ஒரு எதார்த்த வாழ்வைப் பிரதிபலிக்கும் கதை 8 47

” ஆமாண்ணா..!”
”அப்ப.. உன் லவ்வு..?”
”அ.. அது.. பிரேக் அப் ஆகிருச்சுண்ணா…!”
”என்ன சொல்ற.. நித்தி..?”
” ஆமாண்ணா..!! எங்களூக்குள்ள ஒத்து வல்ல.! அதனால டீசண்ட்டா.. பேசி பிரேக் அப் பண்ணிட்டோம்..!!”
”இது எப்ப…?”
” உங்க மேரேக்கு.. டூ வீக்.. முன்னாடி..”
”ஓ..! அதான் மேரேஜப்ப.. ஒருமாதிரி.. டல்லா.. இருந்தியா…?”
”ம்..ம்..!!”
”ஏன்.. நித்தி..? நல்லாத்தான போய்ட்டிருந்துச்சு.. உங்க காதல்..?”
”அ.. அண்ணா… இப்ப நீங்க எங்க இருக்கீங்க…?”
”பார்ல…”
” யாராரு…?”
” நானும்.. உன் புருஷனும்..!!”
”என் புருஷனா..?”
”ஆ.! இவ்வளவு தூரம் வந்துட்டப்பறம்.. வேற என்ன சொல்றது..?”
” சாரிண்ணா..!! அவன்கிட்ட இதெல்லாம் எதுவும் சொல்லிடாதிங்கண்ணா.. ப்ளீஸ்..”
”ஏய்.. அப்படி சொல்லிருவனா..?”
”இல்ல.. உங்க மேல எனக்கு நம்பிக்கை இருக்கு..! பட் இப்ப பார்ல இருக்கீங்களே… அது மேலதான் எனக்கு நம்பிக்கை இல்லே..!”
”பயப்படாத.. நித்தி..! ஆமா.. உன் லவ் எப்படி.. இப்படி ஆச்சு..?”
”அ..அது… சொன்னா.. நெறைய சொல்லனும்ண்ணா..”
”இல்ல… குறிப்பா… ஏதாவது..?”
”ம்..ம்..! என்னை சந்தேகப்பட்டுட்டான்..!! அத என்னால ஏத்துக்க முடியல..!! அதான்..!!”
”ஓ…!!”
” ஆனா… அண்ணா.. இதுல சொன்னா நெறைய சொல்லனும்..! அத நேர்ல வந்து சொல்றேன்.. ஓகேவா..? சரி.. குணா என்ன சொன்னான்..?”
”இதான் சொன்னான்..! அப்றம் எனக்கு ஒரு டவுட்டு நித்தி..?”
”ம்.ம்..! கேளுங்ணா..?”
” உங்க ரெண்டு பேருக்கும்தான்.. கேரக்டர் சூட்டாகாதே… எப்படி..?”
”பரவால்லண்ணா..! அட்ஜஸ்ட் பண்ணிட்டு போய்க்கலாம்..! அவனோட ப்ளஸ்.. மைனஸ்லாம்.. எனக்கு நல்லாவே தெரியும்..! அதனால.. அதிக பிரச்சினை வராது..!!” என்று அவள் சொல்லிக் கொண்டிருக்கும் போதே… குணா பாத்ரூம் வந்துவிட்டான்.

அவனைப் பார்த்துச் சிரித்து விட்டு.. போன் பேசியவாறே வெளியே வந்தேன்.
”சரி..நித்தி.. குணா.. வந்துட்டான்..! நாம அப்றம் பேசிக்கலாம்..! ஃபிரியா இருந்தா நாளைக்கு வர்றேன்..!” என்றேன்.
”சரிண்ணா..! அவன்ட்ட எதும் சொல்லிடாதீங்க..! பை..!” என்றாள்.
” பை..!!” என்று போனை கட் பண்ணினேன்.
நான் டேபிளில் போய் உட்கார்ந்தேன். குணாவும் வந்தான். மறுபடி இரண்டு பீர் சொன்னான்.
”போதுண்டா..” என்றேன்.
” பரவால்ல குடிடா..!”
”அதுக்கில்ல..! இப்ப நாம முன்ன மாதிரியா..? உன் தங்கச்சி ஏதாவது கேட்டான்னா.. உன்னைத்தான் சொல்லப் போறேன். .” என்றேன்.
”பரவால்ல சொல்லிக்கடா..! ஆல்ரெடி அதெல்லாம் அவளுக்கும் தெரியும்..”
மறுபடி இரண்டு பீர் வந்தது. நான் சிப்ப… அவன் கடகடவென குடித்தான்.
”என்னடா.. நித்யா பத்தி எதுமே சொல்லல..?” என்றான்.
”எனக்கு ஒரேயொரு டவுட்டுதான்..” என்றேன்.
” என்னடா…?”
” உங்க ரெண்டு பேருக்கும் ஒத்துப்போகுமா.? கேரக்டர்ல..?”
” ஒத்துப்போகாம என்னடா…?”

3 Comments

  1. Next part போடுங்க

Comments are closed.