நண்பனின் காதலி – 5 105

விக்கிக்கு அவளிடிம் தன் முதல் காதலை நினைத்து அழுததை அவளிடிம் சொல்லி அழுக வேண்டும் போல இருந்தது .ஆனால் அது அவனை பலமில்லதவன் போல் காட்டும் என்று நினைத்து கொண்டு ஒன்னும் இல்ல எனக்கு டயார்டா இருக்கு நான் தூங்க போறேன் என்று சொல்லி விட்டு போனான் .
அவன் போக முன் சுவாதி அதிர்ச்சியோடு விக்கி இங்க பாரு ரத்தம் ….

விக்கி இங்க பாரு தரை முழுக்க ரத்தம் என்று சுவாதி காட்டிய இடத்தில ரத்த துளிகள் இருந்தது .ஆமா ரத்தம் இது ஏங்க இருந்து வந்துச்சு என்று விக்கி அலுப்போடு கேட்டான் .வெயிட் வெயிட் அந்த ரத்த துளி ஸ்ட்ரைட்டா ஏங்க போகுதுன்னா என்று சொல்லி கொண்டு சுவாதி அந்த ரத்த துளிகள் இருந்த இடத்தை பார்த்தாள் .

பின் விக்கியை பார்த்து டேய் அந்த ரத்த கரை ஸ்ட்ரைட்டா உன் கிட்டதான் போகுது .எங்கிட்டும் கார்ல அடிபட்டுட்டியா இல்ல பார்ட்டில எவன் கூடயும் சண்ட போட்டியா என்றாள் .இல்ல என் கிட்ட எதுக்கு ரத்தம் வர போகுது என்றான் .டேய் உன் கால்ல தான் வருது என்றாள் .எங்க என்றான் .உன் கால் விரல பாரு என்றாள் .விக்கி தன் காலை பார்த்தான் .கால் விரலில் இருந்து அதிக ரத்தமாக வந்து கொண்டு இருந்தது .அப்போது தான் விக்கிக்கு தன் முதல் காதல் தோல்வியை நினைத்து கல்லில் ஏத்தியது ஞாபகம் வந்தது .
ஆனால் அவன் தன் காலில் வந்து கொண்டு இருந்த ரத்தத்தை பார்த்து ஒ மை காட் ரத்தம் என்று சொல்லி கொண்டே பக்கத்தில் இருந்த சோபாவில் சாய்ந்து மயக்கம் போட்டான் .அவனுக்கு சிறு வயதில் இருந்தே ரத்தத்தை பார்த்தால் மயக்கம் வந்து விடும் .பின் அவன் ஒரு பத்து நிமிடம் சோபாவில் படுத்து இருந்தான் .தீடிரென வலி ஏற்பட ஆ என்று கத்தி கொண்டே முழித்து பார்த்தான் .
அங்கு சுவாதி அவன் கால் விரல்களை பஞ்சை வைத்து துடைத்து கொண்டு இருந்தாள் .என்னடி பண்ற விடுடி எரியுது என்றான் .கத்தாதடா சும்மா லைட்டா டெட்டால் தான் போடுறேன் என்றாள் .ஒன்னும் வேணாம் நீ போ என்றான் .கொஞ்ச நேரம் பொறுத்துக்கோ என்றாள் .பின் அவள் அந்த காயத்தை நன்கு துடைத்தாள் .அந்த டெட்டால் எரிச்சலில் விக்கி மேலும் அதிகமாக கத்தினான் .
கத்தி கொண்டே விக்கி எந்திரக்க முற்பட விக்கியும் சுவாதியும் நேருக்கு நேர் பார்த்து கொண்டனர் .சிறு வினாடிகள் இருவரும் அமைதியாக இருக்க வாட் நான் என்ன உனக்கு அன்னைக்கு மாதிரி கையா அடிச்சு விடுறேன் அப்படியே ஸ்ட்ரைட்டா கிஸ் அடிக்க வர மாதிரி வர ஒழுங்கா சோபாவுல சாய்ஞ்சு படுடா என்று அரட்டினாள் .ஓகே ஆனா எரியுது என்றான் .பரவல கண்ண மூடி கிட்டு பல்ல கடிச்சுக்கோ கொஞ்ச நேரம் என்றாள் .
ஓகே என்று விக்கி கண்களை மூடினான் .ஆனால் அடுத்த நிமிடமே கண்ணை திறந்து தன் கால் விரல் காயத்தை சுத்தம் பண்ணி கொண்டு இருந்த சுவாதியை தன் ஒன்றரை கண்ணை கொண்டு பார்த்தான் .பின் அவள் காயத்தை துடைப்பதிலே கவனமாக இருந்ததால் அவனை பார்க்க மாட்டாள் என்று நினைத்து முழுதாக கண்ணை திறந்து பார்த்தான் .விக்கிக்கு இப்போது காலில் எரிச்சல் இருந்தாலும் அது மூளைக்கு உரைக்க வில்லை .மாறாக மீண்டும் சுவாதியை பார்த்து கொண்டே இருக்க வேண்டும் போல் இருந்தது .
அவள் முழுதுமாக காலில் இருந்த ரத்தத்தை சுத்தம் செய்து விட்டு எழுந்தாள் .சரி நான் என் ரூமுக்கு போகட்டா என்றான் .யே இருடா பேண்டேஜ் போட்டு விடுறேன் என்று அவள் ரூமுக்கு போயி பேண்டேஜ் எடுக்க போனாள் இப்ப எதுக்கு இவ நம்ம மேல இவளவு அக்கறை காட்டுரா சரி நம்மளா எதுவும் மனச போட்டு குழப்பம அவ வரட்டும் அவ கிட்டயே கேப்போம் என்று நினைத்து கொண்டு இருந்தான் .

7 Comments

  1. Story supper plz continue the story

  2. Very nice story. Plz update the next part

  3. Bro semmaya iruku story… Please continue… I came for sex story… U changed my thoughts… Fill ah eluthunga bro

  4. Hello brother daily oru part podunga

  5. Next story plz

  6. Next part podunga bro

Comments are closed.