நண்பனின் காதலி – 5 105

அவள் கிட்ட போயி மெல்ல ஹலோ சிஸ் எப்படி இருக்கீங்க என்றான் .பின் அங்கு இருந்த பெண்களிடிம் யே மேரி அது என்னதுடா தம்பிக்கு ஹிந்தில என்றாள் .ம்ம் சோட்டா பாய் என்றான் .ஆ அதான் எ சோட்டா பாய் என்றாள் .மும்பை வந்து 4 வருஷம் ஆச்சு இன்னும் ஹிந்தி கத்துக்கல என்று நினைத்து கொண்டு கிளம்ப பார்த்தான் .பின் வள்ளி அவனை நிறுத்தி டேய் எஸ்கேப் ஆக பாக்காத கூட இருந்து போட்டோ எடுத்துக்கோ அப்புறம் இந்தா 8 மணிக்கு எல்லாம் பங்க்சென் முடிஞ்சுடும் எல்லாம் வீட்டுக்கு போயிடுங்க அப்புறம் நீ நான் மணி எல்லாம் ஒண்ணா உக்காந்து பேசுவோம் என்றாள் .
ஆனா டேவிட் என்னைய பாத்தா என்ன பண்றதுன்னு என்று இழுத்தான் .அவன பத்தி கவலை படாத அவன் ரொம்ப நேரம் இருக்க மாட்டான் அவனும் கல்யாணம் முடிச்சவந்தானா அதுனால அவன் பொண்டாட்டி ரொம்ப நேரம் இருக்க விட மாட்டா அதுனால நீ இரு ஓடிராத என்றாள் .வேற வழி இல்லமால் மீண்டும் ஒரு இடத்தில போயி உக்காந்தான் .பின் டேவிட் வந்தான் அவன் வருவதை பார்த்து இவன் அவனுக்கு தெரியாமல் இருக்குமாறு ஒரு சுவருக்கு பின்னால் ஒழிந்து கொண்டான் .
பின் அவனும் அவன் மனைவியும் போயி வள்ளி கிட்ட போயி என்னமோ பேசி விட்டு ஜோடியாக ஒரு இடத்தில நின்று கொண்டு பேசி கொண்டு இருந்தார்கள் ,இருவரும் நல்லா சிரித்து சிரித்து பேசி கொண்டு இருந்தார்கள் .பின் எதார்த்தமாக அவன் விக்கியை பார்க்கவும் உடனே கோபமாக முறைத்து விட்டு அந்த பக்கம் திரும்பி கொண்டான் .அவன் மனைவியும் பார்த்து விட்டு பார்த்தும் பார்க்காதது போல இருந்து விட்டாள் .
அது சரி புருசனுக்கு ஏத்த பொண்டாட்டிதான் என்று விக்கி நினைத்து கொண்டான் .அதன் பின் டேவிட் போயி மணியிடம் ஏதோ கடுப்பாக பேசினான் .மணியும் பதிலுக்கு ஏதோ அவனிடிம் கடுப்பாக பேசினான் .ம்ம் கண்டிப்பா நம்மள பத்திதான் பேசுறாங்கே போல என்று விக்கி நினைத்து கொண்டான் .அதன் பின் விசேசம் ஆரம்பமானது வள்ளிக்கு பெண்கள் செய்ய வேண்டிய சடங்குகளை எல்லாம் செய்து கொண்டு இருந்தனர் .வள்ளி முகம் முழுதும் புன்னகையோடு உக்காந்து இருந்தாள் .எல்லாரும் அவளை வாழ்த்தி விட்டு அவள் கன்னத்தில் சந்தனம் பூசி விட்டு அவள் தலையை தொட்டு ஆசீர்வாதம் செய்தார்கள்
மணி அவள் பக்கத்திலே நின்றான் .பின் சிறிது நேரத்தில் வள்ளி மெல்ல அழுக ஆரம்பித்தாள் .எல்லாரும் என்ன ஆச்சு என்று கேட்டனர் ,மணி போயி அவளை சமாதனபடுத்தி கொண்டே அவளிடிம் பேசினான் .பின் எல்லாரும் என்ன ஆச்சு என்று கேட்டார்கள் .அவ அப்பா அம்மா பக்கத்தில இருக்க முடியலையான்னு நினச்சு அவ அழுகுறா என்று சொன்னான் .உடனே எல்லலரும் அவளுக்கு சமாதனம் சொன்னார்கள் .அப்பா அம்மா இல்லாட்டி என்ன நாங்க இருக்கோம் என்று எல்லாம் சமதானம் சொன்னார்கள் .
விக்கி அதை பார்த்து எல்லாம் இந்த வீட்ட விட்டு வெளிய போன உடனே மறந்துடுவீங்க அப்புறம் ஏண்டி வெட்டி பேச்சு பேசுறிங்க என்று நினைத்து கொண்டான் .வள்ளிக்கு இங்கு இருபது முப்பது பேர் சமாதனம் சொல்லி கொண்டு இருக்கும் அதே வேளையில் தான் அங்கு தனியாக இருக்கும் சுவாதிக்கு சமாதனம் சொல்ல ஒரு ஆள் தான் இருந்தது அது அஞ்சலி .அஞ்சலி சுவாதி வீட்டிற்கு போனாள் .அவளை பார்த்து சுவாதி ரொம்ப சந்தோசமாக வரேவேற்றால் ஹ புள்ளதாட்சி எப்படிடீ இருக்க என்று கேட்டாவரே வந்தார் .
வாங்க அக்கா இருக்கேன் ஏதோ என்றாள் .அப்புறம் உடம்புக்கு எல்லாம் எப்படி இருக்கு உள்ள உன் குழந்தை எப்படி இருக்கு ஒழுங்கா சாப்பிடிரியா என்றாள் அஞ்சலி .ம்ம்ம் அதான் கொஞ்ச கஷ்டமா இருக்கு போன மாசம் வரைக்கும் ஓயாம வாந்தியா வந்து கிட்டு இருந்துச்சு .அதுக்கு அப்புறம் டாக்டர பாத்ததும் பரவல என்றாள் .ரொம்பவுமா வாந்தி வருது என கேட்டாள் அஞ்சலி .ஆமாக்கா என்றாள் .அடிக்கடி யூரின் வேற போறயா என்றாள் .ஆமாக்கா என்றாள் .அப்புறம் ஓயாம தூக்கம் வருதா என்றாள் .
அட ஆமாக்கா என்ன இப்படி எல்லாம் இருந்தா உள்ள குழந்தைக்கு எதுவும் சிக்கலா என்று சுவாதி பயத்தோடு கேட்டாள் .அஞ்சலி சிரித்து கொண்டே குழந்தைக்கு ஒன்னும் சிக்கல் இல்ல சிக்கல் உனக்கு தான் என்றார் .என்ன அக்கா சிரிக்கிறிங்க ஸ்ட்ரைட்டா மேட்டர சொல்லுங்க அக்கா ப்ளிஸ் எனக்கு பயமா இருக்கு என்றாள் .சொல்றேன் சொல்றேன் நீ அன்னைக்கு போன்ல என்கிட்ட என்ன சொன்ன என்றாள் அஞ்சலி .என்ன சொன்னேன் சொல்லுங்க என்றாள் சுவாதி . உன் வாழ்க்கைல இனி ஆம்பிளைகளே வேணாம்னு தான சொன்னே உன் வயித்துக்குள்ளே ஒரு ஆம்பிள தான் வளருது என்றாள் அஞ்சலி .
எத வச்சுக்கா சொல்றிங்க என்றாள் சுவாதி .ஏண்டி மூனு பிள்ள அதுல ரெண்டு ஆம்பிள பிள்ள பெத்த எனக்கு தெரியாதா

7 Comments

  1. Story supper plz continue the story

  2. Very nice story. Plz update the next part

  3. Bro semmaya iruku story… Please continue… I came for sex story… U changed my thoughts… Fill ah eluthunga bro

  4. Hello brother daily oru part podunga

  5. Next story plz

  6. Next part podunga bro

Comments are closed.