ஒரு எதார்த்த வாழ்வைப் பிரதிபலிக்கும் கதை 8 47

”பேசாத…!!”என்றேன் அவளை முறைத்து.
”யாரு.. நானா..?”
” பின்ன.. நானா..?”என்க.. என் கண்களில் தெரிந்த கோபம் கண்டு.. உடனே தணிந்து போனாள்.
சட்டென வந்து என் மடியில் உட்கார்ந்து.. என் தாடையைப் பிடித்துக் கொண்டு கேட்டாள்.
”என்மேல… ஏன்ப்பா கோபப்படறீங்க…?”
உடனே நான் கண்களை மூடிக் கொண்டேன்..! என் மனதில் என்னென்னவோ.. உணர்ச்சிகளின் தாக்கங்கள்.. குமுறிக்கொண்டு வந்தன..!! இது.. பல நாள் வெறுப்பு…!!

நான் கோமாயிருந்தேன். என் கோபத்தை தணிக்க முயன்று கொண்டிந்தாள் என் மனைவி. என் மடியில் உட்கார்ந்து என் முகத்தை தன் மார்பில் சாய்த்தபடி மெதுவாக என் தலை முடிக்குள் விரல்விட்டுக் கோதினாள்.!
”ஏன்ப்பா..?”
”ம்..ம்..?” என்று முனகினேன்.
”நான் பண்ணது தப்பா..?”
”எனக்கு புடிக்கல..! அவனோட நீ பேசினதே தப்பு..”
”என்னப்பா.. இது..? வீட்டுக்கு வந்தவைர.. வெளில போங்கன்னா சொல்ல முடியும..? என்னருந்தாலும்.. உங்கள பெத்தவரு..! என் மாமனாரு..!!”
”ஆ..!! பெரிய மாமனாரு.. மயிராண்டி..!!” சிடுசிடுத்தேன்.
”வேணாம்பா..! அப்படியெல்லாம் பேசாதிங்க..!!” என்றாள்.
”அப்ப.. நீ உன் வாய மூடிட்டு பேசாம இரு..!!”
”ம்ம்..! பொல்லாத கோபம்..?”
”ஏய்.. உனக்கு.. அது சொன்னா.. புரியாது.. நிலா..”
”ம்ம்..ஓகே…! ஸாரி..!”என்றாள்.
மூடிய கண்களைத் திறந்து அவளைப் பார்த்தேன். அவள் முகத்திலும் லேசான கோபம் தெரிந்தது.
”நான் ஒன்னும் பேசல..! வாய முடிட்டேன்..!!” என்றாள்.
”ஏய்.. நீ ஏன் நிலா..! ஒரு பக்கம் என்னை டென்ஷன் பண்ற.?” என்று கொஞ்சம் வருந்தும் குரலில் சொன்னேன்.
”அதப்பத்தி நான் பேசல..! வந்தவைர.. என்ன பண்றதுனு தெரியாம.. காபி போட்டு தந்துட்டேன்.. அதுக்கு.. ஸாரி..!”
”காபி குடுத்ததுல.. ஒன்னும் நட்டமில்ல..! விட்டுத்தொலை..!!”
” ஹும்..” என்று விட்டு எழுந்தாள்.
சட்டென அவள் கையைப் பிடித்து.. இழுத்து மறுபடி என் மடிமேல் உட்கார வைத்து.. அணைத்துக் கொண்டேன்..!
”இப்ப எதுக்கு..நீ இப்படி.. இது பண்ணிக்கற..?”
அவள் எதுவும் பேசவில்லை. உம்மென்று உட்கார்ந்து கொண்டிருந்தாள். அவள் முகத்தைத் திருப்பி.. அவளது உதட்டில் முத்தமிட்டேன்.
”ஏய்.. பொண்டாட்டி..”
” ம்ம்..”
” கொஞ்சம் சிரி..! பாக்க சகிக்கல..!!”என்று.. அவளை இருக்கிக் கொண்டேன்.!
”ஈ.. ஈ..! போதுமா..?” என்று பல்லைக் காட்டினாள்.
”இதுக்கு நீ.. மூடிட்டே இருந்துருக்கலாம்… வாய..!!” என்றேன்.
சட்டென்று சிரித்தாள்
”கோபம்… போயாச்சா..?”
” எக்கச்சக்கமா.. இருக்கு..! அதக் கெளறாத..!”
” ம்ம்..! ஓகே..!!” என்று என்னைத் தழுவிக் கொண்டாள். என் உதட்டில் முத்தம் கொடுத்து.. ”லவ் யூ.. புருஷா..” என்றாள்.
”லவ் யூ..!!” என்று விட்டு அவள் உதட்டைக் கவ்வி உறிஞ்சினேன்.
அதை மென்மையாக கடித்துச் சுவைத்தேன். சிறிது நேர.. சில்மிசக் கொஞ்சல்களுக்குப் பின்.. நான் எழுந்து… கண்ணாடி முன் நின்று தலை வாரிவிட்டு ஜன்னல் வழியாகப் பார்க்க… மேகலா தென்பட்டாள்.!
வாசலில் நின்று தலைவாரிக் கொண்டிருந்தாள்.! என்னை அங்கிருந்து பார்த்தாள்.
நான் சிரிக்க.. அவளும் சிரித்தாள்..! கொஞ்சமாக விலகியிருந்த முந்தானையை சரியாகப் போட்டுக் கொண்டாள். நான் சிரிப்பதைப் பார்த்து விட்டு என் மனைவியும் ஜன்னல் அருகே வந்து நின்று மேகலாவுடன் பேசினாள்.

”சரி.. நிலா.! நான் கெளம்பறேன். !” என்று என் மனைவியிடம் சொல்லிக் கொண்டு கிளம்பினேன்..!!

3 Comments

  1. Next part போடுங்க

Comments are closed.