சரி எங்க அப்பா அம்மாவ விடு நீ என்ன இன்னைக்கு உங்க அப்பா அம்மாவ நினச்சு அழுத ஏன் என்றான் .ஏன்னா ஏன்டா ஒரு பொண்ணுக்கு வாழ்க்கைல முக்கியமான கட்டம் இது அப்ப அவங்க அப்பா அம்மா கூட இல்லாட்டி வருத்தப்பட மாட்டலா என்றாள் வள்ளி ,எனக்கு எல்லாம் என்னோட அப்பா அம்மா கூட இருந்ததாதான் வருத்தப்படுவேன் என்றான் விக்கி .போடா எனக்கு எவளவு வருத்தமா போச்சு தெரியுமா என்றாள் வள்ளி .
சரி உங்க அப்பா அம்மாவுக்கு போன் போட்டு வர சொல்லிருக்க வேண்டியது தானே என்றான் விக்கி .நம்ம என்ன சென்னைலையே இருக்கோம் போன் பண்ண உடனே வரர்துக்கு என்றாள் வள்ளி .ட்ரைன் புக் பண்ணி இருக்க வேண்டியது தானே என்றான் விக்கி .அது இப்ப பெஸ்டிவல் சமயம்ல அதுனால டிக்கெட் 3 மாசத்துக்கு முன்னாடியே புக் பண்ணனுமா அது மட்டும் இல்லாம அவங்க வயசனாவங்க 3 நாள் ட்ரைன் ஜார்னி அவங்களுக்கு ஒத்து வராது என்றாள் வள்ளி .
சரி இந்த சுவாதி எங்கதாண்டா போனா என்றாள் வள்ளி .யே சும்மா சும்மா என் கிட்டயே ஏன் அந்த கேள்விய கேக்குறிங்க நான் என்ன அவள கில்லி விஜய் மாதிரி என் வீட்ட்லையா ஒளிச்சு வச்சு இருக்கேன் .நானே அவளால மூனு வருஷ நட்பு போயிடுச்சேன்னு அவ மேல கடுப்புல இருக்கேன் என்று விக்கி கடுப்போடு சொன்னான் .சரி சரி அவள பத்தி கேக்கல நீ கடுப்பாகாத என்றாள் .சரி அத விடு எனக்கு பயன் தான் பிறக்கும்ன்னு நான் சொல்றேன் இவரு பொண்ணுதான் பிறக்கும்னு சொல்றாரு நீ என்ன சொல்ற என்றாள் வள்ளி .
எந்த குழந்தை பிறந்தா என்ன சந்தோசமா இருக்க வேண்டியது தானே என்றான் விக்கி ,அதுக்கு இல்லடா பயன் பிறந்தா பேர் வைக்கிற உரிமை எனக்கு இருக்கு பொண்ணு பிறந்தா பேர் வைக்க போறது அவரு என்றாள் வள்ளி .சரி நீ என்ன பேர் வைக்க போற அவன் என்ன பேர் வைக்க போறான் என்றான் விக்கி .நான் எங்க அப்பா பேர் முருகேசென்ன்னு வைப்பேன் .ஆனா அவரு செல்வி பிரியான்னு அவங்க அம்மா பேர் வைப்பாராம் .அவங்க அம்மா பேரு ரொம்ப மார்டனா இருக்கு என்றான் விக்கி .
செல்விங்கிறது மட்டும் தான் அவங்க அம்மா பேரு ப்ரியாங்கிறது அவரோட முத லவ்வர் பேராம் ரெண்டையும் சேர்த்து வைக்க போறாராம் பாத்தியா எவளவு கொழுப்புன்னு என்றாள் .ஏண்டா மணி என்றான் விக்கி .டேய் அது ஒன்னும் இல்லடா என்று மழுப்பினான் .டேய் அவர விடு நான் ஏன் எனக்கு ஆம்பிள பிள்ள வேணும்னு நினைக்கிறேன் தெரியுமா என்றாள் .ஏன் நீயும் உன் முத லவ்வர் பேர வைக்க போறியா என்று கிண்டல் அடித்தான் .
டேய் அதுக்கு இல்லடா எனக்கு ஆம்பிள பிள்ள பொறந்தா அத உன் பொண்ணுக்கு கல்யாணம் பண்ணி வச்சு நம்ம வருங்காலத்துல சொந்த காரங்களா ஆகிர்லாம் என்றாள் .அங்கிட்டு போ நீ எப்பயுமே நட்க்காததையே பேசுவ என்றான் விக்கி .ஏண்டா நீ பொண்ணு கொடுக்க மாட்டியா என்றாள் வள்ளி .ஆமா இப்பதான் என் பொண்ணு வீட்ல 25 வயசாகி இருக்கு உன் பயணக்கு பொண்ணு கேட்டு வந்து இருக்க பாரு ஏன் இப்படி என்றான் .
Story supper plz continue the story
Very nice story. Plz update the next part
Bro semmaya iruku story… Please continue… I came for sex story… U changed my thoughts… Fill ah eluthunga bro
Hello brother daily oru part podunga
Next story plz
Next part podunga bro
6 podu dude