ஒரு எதார்த்த வாழ்வைப் பிரதிபலிக்கும் கதை 8 47

” அவ்வளவுதான்..!!”
”எவ்வளவுதான்..?”
” பேசாம..ஓட்டுங்க…!!”
” அப்ப கிஸ் தரமாட்ட…?”
ரோட்டைப் பார்த்துக் கொண்டு தலையை ஆட்டினாள்.
”ம்கூம். .”
அவளோடு வம்பிழுத்துக் கொண்டே.. உன்னிடம் வந்தபோது… நீ புறப்பட்டுத் தயாராக நின்றிருந்தாய்.
”உங்க முதலாளி வந்துட்டாரா..?” என்று கேட்டேன்.
” வந்துட்டாருங்க…” என்றாய்.
அவரை எட்டிப் பார்த்துக் கையை ஆட்டிவிட்டு.. உன்னிடம் கேட்டேன்.
”முடிஞ்சுதா..?”
” ஆமாங்க. ..”
” சரி.. வா.. உங்க ரெண்டு பேரையும் பஸ் ஸ்டாண்டுல கொண்டு போய்விடறேன்..” என்று கூப்பிட…
”பரவால்லீங்க.. நாங்க போய்க்கறோம்..”என்றாய்.
” ஏய்.. வாடி..”என்றதும் சிரித்துக் கொண்டே வந்து காரில் ஏறினாய்.
உங்கள் இருவரையும் காரில் அழைத்துப் போய் பஸ் ஸ்டாண்டில் விட்டு.. விட்டு நான் விடைபெற்றுக் கிளம்பினேன்…!!

அடுத்த நாள் காலை..!! நான் குளித்து முடித்து.. டிபன் சாப்பிட்டு.. உடைமாற்றி.. புறப்பட்டுக் கொண்டிருந்த போது கதவு தட்டப்பட்டது..!
என் மனைவி போய் கதவைத் திறந்தாள்.
” வாங்க…” என்றாள்.
நான் எட்டிப் பார்த்தேன். என் கண்களுக்கு யாரும் தென்படவில்லை. ஆனால் பேச்சுக்குரல் கேட்டது.
”நல்லாருக்கியாம்மா..?” என் அப்பாவின் குரல்.
அதைக் கேட்டதும்.. எனக்குள் சுர்ரென ஒரு கோபக் கணல் மூண்டது..! அப்படியே கட்டிலில் உட்கார்ந்து விட்டேன். என் மனைவிதான் அவனை உள்ளே அழைத்து வந்தாள். என்னிடம் வந்து…
”உங்கப்பா வந்துருக்காரு..” என்று சன்னக் குரலில் சொன்னாள்.
நான் அவளை முறைக்க…சிரித்து விட்டு சேரை எடுத்துப் போட்டாள்.
”உக்காருங்க..”
நான் அந்தப் பக்கம் திரும்பக்கூட இல்லை.
என் மனைவி..
” பொண்ணு நல்லாருக்குங்களா..?” என்று கேட்டாள்.
”ஓ.! நல்லாருக்காம்மா..! நான் இந்த பக்கம் ஒரு ஜோலியா வந்தேன்..! நேத்து.. நங்கையா வீட்லயே படுத்துட்டேன்..! இப்ப ஊருக்கு கெளம்பறேன்.. அதான் உங்களையும் ஒரு எட்டு பாத்துட்டு போலாம்னு வந்தேன்..!”என்று சொல்லிக் கொண்டிருந்தான்.
அதற்குமேல் அவர்கள் பேச்சை நான் காதில் போட்டுக்கொள்ளவில்லை. என் மனைவிதான் காபியெல்லாம் வைத்துக் கொடுத்து.. அவனிடம் ஏதேதோ… விசாரித்துக் கொண்டிருந்தாள்.
நான் கிளம்பியாகிவிட்டது. போய்விடலாம் என்றுதான் இருந்தேன்..! ஆனால் என் மனைவியின் கெஞ்சல் பார்வைக்கு கட்டுப்பட்டு.. உள்ளுக்குள் குமுறும் எரிமலையோடு உட்கார்ந்து கொண்டிருந்தேன்.!
காபி குடித்தபின்.. அவனும் அதிக நேரம் இருக்கவில்லை. நான் ஏற்காவிட்டாலும் என்னிடமும் சொல்லிக் கொண்டுதான் போனான். அவன் போனதும்.. என்னிடம் வந்த என் மனைவி…
”இது கொஞசம்கூட நல்லால்ல…” என்றாள்.

3 Comments

  1. Next part போடுங்க

Comments are closed.