ஒரு எதார்த்த வாழ்வைப் பிரதிபலிக்கும் கதை 8 47

”உக்காரு…” என்றேன்.
”சாப்பிடறீங்களா..?” என்று தயக்கத்துடன் உட்கார்ந்தவாறு கேட்டாய்.
”இப்பத்தான்டி சாப்பிட்டு வர்றேன்..! நீ சாப்பிட்டியா..?”
” ம்… சாப்பிட்டங்க..!!”
”என்ன செஞ்ச…?”
”கோழிக்கறிங்க…”
” ஓ..!!”

அதேநேரம்… தீபா வந்து விட்டாள். என்னைப் பார்த்ததும்..
”ஐ.. வந்துட்டிங்களா…?” என்றாள்.
அவள் கையில் கூல்ட்ரிங்க்ஸ பாட்டில் இருந்தது. கூடவே கொஞ்சம் கொறிக்கும் ஐட்டங்கள்..!!
”என்னது தண்ணியடிக்கப் போறியா..?” என்று அவளைக் கேட்டேன்.
”ஆமா…” என்றாள்.
” எனக்கு..?”
” இந்தாங்க…” என்று கூல்ட்ரிங்க்ஸ் பாட்டிலை என்னிடம் கொடுத்தாள்.
வாங்கினேன் .
” சைடிஸ்ட் ஓகே.. சரக்கு…?”
”இதான் சரக்கு…” என்று சிரித்தாள்.
மூடியைத் திறந்து கொஞ்சமாகக் குடித்துவிட்டு அவளிடமே கொடுத்தேன்.
”ம்..ம்..! எனக்கு இதெல்லாம் புடிக்காது..! ”
”ஹே… வேற என்ன புடிக்கும்..?”
”நல்ல… ஹாட்டா… ஒரு ரவுண்டு அடிச்சாலும்….”
”அதுசரி..!!” என்று சிரித்தாள். அவள் புதுசுடிதார் போட்டிருந்தாள்.
”சுடி புதுசா..?”என்று கேட்டேன்.
”ம்.ம்.! நல்லாருக்கா…?”
” சுடி நல்லாருக்கு… ஆனா…”
”ஆனா….”
”அதப்போட்றுக்கற ஆளுதான்.. நல்லாவே இல்ல…” என்றேன்.
”ஹூம்…” என்றாள் ”சொல்லுவீங்க…! ஏன் சொல்ல மாட்டிங்க..!!”
” சரி… சும்மா படபடனு பொரியாம… உக்காரு வா..” என்க.. அவள் உன்னைப் பார்த்து..
”சாப்பிட போட்டுக்குடுடி..!” என்றாள்.
”ஏய்..! நான் வர்றப்பதான் சாப்பிட்டு வந்தேன்..! இப்ப ஒன்னும் வேண்டாம்.. பேசாம உக்காரு..” என்றேன்.
எனக்கு எதிராக உட்கார்ந்தாள்.
”உங்க வீட்ல சொல்லிட்டா வந்தீங்க…?”
”என்னான்னு…?”
”ம்.. இங்க வர்றேனு..?”
” ஏய்.. கருவாச்சி… இதெல்லாம் சொல்லிட்டு வர முடியுமா..?”
” அப்றம் என்ன சொல்லிட்டு வந்தீங்க..?”
” ஸ்டேண்டுக்கு போறதாத்தான் சொல்லிட்டு வீட்லருந்து வந்தேன்..”
சிறிது நேரம் பொதுவாகப் பேசிக் கொண்டிருந்து விட்டு…
” வெளில போலாமே…” என்று உன்னைப் பார்த்தேன்.
”வெளிய எங்கீங்க…?” என்று கேட்டாய்.
”ஆத்துக்கு…”
” ம்..போலாங்க…” என்றாய்…!!!!

சலசலவென.. நுரைத்துப் பொங்க.. சுழித்து.. வளைந்து.. நெளிந்து ஓடிக் கொண்டிருந்தது… பவானி ஆற்று நீர்..!! அதன் கரையோரத்தில்… நிறைய வளர்ந்து…படர்ந்திருந்த.. கோரைப் புல்லின் மேல்…நான் கால் நீட்டி..உட்கார்ந்திருந்தேன்..!!
என் பக்கத்தில்.. என் தோளை உரசியவாறு நீ உட்கார்ந்திருந்தாய். உன் உடல் என் நெருக்கத்தை விரும்பிக் கொண்டிருக்கிறது என்பதை உணர்ந்தேன். உன்னிடமிருந்து சற்று தள்ளி.. சிறிது இடைவெளி விட்டு உட்கார்ந்திருந்தாள் தீபமலர்..!!
என்னிடம் உன்னை விட அதிகம் பேசியவள் தீபாதான். .! வாய் ஓயாது.. நிறையப் பேசினாள்..!!
திடுமென.. ” ஆமா.. நானேதான்… ரொம்ப நேரமா பேசிட்டிருக்கேன்..! நீங்க ரெண்டு பேரும்.. பேச மாட்டிங்களா..?” என்று கேட்டாள் தீபா.
நான் ஒரு புன்னகையுடன் சொன்னேன்.
”நாங்க… எங்க பேசறது..? நீதான் ஓட்டப் பானைல.. பூந்த ஈ மாதிரி… தொணதொணனு பேசிட்டே இருக்கியே..”
”ஓ..! அப்ப நான் பேசறது… ஓட்டப் பானைல ஈ பூந்த மாதிரி இருக்கா..?” என்று முறைத்தாள்.
”ஆமா…”
நீ குறுஞ் சிரிப்புச் சிரித்தாய்.

3 Comments

  1. Next part போடுங்க

Comments are closed.