ஒரு எதார்த்த வாழ்வைப் பிரதிபலிக்கும் கதை 6 31

” ம்..ம்..! சரி.. சாப்பிட்டியா..?” என்று அவள் வயிற்றைப் பார்த்தேன்.
சட்டென புடவையை இழுத்து தன் வயிற்றை மறைத்தாள்.
”ஒரு சின்ன கேப் கெடைச்சா போதுமே..”
”உன்ன திருத்தவே முடியாது..” என்றேன் ”ஏய்.. சீரியஸா கேட்டேன்..!”
”ஓ..!” சிரித்தாள் ”ம்கூம்..! சாப்பிடல..!”
” ஏன்…?”
”எறங்கவே மாட்டங்குது..”
”எதனால…?”
”யாருக்கு என்ன தெரியும்..? ஏக்கமாகூட இருக்கலாம்..”
”ஏக்கமா..? என்ன ஏக்கம்..?”
”என்னமோ.. ஏக்கம்..!”
”ஓ..! லவ்வோ..?”
”விரகம்னு கூட சொல்லுவாங்க.. அத..!!”
”வி..ரகமா..? அடபாவமே…!!”
”விரகம்தான்..!! பட் அதும் நல்லாருக்கு..!! ஐ லைக் தட்..!!”
”ம்..ம்..!! எனக்கும் நல்லாருக்கும்.. நீ கூட இருந்தா..!!”
”ம்ம்..! இருப்பேன்.. இருப்பேன்..!! கல்யாணத்துக்கு அப்றம்..!!”
”ம்.ம்..! அப்றம்.. நம்ம அதப்பத்தி… என்ன பிளான்..?”
” நம்ம.. எதப் பத்தி..?”
” ஏதோ.. இந்த.. சாந்தி… முகூர்தம்பாங்களே…? அதானே..?”
”அதான்னு நெனைக்கறேன்..!! ஆனா அதப்பத்தி ஏன் யோசிக்கனும்..?”
”இ..இல்ல..! அது எப்படி இருக்கும்னு…?”
”எப்படி இருக்கும்..? எப்பயும் போலதான.. இருட்டா…”
”ம்..ம்..!! இருட்டுதான்..!! ஆனா அந்த இருட்ல.. உன்கூட நான் இருப்பேன்..!!”
”மை..காட்..!!” என்று நெஞ்சில் கை வைத்தாள் ” அப்ப.. திகில் ராத்திரி..!!”
”ஆனா.. எனக்கு இனிய ராத்திரி..!!”
”மை..காட்..!! மை காட்..!!”
” எந்த கடவுள கூப்ட்டாலும் உனக்கு வேற வழியே இருக்காது..!!”
”ஓ..!! ஆமாம்…!!” கவலை முகமானாள்.
”அப்ப என்ன பண்ணுவ..?”
” என்ன பண்றது..!! ஓ..கடவுளே என்னை காப்பாத்துனு… கண்ணு ரெண்டையும் இறுக மூடிக்குவேன்..!!” என சிரிக்காமல் சொன்னாள்.
நான் சிரித்து விட்டேன்.
”சரி..சரி நான் போகட்டுமா..?”
”போங்க..! ஆனா…”
”ம்..ம்..? என்ன ஆனா..?”
”கிஸ் தரப்போறதில்ல..”
”வேனாம் போடி..! நேரம் வரும்.. அப்ப பாத்துக்கறேன்..!!”
உடனே குழைந்தாள்.
”ஒன்னு தரலாம்னு தோணுது..!!”
”என்ன…?”
”கிஸ்….!!” என்று கன்னங்கள் மினுக்கச் சிரித்தாள் நிலாவினி….!!!!

மொத்தமாகவே என் மனதைக் கொள்ளை கொண்டு விட்டாள் நிலாவினி.
அவளின் செவ்விதழ் மீது என் பார்வையை ஊன்றினேன்..! அவளுடைய இனிக்கும் இந்த செவ்விதழ்கள் இனி எனக்கு மட்டுமே சொந்தம்..! என் தாகம் தணிக்கவே அவைகள்.. கோவைக்கனி இதழ்களாகக் கனிந்திருக்கின்றன..!!
”தா…” என்றேன் தீராத தாகம் கொண்டவனாக.
”ம்கூம்..!!” குறுக்காக மண்டையை ஆட்டினாள். அவளது காதோர உதிரி முடியும் சேர்ந்து ஆடியது.
”ஏன்…?” தெரியும் இப்படித்தான் ஓட்டுவாள் என்று.
”மாட்டேன்…”
”ஏய்..தாடி..”
”சீ… போடா…!!”
”என்னது… டா..வா..?” நான் சற்று திகைப்புடன் கேட்க..
”பின்ன.. நீங்க மட்டும் டீ.. சொல்லலாம்.. நாங்க டா.. சொல்லக்கூடாதா..? எனக்கு எதுலயுமே சம உரிமை வேனும்..!!” என்று சிரித்துக் கொண்டே சொன்னாள்.
” ம்..ம்.. சரி.. தர்றேன். ! பக்கத்துல வா..!!” என்றேன்.

3 Comments

  1. Story nice antha mekala love sex continue panunga

Comments are closed.