நண்பனின் காதலி – 5 105

ஏன் அப்படி என்றாள் .அப்பனதானா எல்லா ஊர் பொண்ணுகளையும் ஈஸியா கரெக்ட் பண்ண முடியும் என்றான் சிரித்து கொண்டே .சீ கண்றாவி பிடிச்சவேனே நான் கூட பரவல பையன் நல்ல விஷயம் எல்லாம் கத்து வச்சு இருக்கான்னு நினச்சேன் என்றாள் .யே அதுவும் நல்ல விஷயம்தானா மராத்தி தெரிஞ்சதள தான் அந்த பாட்டி கிட்ட பேசி உனக்கு மாங்கா வாங்கி தந்தேன் என்றான் .
அதுவும் சரிதான் சரி அந்த பாட்டி என்னையே பாத்துகிட்டே உன் கிட்ட என்னமோ சொல்லுச்சே என்ன சொல்லுச்சு என்றாள் .அது சொன்னத சொன்னா உனக்கு பயங்கர கோபம் வரும் பரவலையா என்றான் .ம்ம் பரவல சொல்லு என்றாள் .பாட்டி என்ன சொல்லுச்சுன்னா உனக்கு என்னையே மாதிரியே ஒரு ஆம்பிள பிள்ளைதான் பிறக்குமாம் என்றான் சிரித்து கொண்டே .
என்னது என்றாள் .பாத்தியா இதுக்குதான் நான் நாட்டுக்கு ஒரு விக்கி போதும் இன்னொன்னு வேணாம்னு அன்னைக்கே சொன்னேன் கேட்டியா என்றான் .டேய் போடா எனக்கு ஆம்பிள பிள்ள பிறந்தாலும் நான் அத உன்னையே மாதிரி எல்லாம் ஆக விட மாட்டேன் அவன சூப்பரா வளப்பேன் என்றாள் .ம்ம் அத என்ன குழந்தையோ என்னமோ அது உன் பாடு இப்ப என்னையே ஆள விடு என்று சொல்லி விட்டு தூங்க போனான் .
அவன் கதவை திறக்கும் முன் சுவாதி கூப்பிட்டாள் விக்கி என்றாள் .ம்ம் சொல்லு சுவாதி என்றான் .ரொம்ப தேங்க்ஸ் எல்லாத்துக்கும் என்றாள் .ஓகே குட் நைட் என்று சொல்லி விட்டு சிரித்து விட்டு தூங்க போனான் .பின் சுவாதியும் ஒரு மெல்லிய புன்னகையோடு தூங்க போனாள் .பின் வழக்கம் போல தன் வயிற்ரை தடவி கொண்டே சொன்னாள்
ஓகே உள்ள இருக்கிறது சாரோ இல்ல மேடமோ யார இருந்தாலும் அம்மாவுக்கு அத பத்தி கவலை இல்ல .நீங்க பத்திரமா உள்ள இருந்து பத்திரமா பத்தாவது மாசம் வெளிய வாங்க அதுக்கு அப்புறம் முழுக்க முழுக்க அம்மா கூடதான் உங்க வாழ்க்கை என்று வயிற்ரை தடவி கொஞ்சி விட்டு சுவாதி தூங்கினாள் .சுவாதி எப்போதுமே நிம்மதியாக தான் தூங்கிகிராள் .அவளுக்கு அவளும் அவள் குழந்தை மட்டுமே வாழ்க்கை என்று முடிவு பண்ணிக்கொண்டு நிம்மதியாக தூங்குகிராள் .
ஆனால் அவள் வந்ததுளிருந்து விக்கிக்கு தான் தூக்கமெ வர வில்லை .தினம் தினம் அவன் மனதோடு ஒரு யுத்தமே நடத்தி கொண்டு இருந்தான் .எப்போதும் கண்களை மூடினாலும் சுவாதி தான் கண்ணுக்கு தெரிந்தாள் .இன்று அவள் ம்ம் ம்ம் என்று சொல்லி கொண்டே அவள் மாங்கவை சப்பியது ஞாபகத்திற்கு வந்தது .உடனே எழுந்து சே இவ என்ன பண்ணாலும் அழகா தெரியுறா விட்டா அவள் பெண்டா மொன்டா கூட நம்ம கண்ணுக்கு அழகா தெரியும் போல என்று தன்னை தானே திட்டி கொண்டு மீண்டும் அவளை நினைத்து பார்த்தான் ,
சே மாங்கா வந்ததும் மிட்டாய பாத்த குழந்தை மாதிரி என்ன அழகா புடிங்கி தின்னா என்று அதை நினைத்து பார்த்தான் .ஆமா ரொம்ப முக்கியம் தூங்குடா என்றது மனம் .பின் அப்படி இப்படி என்று புரண்டு புரண்டு படுத்து ஒரு வழியாக ஒரு மணி போல தூங்கினான் .பின் சுவாதி அவளை எழுப்பினாள் .விக்கி விக்கி அதுக்குள்ளே என்னையே மறந்துட்ட என்றாள் .சுவாதி உனக்கு எப்படி தெரியும் சரி இப்ப எதுக்கு இங்க வந்த என்றான் .

7 Comments

  1. Story supper plz continue the story

  2. Very nice story. Plz update the next part

  3. Bro semmaya iruku story… Please continue… I came for sex story… U changed my thoughts… Fill ah eluthunga bro

  4. Hello brother daily oru part podunga

  5. Next story plz

  6. Next part podunga bro

Comments are closed.