிட்டு இருந்தோம்..!!”

“ஆமாம்..!!”

“அதான்.. எ..எப்போ கெளம்பலாம்னு கேக்குறதுக்குத்தான் கால் பண்ணேன்..!!”

“இ..இதோ.. குளிச்சுட்டு இன்னும் ஒரு.. ஒரு மணி நேரத்துல அங்க வந்துடுறேன்..!! போதுமா..??”

“ஹையோ.. ஒ..ஒன்னும் அவசரம் இல்ல..!! உ..உங்களுக்கு தூக்கமா இருந்துச்சுனா.. ந..நல்லா தூங்கிட்டு.. பொறுமையாவே வாங்க..!!”

“இ..இல்ல இல்ல.. இனிமே தூக்கம் வராதுங்க ஆதிரா.. அவ்வளவுதான்.. நான் ரெடியாகி வந்துடுறேன்.. சீக்கிரமே கெளம்பிடலாம்..!!”

“சரி கதிர்.. வாங்க..!!”

காலை கட் செய்த பிறகும்கூட ஒருசில வினாடிகள்.. கதிரின் எரிச்சல் தந்த தாக்கத்திலேயே ஆதிரா இருந்தாள்..!! ‘உஃப்’ என்று உதடுகள் குவித்து மூச்சு வெளியிட்டாள்..!! பிறகு.. இருவரும் மாறி மாறி பம்மியதையும், வழிந்து கொண்டதையும் நினைத்து மெலிதாக புன்னகைத்தாள்..!!

அறைக்கு செல்லலாம் என்று ஆதிரா திரும்பவும், அவளுடைய பார்வையில் தென்றல் தென்பட்டாள்.. உடனே ஞாபகம் வந்தவளாய்..

“ம்ம்.. சொல்லு தென்றல்.. நீ ஏதோ சொல்ல வந்த..??”

“ஒ..ஒன்னுல்லக்கா.. வந்து..” தென்றல் தயங்க,

“ம்ம்.. சொல்லு..!!” ஆதிரா அவளை தூண்டினாள்.

“இ..இல்ல.. ‘அண்ணன் தூங்கிட்டு இருப்பான்.. இப்போ கால் பண்ணா அவனுக்கு பயங்கரமா கோவம் வரும்.. கன்னாபின்னான்னு கத்துவான்..’னு சொல்ல வந்தேன்க்கா..!!” அப்பாவியாக சொன்னாள் தென்றல்.

1 Comment

  1. And indefinitely it is not far 🙂

Comments are closed.