ஒரு எதார்த்த வாழ்வைப் பிரதிபலிக்கும் கதை 8 47

பேல் பூரி சாப்பிட்டு விட்டு.. மூக்கை உறிஞ்சியவாறு சொன்னாள்.
”காளான்..”
” ரொம்ப பசியா இருந்தா.. வேற ஏதாவது சாப்பிட்டுக்கடி..”
”ம்கூம்..!! வேறெல்லாம் வேண்டாம்..!! ஆமா என்ன.. சும்மா.. சும்மா டீ போடறீங்க..?”
” என். மச்சினிய… நான் எப்படி வேனா கூப்பிடுவேன்..!!” என்று டேபிளுக்கடியில் காலை நீட்டி.. அவள் காலை உரசினேன்.
”இப்படியுமா..?” என்று காலைக் குனிந்து பார்த்தாள்.
அவளுக்கு காளான் ஆர்டர் செய்தேன். காளான் வந்தது.
”அப்றம்.. எந்த செக்ஷன்ல.. உனக்கு வேலை..?” என்று கேட்டேன்.
”ரெடிமேடு.. செக்ஷன்..”
”புடிச்சிதா..?”
” ரொம்ப.. புடிச்சிது..! பெருசா எந்த வேலையும் இல்ல..! சுபானு ஒரு அக்கா இருக்காங்க… பயங்கர ரௌஸ் பண்றாங்க..! எல்லாருகிட்டயும் நெக்கலாதான் பேசுவாங்க..! வாயத்தொரந்தா..ஒரே டபுள் மீனிங்தான்..!!” என்றாள்.
”உங்க செக்ஷன்ல மொத்தம் எத்தனை பேரு..?”
”என்னோட சேத்தி.. ஆறு பேரு..! ஜாலியா சிரிச்சுப் பேசிட்டே வேலை செஞ்சிட்டிருப்போம்..!! நோம்பி டைம் வந்தாத்தான் வேலை பெண்டு கழன்டுரும்னு சொன்னாங்க..!!” என்றாள்.
” கூட இருக்கற எல்லாரு கூடயும்.. நல்லா சிரிச்சுப் பேசி பழகு..! அப்பதான்.. எப்பவுமே ஜாலியா இருக்கும்..!!”
” ம்..ம்.! எல்லாருமே அப்படித்தான் பழகறாங்க..! பேசாம செங்காவையும் என்கூடவே கூப்டுக்கட்டுமா..?”
”ஏய்..! அதெல்லாம் வேண்டாம்..!!”
”ஏங்க..?”
”அவள அங்கயே விட்று..! அவளுக்கு அந்த கடைதான் கரெக்ட்..! எந்த தொந்தரவும் இல்லாம.. அவ அங்கயே செட்டாகிட்டா..! அவளா நிக்கறவரை… நீ எதுவும் சொல்லாத.. விட்று..”
”ரொமப.. அக்கறை..” என்று கிண்டலாகச் சிரித்தாள்.
அவள் சாப்பிட்டு முடித்து.. மூக்கை உறிஞ்சி விட்டு.. தண்ணீர் குடித்தாள்.
”இன்னும் வேனும்னா சொல்லட்டுமா..?” என கேட்டேன்.
”ஐயோ..! போதும்..! தேங்க்ஸ்… மச்சான். .!!”
” தேங்க்ஸ்லாம் எனக்கு வேண்டாம்..!!”
”அதுக்காக கிஸ்ஸெல்லாம் தர முடியாது..” என்று துப்பட்டாவால் வாயைத் துடைத்துக் கொண்டு சிரித்தாள்.
”ஏன்டி கருவாச்சி..?”
”பாவம் செங்கா…” என்றாள்.
உனக்கும் பார்சல் வாங்கிக் கொண்டு கிளம்பினோம்.! காரில் உட்கார்ந்து.. தீபாவைப் பார்த்தேன்.
”வேற ஏதாவது.. வேனுமா..?”
”ஐயோ.. ஒன்னும் வேண்டாங்க… போலாம்..”
”அப்றம்… கிஸ்ஸூ..?” என்று சீண்டினேன்.
உதட்டை மூடிக்கொண்டு சிரித்தாள்.
”ம்கூம்..!”
”இப்படியே.. எங்காவது.. போலாமா..?”
பதறிவிட்டாள் . ”ஐயோ… வேண்டாங்க ப்ளீஸ்..! போலாம்.! நான் வேனா.. மொத மாச சம்பளம் வாங்கி.. பூரா பணத்தையும் உங்ககிட்டயே தந்துடறேன்..! நீங்களே வெச்சுக்குங்க..! ஆனாக்கா இந்த கிஸ் மட்டும் கேக்காதிங்க..! நான் ஒத்துக்க மாட்டேன்..!!”
” ஏய்.. ஏன்டி… இதுக்குப் போய்.. இப்படி பயந்து சாகற..?”
” அய்ய்யோ..!! உங்க வெளையாட்டெல்லாம் செங்காவோட நிறுத்திக்குங்க..! என்கிட்ட வெளையாண்டிங்கன்னா.. அப்றம் என் கழுத்துல நீங்க தாலி கட்ட வேண்டியது வந்துரும் பாத்துக்கோங்க..!!” என்றாள்.

காரை உசுப்பினேன் ”தாலிதான.. கட்டிட்டா போச்சு..”
”ஆ..! கட்டுவீங்க… கட்டுவீங்க..!! சும்மா விட்றுவாங்களா.. உங்கள..?”
”என்னை யாருடி கேக்கறது..?”
மெதுவாக காரைத் திருப்பி.. சாலையில் கலந்தேன்.
”யாரு கேக்கறதா..? கல்யாணம் பண்ணி வீட்ல இருக்காங்க இல்ல..? அவங்க கேப்பாங்க..!! கேக்கறது மட்டுமா..?”
”ம்…வேற என்ன பண்ணுவாங்க…?”

3 Comments

  1. Next part போடுங்க

Comments are closed.