ஒரு எதார்த்த வாழ்வைப் பிரதிபலிக்கும் கதை 6 31

”ம்..ம..!!” புன்னகைத்தேன். ”யாரு சொன்னா..?”
”யாரோ.. ஒரு காக்கா..!! நீங்க சொல்லலேன்னா.. எங்களுக்கு தெரியாமலே போயிருமா.. என்ன..?”
”ஹா..ஹா..! யாரு சொன்னது… அப்படி..?”
”யாரா இருந்தா என்ன..? இவ்வளவு தூரம் பழகறோம்..! ஆனா இப்படினு.. ஒரு வார்த்தை.. ஒரு நாளாவது.. சொல்லத் தோணல..! என்ன பழகி… என்ன பிரயோஜனம்..? இதான் என் கோபம்லாம்…”
”க்கும்..! இந்த லவ் மேட்டர் எனக்கே தெரியாம நடந்ததுங்க..”
”ஆ..! சும்மா கதை விடாதிங்க..!”
”சத்யமா…” என்றேன் ”அவ மட்டும்தான் என்னை லவ் பண்ணியிருக்கா.. ஆனா இந்த விசயத்த அவ என்கிட்ட சொல்லவே இல்ல..! அவள பொண்ணு பாக்க யாரோ வரப்போயித்தான்… இந்த விசயத்தையே அவ வீட்ல சொல்லியிருக்கா..! எனக்கே அவளோட அண்ணன் சொல்லித்தான் தெரியும்..!!” என்று நான் சொன்னதை அவள் நம்ப மறுத்தாள்.
”நம்புங்க ப்ளீஸ்…”
”ம்ம்… என்னமோ..!! வேற வழி…? எல்லாம் நம்பித்தான் ஆகனும்..!!” என்றாள் ஒரு பெருமூச்சுக்குப் பின்.. !!

காலையிலிருந்தே லேசாக மழை தூறிக் கொண்டிருந்தது. நண்பர்களுக்கு பத்திரிகை கொடுக்கப் போய்விட்டு… குணாவின் பைக்கில் வந்து கொண்டிருந்த போது.. வழியில் மேகலாவைப் பார்த்தேன். சட்டென்று ஓரம் கட்டி.. அவளருகே போய் பைக்கை நிறுத்தினேன்.
”என்ன.. இங்க.. காலைல நேரத்துல..?” என்றேன்.
அவள் என்னை திகைத்து பார்த்து பின் சிரித்தாள்.
“நீங்களா?”
“இங்க…?”
”கரண்ட் பில் கட்ட வந்தேன்..!”
”ஓ..! கட்டிட்டிங்களா..?”
”ம்.. வந்ததும் கட்டிட்டேன்.! மழைனால கூட்டமே இல்ல..! நீங்க..?”
”பத்திரிகை குடுக்க.. பிரெண்டு வீட்டுக்கு போய்ட்டு வரேன்..”
”பைக் யாருது..?”
”மச்சினனுது…”
”ஓ..! இப்பவே…உரிமை பலமாருக்கு..” என்று சிரித்தாள்.
”ம்.. இருக்காத பின்ன..? வரீங்களா..?”
”வீட்டுக்குதான..?”
”ம்..ம்..! வாங்க மழை வேற தூறுது..!”
”லேசாதான…” என்று தயங்கிவிட்டு என் பின்னால் உட்கார்ந்தாள்.
”ம்..ம்.. போங்க..”
அவளை ஏற்றிக் கொண்டு பைக்கை ஓட்டினேன். சில நிமிடங்களிலேயே மழை தூரல் அதிகரித்து.. எங்களை நனைத்தது.!
”மழை பெருசா.. வருது..” என்றாள்.
”என்ன பண்றது.. நனஞ்சிட்டே போயிரலாமா..?”
”இல்ல வேண்டாம்..! நனஞ்சிருவோம்… நின்னே போயிரலாம்..” என்று அவள் சொல்ல அருகில் இருந்த.. தியேட்டர் வாசலில் ஓரம் கட்டினேன்.
பைக்கை ஓரமாகப் போட்டு விட்டு.. கவுண்ட்டர் பக்கமாகப் போய் நின்றோம். பெரிய ‘கட் அவுட் ‘ டைப் பார்த்து விட்டு.. ஈரம் துடைத்தவாறு சொன்னாள் மேகலா.
”ஷோ.. இன்னும் ஆரம்பிக்கல போலருக்கு..”
”ம்..ம்..” மணி பார்த்து ”ஆரம்பிச்சிருவாங்க..” என்றேன்.
தியேட்டர் கவுண்டர் திறந்திருந்தது. வெளியே மழைக்கு ஒதுங்கியவர்கள் தவிற.. யாருமில்லை..!
”காலைலயே மழை..” என்றேன்.
”புயல்…” என்றாள் ”எல்லாருக்கும் பத்திரிகை குடுத்தாச்சா..?”
”ம்… முடிஞ்சளவு.. குடுத்தாச்சு..”
”இன்னும் மூனே நாள்தான் இருக்கு..”
”ம்..ம்..! குடும்பத்தோட வந்துருங்க..!!”
மேலும் பத்து நிமிடங்களுக்குப் பிறகு… ”மழை.. ஓயாது போலருக்கு..” என்றாள்.
சிரித்து ”உள்ள போனாக்கூட உக்காரலாம்..” என்றேன்.
என்னைப் பார்த்தாள்.
”எங்க..?”
”தியேட்டருக்குள்ளதான்..”
உடனே சட்டென கேட்டாள்.
”போலாமா..?”
நான் வியப்படைந்தேன்.
”இப்பவா..?”
”ம்..ம்..! ஏன் வேலை இருக்கா.?”
”எனக்கு.. எதுமில்ல..! உங்களுக்குத்தான்….?”
”வீட்டுக்கு போனாலும்.. ஒரு வேலையும் இல்ல..! படம் பாத்தும் ரொம்ப நாள் ஆச்சு..!”
” அப்ப… போலாங்கறீங்களா..?”
”ம்..ம்..” என்று ஆவலோடு தலையாட்டினாள்.
”ம்..சரி..நடங்க..” என்றேன்.
பைக்கை ஸ்டேண்டில் போட்டு விட்டு டிக்கெட் வாங்கிக் கொண்டு இருவரும் பால்கனிக்குப் போனோம்..! காலைக் காட்சி என்பதால் மட்டுமல்ல.. மழையும் பெய்து கொண்டிருப்பதால்.. தியேட்டரில் கூட்டமே இல்லை..! எனக்கு இடது பக்கமாக உட்கார்ந்து சுற்றிலும் பார்த்துவிட்டு மெல்லிய குரலில் கேட்டாள் மேகலா.
”நம்மள.. யாரும் பாத்துருக்க மாட்டாங்க.. இல்ல..?”
”பாத்தா… என்னங்க..?”
” எ..என்ன.. இப்படி கேக்கறீங்க..?”

3 Comments

  1. Story nice antha mekala love sex continue panunga

Comments are closed.