என்னது கிப்ட் மாங்காவா என்றான் .ஆமா வளைகாப்புக்கு வேற என்ன கிப்ட் கொடுக்குறுதாம் என்றான் விக்கி .டேய் வளைகாப்புக்கு எல்லாம் கிப்ட் தர மாட்டாங்க அப்படியே நீ மாங்கா கொடுக்கணும்னு ஆசபட்டாலும் வேணாம் ஏற்கனவே இங்க நிறைய மாங்கா இருக்கு என்றான் .சரிடா மாங்கா எங்க வாங்குன என்றான் விக்கி .நான்தான் வேணாம்னு சொல்லிட்டேன்ல அப்புறம் ஏண்டா என்றான் .டேய் வள்ளிக்கு இல்லடா எனக்கு சாப்பிடனும் போல இருக்கு என்றான் விக்கி .உனக்கு எதுக்குடா மாங்கா சாப்பிடனும் போல இருக்கு என்று கேட்டான் .
அது வந்து என்று விக்கி என்ன சொல்வது புரியமால் இருக்கும் போது அங்கே மணியிடம் இருந்து வள்ளி போனை வாங்கி என்னது உனக்கு மாங்கா சாப்பிடனும் போல இருக்கா என்றாள் .ஏன் புருசனும் பொண்டாட்டியும் ஒரே கேளிவிய மாத்தி மாத்தி கேக்குதுக என்று நினைத்து கொண்டு சும்மாதான் சாப்பிடனும் போல இருக்கு என்றான் .ம்ம்ம் இந்நேரம் டேவிட் மாதிரி நீ கல்யாணம் பண்ணி இருந்தேன்னா எண்ணி 8 மாசத்துல உன் பொண்டாட்டி மாங்கா தின்னு கிட்டு இருப்பா இப்ப என்னனா நீ மாங்கா திங்கனும்கிற என்று சொல்லி சிரித்தாள் .பின்னாடி மணியும் சிரித்தான் .
சரி இதுக கிட்ட நார்மலா பேசுனா காரியம் நடக்காது ஒரு ஆக்டிங்க போடுவோம் என்று நினைத்து கொண்டு அழுவது போல நடித்தான் .அதை கேட்ட வள்ளி சிரிப்பதை நிறுத்தி விட்டு டேய் டேய் எதுக்குடா அழுகுர என்றாள் ,இன்னைக்கு காலைல என் அக்கா வலைகாப்புக்கே போகலன்னு நான் உன் கிட்ட சொன்னேளே என்றான் .ஆமா என்றாள் ,எனக்கு எங்க அக்கா ஞாபகம் வந்துருச்சு எங்க அக்கா இப்படிதான் உன்னையே மாதிரி மாசமா இருக்கும் போது மாங்கா கேட்டு நான் வாங்கி தரல அத நினச்சு எனக்கு ரொம்ப பீலிங்கா இருக்கு அதான் இப்ப அவ ஞாபகமா மாங்கா சாப்பிடனும் போல இருக்கு என்று அழுதான் .
சரி சரி அழுத ஒரு நிமிஷம் ஏங்க எனக்கு மாங்கா எங்க வாங்குநிங்க என்றாள் வள்ளி .பின் மணி வாங்கி அவனுக்கு மாங்கா இருக்கும் கடையை சொன்னான் .அப்பா அழுத பொம்பிலக மனசு இறங்கிறலாக இப்பதான் தெரியுது டிவில ஏன் அழுகாச்சி சிரியலா எடுக்குரானுகன்னு என்று விக்கி நினைத்து கொண்டு சுவாதியை பார்த்து வா உன் மாங்கா கடை கிடைச்சு இருச்சு என்றான் .
பின் இருவரும் மணி சொன்ன கடைக்கு போனார்கள் அங்கு ஒரு வயதான பாட்டி எல்லா காய் கறிகளையும் எடுத்து வைத்து கடையை பூட்ட தயாராகி கொண்டு இருந்தது .இவன் போயி மாங்கா கேட்கவும் அது முடியாது முடியாது நேரம் ஆச்சு மாங்காலாம் இல்ல என்றது .உடனே அவன் கொஞ்ச தூரம் தள்ளி நின்ற சுவாதியை காண்பித்து என் பொண்டாட்டி மாசமா இருக்கா அவ மாங்கா சாப்பிட்டே ஆகணும் போல இருக்கு என்றதும் அந்த பாட்டி சிரித்து கொண்டே உன் பொண்டாட்டிய கிட்ட வர சொல்லு பாக்கணும் என்றது .
உடனே அவன் சுவாதியை கூப்பிட்டான் .அவள் கிட்ட வந்ததும் அந்த பாட்டி அவள் முகத்தை செல்லமாக தடவி என்னமோ சொல்ல சுவாதி டேய் இந்த பாட்டி என்னடா சொல்லுது ஹிந்தி மாறியே இல்லையே என்றாள் .அது பேசுறது மராத்தி நீ எத்தன மாசம்னு கேக்குது என்று விக்கி சொல்லவும் அவள் சிரித்து கொண்டே அஞ்சு விரல்களை காண்பித்தாள் .உடனே பாட்டி அவளை மீண்டும் செல்லமாக கொஞ்சி கொண்டே சொன்னது .இப்ப என்னடா சொல்லுது என்றாள் .
ம்ம் நீ நல்லபடியா பிள்ள பெருவியாம் என்றான் .பின் அந்த பாட்டி உள்ளே சென்று ஒரு அஞ்ச ஆறு மாங்காய்கலை கொண்டு வந்தது .அது கொண்டு வந்த உடனே சுவாதி பாட்டியிடம் இருந்து மாங்காய் ஒன்றை வேகமாக புடிங்கி கடித்து தின்ன ஆரம்பித்தாள் .நீங்க ஒன்னும் தப்பா எடுத்துகாதிங்க அவ அப்படித்தான் என்றான் .நான் ஒன்னும் தப்பா எடுத்துக்கல நான் 7 குழந்தை பெத்தவ எனக்கு தெரியாதா அவளோட உணர்வு என்றது பாட்டி .பின் பாட்டியும் விக்கியும் பேசி கொண்டே இருந்தனர் .
Story supper plz continue the story
Very nice story. Plz update the next part
Bro semmaya iruku story… Please continue… I came for sex story… U changed my thoughts… Fill ah eluthunga bro
Hello brother daily oru part podunga
Next story plz
Next part podunga bro
6 podu dude