விக்கி கையில் இருந்த சிகரட் முடிந்து கையை சுட்டதும் அதை கையை விட்டு விக்கி பழைய நினைவுகலில் இருந்து திரும்பினான் .ம்ம் என்ன பண்ண இந்த சிகரட் மாதிரி அவளையும் கை விட்டுட்டேனே அன்னைக்கு மட்டும் அந்த பாழா போன சாதி குறுக்க வராட்டி இந்நேரம் என் வாழ்க்கையே மாறி இருக்கும் .
அப்பா அவ ஒன்னும் தாழ்த்தப்பட்ட சாதி கிடையாது அப்பா நம்மள மாதிரி தான் என்றான் விக்கி அவன் அப்பாவிடிம் .ஆமா ஆனா அவங்க வேற சாதி அந்த சாதில பொண்ணு எடுத்தா நம்ம சொந்தகாரங்கே எப்படி நம்மள பாப்பாங்க உனக்கு அப்புறம் இருக்க உன் தம்பிக்கு யார் பொண்ணு கொடுப்பா அப்புறம் உங்க அக்காவதான் உங்க மாமா நல்ல வச்சு வாழ்வரா என்றார் .நம்ம சொந்த காரங்க யாரும் வேணாம் .தம்பியும் என்னையே மாதிரி லவ் மேரேஜ் பண்ண சொல்லுங்க நல்லா இருக்கும் என்றான் .அறைஞ்சு பல்ல எல்லாம் பேத்துடுவேன் என்ன பேச்சுடா பேசுற என்னால அந்த சாதில இருந்து ஒருத்திய பொண்ண என் மகனுக்கு கட்டி வச்சு இந்த வீட்டுக்கு மருமகளா ஆக்க முடியாது .
சரி வேணாம் அவ இந்த வீட்டுக்கு மருமகளா வர வேணாம் .எனக்கு பொண்டாட்டியா நான் பாத்து வச்சு இருக்க வீட்ல என் கூட இருக்கட்டும் என்று சொல்லி விட்டு போனான் .அதன் பின் ரிஜிஸ்டர் மேறேஜ்க்கும் உமா வீட்டை விட்டு ஓடி வந்தாள் .இருவரும் ஒரு ரிஜிஸ்டர் ஆபிசில் சரியாக கல்யாணம் முடிக்கும் முன் விக்கியின் அப்பாவும் உமாவின் அப்பாவும் ஆளுக்கு இருபது ரவுடிகளை கூப்பிட்டு வந்து அவர்கள் இருவரையும் பிரித்து சென்றனர் .பத்து பேர் விக்கியை பிடித்து கொள்ள அவன் கண் முன்னே விக்கி விக்கி என்று கத்தி கொண்டே போன உமாவை அவள் அப்பா அடித்து இழுத்து சென்றார் .
அதை இப்போது நினைத்து விக்கி அழுதான் .அன்னைக்கு மட்டும் படத்துல வர ஹீரோ மாதிரி அந்த இருபது நாய்களையும் அடிச்சு போட்டு என் உமாவ கல்யாணம் பண்ணி இருந்தா என் வாழ்க்கையே மாறி இருக்கும் .இந்த சிகரட் தண்ணி பொண்ணுக இது எதுவும் இல்லாம நானும் மணி மாதிரி பொண்டாட்டிக்கு சேவகம் பண்ணிக்கிட்டு சந்தோசமா இருந்து இருப்பேன் .என்று நினைத்து கொண்டு பக்கத்தில் இருந்த கல்லில் எத்தினான் .தைரியம் இல்லாத விக்கி அவ உன்னையே எவளவு நம்புனா நாயே நீ அவள கை விட்டுட்ட என்று சொல்லி கொண்டே கோபத்தோடு மேலும் அந்த கல்லை ரெண்டு உதை உதைத்தான் .பின் அதே கல்லில் உக்காந்து அழுது கொண்டே
என்ன வாழ்க்கைடா இது இன்னைக்கு அவ சொன்ன மாதிரி ஒரு நல்ல வேலைல இருக்கேன் லட்சம் லட்சமா சம்பாதிக்கிறேன் நினச்சத வாங்குறேன் நினச்சத செய்யுறேன் பிடிச்ச பொண்ணு கூட படுக்குறேன் .எல்லாம் இருக்கு என்கிட்ட பணம் கார் வசதி பொண்ணுக இவளவு ஏன் எனக்குன்னு ஒரு குழந்தை கூட வர போகுது
ம்ம் என்ன இது திடிர்னு இடைல இது எப்படி வந்துச்சு என்று குழந்தை பற்றி தன்னை அறியாமல் தன் மனம் யோசித்த உடன் அவன் கண்களை துடைத்து விட்டு வேற ஒரு மூடுக்கு போனான் .சரி வீட்டுக்கு போவோம் பாவம் சுவாதி தனியா இருப்பா என்று காரை வேகமாக ஓட்டினான் .பின் காரை ஓட்டும் போதும் அழுது கொண்டே ஓட்டினான் .ஒருத்தனுக்கு முத லவ் மட்டும் சக்சஸ் ஆச்சுன்னா அவன விட அதிர்ஷ்ட சாலி எவனும் இல்ல ,எல்லாம் இந்த சாதியால வந்தது எந்த நாய் இந்த சாதி மதத்தலாம் கண்டுபிடிச்சது .என்று புலம்பி கொண்டே வண்டியை ஓட்டினான் .
பின் வீடு வந்து சேர்ந்தான் .வந்ததும் சுவாதி தூங்குவால் அதனால சத்தம் போடாம கதவ திறப்போம் என்று நினைத்து கொண்டு மெல்ல கதவை திறந்தான் .ஆனால் சுவாதி அங்கே ஹாலில் உக்காந்து டிவி பார்த்து கொண்டு இருந்தாள் .இவனை பார்த்தும் ஹாய் பார்டிலாம் முடிஞ்சுடுச்சா என்றாள் .ம்ம் முடிஞ்சுச்சு நீ என்ன இவளவு நேரம் முழிச்சு இருக்க தூக்கம் வரலையா என்றான் .ஹலோ சார் மணி பத்தரை தான் ஆகுது நீங்கதான் சீக்கிரம் வந்திடிங்க அப்படி என்ன பார்டிக்கு போன இவளவு சீக்கிரம் வந்துட்ட என்றாள் .
ஒ அது பார்டி இல்ல ஆபிஸ் ஸ்டாப் ஒருத்தர் வீட்டு விசேசம் அதான் சீக்கிரம் வந்துட்டேன் என்றான் .என்ன விசேசம் என்றாள் .ஒன்னும் இல்ல ஒருத்தரோட மகன் பிறந்த நாள் அவளவுதான் என்றான் .யே ஆபிஸ் ஸ்டாப்ன்னு சொன்னதுக்கு அப்புறம் தான் ஞாபகம் வருது மணியும் வள்ளியும் எப்படி இருக்காங்க என்றான் .ம்ம் நல்லா இருக்காங்க என்றான் .சரி நீ ஏன் இவளவு டல்லா இருக்க என்றாள் .
Story supper plz continue the story
Very nice story. Plz update the next part
Bro semmaya iruku story… Please continue… I came for sex story… U changed my thoughts… Fill ah eluthunga bro
Hello brother daily oru part podunga
Next story plz
Next part podunga bro
6 podu dude