ஒரு எதார்த்த வாழ்வைப் பிரதிபலிக்கும் கதை 6 31

”தனியாவா..?” ஜன்னல் அருகே போய் நின்றேன். என்னை முறைத்துப் பார்த்தாள். நான் சிரித்து..
”ஓ… ஸாரி..! நா.. வேற எந்த அர்த்தத்துலயும் கேக்கல…” என்றேன்.
”ஏன்… பேசமாட்டிங்க…? பேசுங்க.. பேசுங்க..!!” என்றாள் வேறு பக்கம் பார்த்துக் கொண்டு.
”ஸாரி… ஸாரி…!!”
எதுவும் பேசாமல் அமைதியாக நின்றாள்.
நான் மெல்ல.. ” என்மேல நெறைய கோபமிருக்கும்..?” என்றேன்.
உடனே ”உங்க மேல கோபப்பட.. எனக்கென்ன உரிமை இருக்கு..?” என்றாள்.
”சே..சே..! அப்படி பேசாதிங்க .! தபபெல்லாம் என்னோடதுதான்..!”
என்னை உற்றுப் பார்த்தாள். அவள் கண்களைப் பார்த்து.. அவளது உணர்ச்சி என்ன என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. ஆனால் அந்தக் கண்களில்.. என்மீது அவளுக்கு ஏதோ இருக்கிறது என்பது தெரிந்தது. சட்டென.. மார்பகம் விம்ம. . பெருமூச்சு விட்டாள்..!
நான் மெல்லச் சொன்னேன்.
” நீங்க நெனைக்கற மாதிரி.. எனக்கெல்லாம் உங்க மேல ஒரு கோபமும் இல்ல..! நீங்கதான் என்கூட பேசாம இருந்தீங்க.. அதான் என் கல்யாண விசயத்த உங்ககிட்ட.. சொல்ல முடியல..! அதுக்காக என்னை மன்னிச்சிருங்க..! ஆனா நீங்க நெனக்கற மாதிரி… நான் நெனைக்கல..”
என்ன நினைத்தாளோ… சட்டென அவள் கண்கள் கலங்கி விட்டன..! உடனே.. முந்தானையால் கண்களைத் துடைத்துக் கொண்டாள்.
”வேண்டாம்..! அதப்பத்தி எதுவும் பேச வேண்டாம்..!” என்றாள்.
”சரி.. பேசல..! ஆனா.. என்னையும் புரிஞ்சுக்கோங்க.. மேகலா..! அன்னிக்கு.. நான்.. அப்படி… வேனும்னே திட்டம் போட்டெல்லாம் எதும் பண்ணல..! எதிர் பாக்காம.. திடிர்னு… ஆனா என் தப்புதான்..!”
” பரவால்ல…” முனகினாள் ” என்கிட்ட நீங்க என்ன மாதிரி எண்ணத்துல பழகுனீங்கனு.. எனக்கு தெரியாது..! ஆனா நான் சத்தியமா.. அந்த மாதிரி ஒரு எண்ணத்துல பழகவே இல்ல..!
உங்கள ஒரு பிரெண்டு மாதிரி நெனச்சுத்தான் பழகினேன்..!! ஆனா… அது…இப்படி.. தப்பா போகும்னு நான் நெனைக்கவே இல்ல…” மேலும் ஏதோ பேச விரும்பியது போலத் தெரிந்தது.. ஆனால் பேசவில்லை..!!

மேகலா.. பேச நினைத்தும்.. அதை பேச முடியாமல் நின்றிருப்பதைப் போலிருந்தது. அவள் முகம் சூம்பி கொஞ்சம் இறுக்கமாக தெரிந்தது.
நானும் எதுவும் பேசாமல் அவளையே வெறித்தேன்..!!
சிறிது பொருத்து.. ஒரு பெருமூச்சுடன் நிமிர்ந்து என்னைப் பார்த்தாள். அவளது பெண்மை.. இப்போதும் என்னை வசீகரித்தது.
‘சே.. ! இதுதான் சபல புத்தியோ..? எனக்கு மட்டும் ஏன் இப்படி..?’
என்னை ஆழமான ஒரு பார்வை பார்த்து விட்டு…
”நான்.. போய்ட்டு வந்து.. சமையல் பண்ணனும்..” என்றாள்.
நான் ”ம்..” என்று மட்டும் சொன்னேன்.
அங்கிருந்து நகர்ந்த மேகலா.. சட்டென நின்றாள். என்னைப் பார்த்து.
”சாப்டிங்களா..?” என்று கேட்டாள்.
”ம்..ம்..!”
” ஓட்டல் சாப்பாடா…?”
”இல்ல… அக்கா வீட்ல…”
” உங்க…கல்யாணத்துக்கு.. என்னையெல்லாம் கூப்பிடுவீங்களா..?”
”குத்தி காட்டாதிங்க…”
” ஏன்.. வலிக்குதோ..?”
”ஆமா..ரொம்ப வலிக்குது..” என்று என் இதயத்துக்கு நேராக கையை வைத்து அழுத்திப் பிடித்தேன்.
”எனக்கு கூட கேள்விப்பட்டப்ப.. இப்படித்தான் வலிச்சிது..” என்றாள்.
”அதுக்காக…ஸாரி…”
”எனக்கு எதையும் மனசுக்குள்ள வெச்சிக்க தெரியாது. பட்னு பேசிருவேன்.. அது என் பழக்கம்..” என்றாள்.
நான் புன்னகையுடன் அவளையே பார்த்தேன்.
”என்னமாவது வேனுமா..?” என்று கேட்டாள்.
”இல்ல.. ஒன்னும் வேண்டாம்..”
”அதானே.. நாங்கள்ளாம் வாங்கித் தந்தா புடிக்குமா.. என்ன…? இதே வேற யாராவதா இருந்தா.. அப்ப. . புடிச்சிருக்கும்…”
”அலோ.. நா.. அப்படி சொல்லல..!! சரி.. என்ன வாங்கறீங்க… எனக்கு..?”
”ஒன்னும் வாங்கல…” என்று விட்டுப் போய்விட்டாள்.
என்னதான் சொல்ல வருகிறாள் என்று குழம்பினேன். இந்தப் பெண்களே.. இப்படித்தானோ..? ஆண்களின் மனதைக் குழப்பமடையச் செய்யும்… பெரும்.. குழப்பவாதிகளாக…????

3 Comments

  1. Story nice antha mekala love sex continue panunga

Comments are closed.