அவன் இன்னும் வரலையே என்றாள் சுவாதி .சரி அவன் வர வரைக்கும் வையிட் பண்ணு நீயா தனியா போகாத என்றாள் அஞ்சலி .சரிக்கா என்று போனை வைத்து விட்டாள் .
அவள் ஒரு பத்து நிமிடம் பொறுத்து பார்த்தாள் .ஆனால் அவளால் முடியவில்லை எனவே பர்சை எடுத்து கொண்டு கதவை பூட்டி விட்டு கடைக்கு நடக்க ஆரம்பித்தாள் ,
விக்கி வீடு தனியாக இருப்பதால் மெயின் ரோட்டிற்கு கொஞ்ச தூரம் செல்ல வேண்டும் .அந்நேரமே அவள் நடந்து சென்ற ஏரியா ஆள் அரவம் இல்லமால் இருக்க சுவாதியை பயம் தொற்றி கொண்டது .பயத்தோடு தனியாக நடந்து சென்றாள்
சுவாதி அந்த இருட்டில் நடந்து கொண்டு இருந்தாள் ,அவளுக்கு மிகவும் பயமாக இருந்தது என்ன 8 மணிக்கு எல்லாம் இந்த ஏரியா இப்படி இருக்கு ஐயோ குழந்தைய வேற வயித்துல வச்சுக்கிட்டு இன்னும் மெயின் ரோட்டுக்கு போணுமே ,
இதுக்குதான் மூத்தவாங்க பேச்ச கேக்கணும் போல அஞ்சலி அக்கா எவளவோ சொன்னங்க தனியா போகதான்னு கேட்டேனா இப்ப ஏதோ சூடு காட்டுக்கு நடுவுல நடக்கிற மாதிரி இருக்கே ,ஆமா அவங்க சொன்ன மாதிரி விக்கியே கூப்பிட்டானாப்புல சார் உடனே இதோ வந்துறேன் அப்படின்னு சொல்ல போறான் பாரு உடனே இம்சையே சனியனே திட்டுவான் வேற என்ன பண்ண போறான் அவன் என்று நினைத்து கொண்டு இருக்கும் போது
சர் என்று ஒரு கார் அவள் பக்கத்தில் வந்து நிக்க அவள் ஒரு நிமிடம் பயந்தே போனாள் .ஹ இந்நேரம் எங்க போற என்று விக்கி காரை திறந்து கேட்க அப்பா நீதானா ஒரு நிமிஷம் நான் பயந்தே போயிட்டேன் என்றாள் .எதுக்கு பயந்த என் கார் உனக்கு அடையாளம் தெரியாதா என்றான் .இருட்டுல உன் கார் ப்ளூவா ப்ளாக்கான்னு அடையாளம் தெரியல என்றாள் .
ம்ம் இவளுக்கே இருட்டுல சரியா கண்ணு தெரியல அப்புறம் எப்படி அந்த கிழடுக்கு கார் கலரு தெரிஞ்சுருக்க போகுது என்று நினைத்து கொண்டு யே நீ என்ன இந்நேரம் எங்க போற என்றான் .ஒன்னும் இல்ல சும்மா கடை வரைக்கும் போறேன் என்றாள் .என்ன வேணும்னு சொல்லு நானே போயி வாங்கிட்டு வரேன் .அவன் அப்படி கேட்டதும் சுவாதிக்கு ஏதோ கனவு எதுவும் காண்கிரமோ என்று தோன்றியது .
இருந்தாலும் அவள் பரவல நானே போயி வாங்கிக்கிறேன் என்றாள் ,எ இந்த இருட்ட்ல இப்படி நீ carriying ஓட மெயின் ரோடு போயி எப்படி திரும்பி வருவ ரொம்ப கஷ்டமா இருக்கும் அதனால என் கிட்ட சொல்லு என்ன வேணும்ன்னு நான் வாங்கிட்டு வரேன் என்றான் .உண்மைலே இது கனவுதான் என்று ஒரு முறை தன்னை கில்லி பார்த்து கொண்டாள் .என்ன வேணும் சொல்லு என்றான் விக்கி .அவள் அமைதியாகிவே இருப்பதை பார்த்து என்ன சுவாதி சொல்ல கூச்சபடுர விஸ்பர் எதுவும் வேணுமா என்றான் .
Story supper plz continue the story
Very nice story. Plz update the next part
Bro semmaya iruku story… Please continue… I came for sex story… U changed my thoughts… Fill ah eluthunga bro
Hello brother daily oru part podunga
Next story plz
Next part podunga bro
6 podu dude