அவள் வந்து மீண்டும் ஒரு முறை துடைத்து விட்டு அந்த காயத்திற்கு கட்டு போட்டாள் .சரி கேட்ருவோம் என்று நினைத்து கொண்டு சுவாதி என்றான் .அவள் என்னடா என்று நிமிர்ந்து பார்த்தாள் .விக்கிக்கு அவள் கண்களை நேருக்கு நேராக பார்த்தான் .அதன் பின் அவள் கண்களை நேருக்கு நேராக பார்த்து கொண்டு அவனால் பேச முடியவில்லை .என்ன என்றாள் மீண்டும் .அவன் நாத்திங் என்றான் .
அது இருக்கட்டும் இது என்ன இவளவு பெரிய காயமாக்கி வச்சு இருக்க என்ன பண்ணி தொலைச்ச என்றாள் .அது வர்ற வழியில ஒரு கல்ல தெரியாம மோதிட்டேன் என்றான் .மோதிட்டியா இல்ல நீயா போயி எத்துன்னியா என்றாள் .என்ன இது கரெக்டா சொல்றா என்று நினைத்து கொண்டு ஏன் அப்படி கேக்குற என்றான் .இல்ல காய்த்த பாத்தா தெரியாம இடிச்ச மாதிரி இல்ல வேணும்னு எங்கயோ உதைச்ச மாதிரி இருக்கு ஏன்னா இடிச்சா சிறுசாதான் காயம் இருக்கும் உன்னோட காயம் பெருசால இருக்கு என்றாள்
அது ஒன்னும் இல்ல பெரிய கல்லுல மோதிட்டேன் அதான் அப்படி இருக்கு அவள் கட்டு போட்டு முடித்தாள் .யே இன்னும் ஒரு ரெண்டு நாளைக்கு ஆபிஸ்க்கு ஷு போடாம போ என்றாள் .ம்ம் சரி நீ என்ன ஏன் மேல இவளவு அக்கறை காட்டுற எதுவும் காரியம் ஏதும் ஆகணுமா என்றான் சிரித்து கொண்டே .ஒரு காரியமும் இல்ல எனக்கு எப்பவுமே இந்த மாதிரி நர்சிங் வொர்க் பிடிக்கும் .நம்ம குரூப்ல எல்லாத்துக்கும் இந்த மாதிரி எல்லாத்துக்கும் பாரஸ்ட் அயிட் பண்ணி இருக்கேன் மணி வள்ளி டேவிட்ன்னு எல்லார் காயத்துக்கும் இந்த மாதிரி கட்டு போட்டு இருக்கேன் ,
நார்சிங் படிக்கணும்னு தான் ஆச ஆனா படிக்கல என்றாள் .சரி ஏன் படிக்கல என்றான் ,ஏன்னா எனக்கு அத விட இது பிடிச்சு இருந்துச்சு அவளவுதான் என்றாள் ,ஓகே என்றான் .என்னைய விடு நீ என்ன கொஞ்சூண்டு ரத்தத்த பாத்ததுக்கே மயக்கம் போட்டு விழுந்துட்ட ஏன்டா பயந்தாகுழி என்றாள் .ஏன் நான் ஒன்னும் ரத்தத்த பாத்து மயக்கம் ஒன்னும் போடல என்றான் .அப்புறம் என கேட்டாள் .நான் டயார்டா இருந்துச்சுன்னு அப்படியே சாஞ்சுட்டேன் என்றான் .
யே எ எ என்று சுவாதி அவனை கிண்டல் அடித்தாள் .நிஜமா நான் மயக்கம் போடல என்றான் .போடா என்றாள் .சரி உங்க அஞ்சலி அக்கா வந்துட்டு போயிட்டாங்களா என்றான் .ம்ம் யே அவங்க பேர் எல்லாம் ஞாபகம் வச்சு இருக்க என்றாள் .பின்ன அவங்கதான டெல்லி போலிஸ் கமிசனர் வோயிப்ன்னு சொல்லி என்னைய மிரட்டுன மறக்க முடியுமா என்றான் .யே நான் வேணும்னு மிரட்டல அப்ப எனக்கு வேற வழி தெரியலடா மன்னிச்சுக்கோடா என்றாள் .
யே விடு அத பத்தியே பேசி நம்ம ரெண்டு பேரும் ஏன் சண்ட போடணும் என்றான் .நீ சொல்றதும் சரிதான் ஓகே நீ சாப்பிட்டியா என்றாள் .நான் பார்ட்டில சாப்பிட்டேன் என்றான் .ஓகே அப்ப போயி நல்லா ரெஸ்ட் எடு என்றாள் .ஓகே என்று சொல்லிவிட்டு விக்கி எழுந்தான் .அதை பார்த்த சுவாதி வெயிட் வெயிட் அந்த காயத்தோட நடக்காத நான் வரேன் பொறு என்று சொல்லி கொண்டு சுவாதி அவன் அருகே வந்தாள் .
அவள் அவன் அருகே வந்ததும் மீண்டும் அவள் கண்களை அருகே பார்த்தான் .அவள் என் தோள்ல கை போட்டுக்கோ என்றாள் .ம்ம் வேணாம் இருக்கட்டும் என்றான் .யே இப்பதான் கட்டு போட்டு இருக்கு நடந்தேன்னா காயம் பெருசா ஆகிடும் அதனால என் தோள்ல கை போட்டுக்கோ என்றாள் .அது வந்து வந்து என்று அவன் திணறி கொண்டு இருக்க சுவாதி அவன் கையை எடுத்து அவள் தோள் மீது போட்டு கொண்டாள் .யே ஆஸ்பத்திரில காயம் வந்து இதே மாதிரி நடக்க முடியாம இருக்கப்ப நர்ஸ் தோள கை போட்டு நடக்க மாட்ட அந்த மாதிரி நினச்சுக்கோடா என்றாள் .
பின் அவன் அவளை பார்த்து கொண்டு மட்டும் இருக்க அவள் அவன் இடுப்பில் கை வைத்து அவனை கட்டியாக பிடித்து கொண்டாள் .அவன் கை அவள் தோள் பட்டையை பிடித்து இருந்தது ..இருவரும் மெல்ல நடந்தனர் .சுவாதி அவன் ரூமை திறந்து அவனை அவன் ரூம் கட்டிலில் கொண்டு போயி படுக்க வைத்தாள் .விக்கி அது வரை அவளையே பார்த்து கொண்டு இருந்தான் .பின் அவள் அவனை கட்டிலில் உக்கார வைத்ததும் அவன் வேற பக்கம் திரும்பி கொண்டான் .
Story supper plz continue the story
Very nice story. Plz update the next part
Bro semmaya iruku story… Please continue… I came for sex story… U changed my thoughts… Fill ah eluthunga bro
Hello brother daily oru part podunga
Next story plz
Next part podunga bro
6 podu dude