ஒரு எதார்த்த வாழ்வைப் பிரதிபலிக்கும் கதை 6 31

நான் முன்னால் நடக்க.. சிறிது இடைவெளி விட்டு என் பின்னால் வந்தாள் மேகலா. வெளியே இன்னும் மழை துறிக் கொண்டுதான் இருந்தது. நான் பைக்கை எடுக்க… தலையில் புடவைத் தலைப்பைப் போட்டுக் கொண்டு
”நீங்க போங்க.. நான் ஆடடோல வந்தர்றேன்..” என்றாள்.
அவள் முகம் பார்த்து…
”ஏன்..?” என்றேன்.
”ஸாரி. ..!! ”என்று மட்டும் சொன்னாள்.
அதற்கு மேல் அவளை வற்புறுத்த விரும்பாமல்..
”சரி.. முன்னாடி வாங்க.. ஆட்டோ கூப்பிட்டு விடறேன்..” என்று ரோட்டை அடைந்து ஆட்டோ பிடித்து அவளை அதில் ஏற்றிவிட்டு நானும் கிளம்பினேன்…!!
மழைத்தூறலில் நனைந்தவாறு.. அந்தப் பேன்ஸி ஸ்டோர் முன்பு நிறுத்தி இறங்கி.. நான் உள்ளே நுழைய.. மேஜைக்குப் பின்னால் சேரில் உட்கார்ந்திருந்த நீ… என்னைப் பார்த்ததும் முகம் மலரச்சிரித்தாய்.
“வா.. வாங்க”
”ஹாய்..! எப்படி இருக்க..?”என்று உன்னைக் கேட்டேன்.
நீ எழுந்து விட்டாய்.
”எனக்கென்னங்க..! நீங்க எப்படி இருக்கீங்க..?” என்று என்னைக் கேட்டாய்.
”ம்..ம்..!! நல்லாருக்கேன்..!!”
கடை முதலாளியைப் பார்த்து.. ”ஹலோ.. சார்..” என்று விட்டு அவருக்குப் பத்திரிகை வைத்தேன்.
அவரோடு சிறிது நேரம் என் திருமண விசயம் பற்றிப் பேசிவிட்டு.. நான் கிளம்பினேன். என்னுடன் கடை வாசல்வரை வந்த உன்னிடம் கேட்டேன்.
”நீ.. என்ன பண்ணப் போறே.. தாமரை..?”
”நான்தான் அன்னிக்கே சொன்னங்களே..?” என்று ஒரு வித பரிதவிப்புடன் சொன்னாய்.
”என்ன சொன்ன..?”
”அதாங்க…”
”ஆனா. . நான் உனனை இப்ப.. கல்யாணத்துக்கு கூப்பிடத்தான் வந்தேன்..”
மௌனமாக நின்றாய்.
”வர்றதானே…?” என்றேன்.
”எப்படிங்க…?” என பரிதாபமாகப பார்த்தாய்.
”வர்ரே…” என்றேன் தீர்மானமாக.
நீ தயங்கியவாறு நின்றாய்.
”ரொம்ப யோசிக்காம வர்றே..! அப்படி நீ வல்லேன்னா.. அப்றம் ஜென்ம.. ஜென்மத்துக்கும்.. உன்னை நான் மன்னிக்கவே மாட்டேன்…!! இதுக்கு மேல.. என்ன பண்றதுனு.. நியே முடிவு பண்ணிக்க…!!” என்க..
நீர் கோர்த்த கண்களுடன்… என்னையே பார்த்தாய்..!!!!!!

என் திருமணம்..!! நான் நினைத்துப் பார்த்திராத அளவுக்கு.. மிகவும் நல்ல முறையில் நடந்து முடிந்தது..! என் அப்பா தன் குடும்பத்துடன் வந்து கலந்து கொண்டார்..!! பகல் பொழுது போனதே தெரியவில்லை.. !!
இரவு..!! முதல் இரவு..!!
மாடி அறை எங்களுக்கென பிரமாதமாக அலங்கரிக்கப் பட்டிருந்தது. புதுக்கட்டில்.. பஞ்சு மெத்தை… எம்பிராய்டரி தலையனை… அறையெங்கும் ஊதுபத்தி புகை.. சந்தனம்… பன்னீர்.. மூடைக் கிளப்பும் ஸ்பிரேக்கள்… கட்டில் மீது தூவப்பட்ட.. பூக்களின் கமகம வாசணை…!!
நிலாவினி தலையத் தலைய புடவை கட்டிக் கொண்டு.. அறைக்குள் வந்தாள்..!! முதலிரவுக்கு வரும்.. மிகவும் அழகியான ஒரு.. புதுமணப்பெண்.. எப்படி இருப்பாள் என்பதை உங்கள் கற்பனைக்கே விட்டு விடுகிறேன்..!
”ஹாய்..” சொன்னேன்.
கண்களைச்… சிமிட்டிச் சிரித்தாள்.
”ஹாய்.. சொல்ல மாட்டியா..?” அவளை ரசித்தவாறு கேட்டேன்.
”ஹாய்..” என சன்னமாக முனகிவிட்டு ”எந்திரிச்சு நில்லுங்க..” என்றாள்.
”ஏன்..?”
” கால்ல விழனும்.. ஆசிர்வாதம் பண்ணுங்க…”
”ஏய்.. என்ன நீ..? அதெல்லாம் ஒன்னும் வேனாம்.. இப்படி வந்து உக்காரு..” என்று நான் சொல்ல.. வெட்கம் கலந்து சிரித்தாள்.
”வேனாமா…?”
”அந்த சம்பிரதாயமெல்லாம் தேவையில்ல.. வா..”
”இல்ல.. யார் யாரோ.. கால்ல எல்லாம் விழுந்தோம்.. உங்க கால்ல விழறதுல.. ஒன்னும் ஆய்டப் போறதில்ல..”
”ஏய்…பரவால்ல.. வா..! உக்காரு. .” என்றேன்.
புன்னகை தவழ.. என் அருகில் வந்து உட்கார்ந்தாள். அவள் தோளில் கை போட்டு அணைத்துக் கொண்டேன். மணமாக இருந்தாள்.!
”நிலா…”
”ம்..ம்..?”

3 Comments

  1. Story nice antha mekala love sex continue panunga

Comments are closed.