ஆம்பிள பிள்ளக மட்டும் தான் வயித்துக்குள இருக்கும் போதும் நம்மள கஷ்ட படுத்துவாங்கே .வயித்த விட்டு வெளிய வந்ததுக்கு அப்புறமும் கஷ்ட படுத்துவாங்கே இந்நேரம் உன் வயித்துக்குள இருக்கிறத பொண்ணுன்னா இந்நேரம் நீ ரொம்ப நார்மலா இருப்ப .என்று சொல்லி கொண்டு இருக்கும் போதே சுவாதி வயிற்ரை பிடித்தாள் .அதை பார்த்து என்னடி ஆச்சு எதுவும் வலிக்குதா என்றாள் அஞ்சலி .
இல்ல லைட்டா குழந்தை ஒதைக்குது என்றாள் ,பாத்தியா வெளிய அவன பாத்தி பேசுனது அவனுக்கு பிடிக்கல அதான் உன்னையே உதைக்கிறான் என்றாள் அஞ்சலி .எனக்கு எந்த குழந்தைனாலும் ஓகே தான் என்றாள் சுவாதி .பொறுடி உன் குழந்தை கிட்டயே கேட்டு சொல்றேன் என்று சொல்லி கொண்டு அஞ்சலி சுவாதி அருகே வந்து அவள் வயிற்றின் மீது கை வைத்து டேய் நான் பெரியம்மா பேசுறேன் உள்ள இருக்கிறது பொறுக்கி பயதானா என்று கேட்டாள் .
அக்கா ரொம்ப உதைக்குது அக்கா என்றாள் சுவாதி .நான் சொல்லல நீயும் கேளு பதில் சொல்வான் உன் மகன் என்று சொல்லி விட்டு அஞ்சலி கையை எடுத்தாள் சுவாதி கை வைத்து கேட்டாள் நான் அம்மா பேசுறேன் உள்ள இருக்கிறது குட்டி பயலா என்றாள் .அக்கா மெல்ல உதைக்குது அக்கா என்றாள் .பாத்தியா பையன் இப்பவே உன் மேலா பாசமா இருக்க ஆரம்பிச்சுட்டான் நான் கேக்கும் போது ஸ்பீட ஒதைச்சான் .நீ கேட்டா மெல்ல உதைக்கிறான் என்றாள் .
உடனே சுவாதி வயற்றில் கை வைத்து கொண்டு ஆமா அக்கா என்று சொல்லி கொண்டே மெல்ல கண்ணீர் விட்டாள் .ஒ செல்லம் என் அழுகுற ஆம்பிள பிள்ளன்னலா அழுகுரியா என்றாள் அஞ்சலி .இல்லாக்கா இத்தன நாளும் குழந்தை உதைக்கிரப்ப அவளவா எதுவும் தோணாது .இன்னைக்கு ஏதோ இனம் புரியாத ஒரு சந்தோசம் அப்புறம் பயம் ரெண்டும் கலந்து தான் அழுகுறேன் என்றாள்.அவளை தன் தோளில் சாய்த்து தட்டி கொடுத்து கொண்டே சரி அழாத நான் பாத்துகிறேன் உனக்கு எல்லாம் .
நீ மட்டும் சாப்பிட்டு நல்லா தைரியாமா இரு என்றாள் அஞ்சலி .சரி அக்கா என்று கண்களை துடைத்து விட்டு நார்மல் ஆனாள் .சரி எங்க இவனோட அப்பன் அவன் பேரு என்ன பக்கியா மக்கியா
அக்கா விக்கி விக்னேஷ் என்று பல்லை கடித்து கொண்டே சொன்னாள் சுவாதி .அதான் ஏங்க அவன என்றாள் ,அவன் ஏதோ பார்ட்டிக்கு போயிருக்கான் என்றாள் சுவாதி .அது இருக்கட்டும் ரெண்டு பேருக்கும் இப்ப ஏதும் ஒரு பீலிங் அண்டர்ஷ்டண்டிங் எதுவும் வந்து இருக்கா என்று கேட்டாள் அஞ்சலி .ஒரு பிலிங்கும் வரல .வருவும் வராது என்றாள் சுவாதி .
ஏண்டி இப்பதான் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி குழந்தைக்கு அப்பன்னு சொன்ன உடன் அவன் பேர சொன்ன அப்புறம் என்ன என்றாள் அஞ்சலி .ஆமா குழந்தைக்கு அப்பன் அவன் தான் அதான் உண்மை நாளைக்கு என் குழந்தை இன்சியல் கூட அவனோட பேர் தான் .ஆனா அவன் மேல எனக்கு எந்த பிளிங்கும் இல்ல .அவன் என் குழந்தைக்கு அப்பன் .ஆனா எனக்கு அவன் ஒன்னும் இல்ல …
Story supper plz continue the story
Very nice story. Plz update the next part
Bro semmaya iruku story… Please continue… I came for sex story… U changed my thoughts… Fill ah eluthunga bro
Hello brother daily oru part podunga
Next story plz
Next part podunga bro
6 podu dude