ஒரு எதார்த்த வாழ்வைப் பிரதிபலிக்கும் கதை 6 31

ஒரு மணிநேரம் கழித்து… ஜன்னல் அருகே வந்து.. ”அலோவ்..” என்றாள் மேகலா.
படுத்துக் கொண்டிருந்த நான் எழுந்து உட்கார்ந்தேன்.
”வாங்க..! போய்ட்டு வந்தாச்சு போலருக்கு.?”
”ம்..! தூங்கிட்டிருந்தீங்களா..?”
”இல்ல…டிவி பாத்துட்டு..”
கையில் இருந்த கூடையிலிருந்து இரண்டு மாம்பழங்களை எடுத்து நீட்டினாள்.
”இந்தாங்க…”
”என்னது…?” எழுந்து ஜன்னல் அருகே போனேன்.
”உம். .. பாத்தா.. எப்படி தெரியுதாம்..?”
” மாம்பழம் மாதிரியில்ல தெரியுது…”
”உம்…” கொஞ்சம் முறைப்பாகப் பார்த்தாள்.
”ம்..ம்..! மாம்பழம்தானே..?”
”புடிங்க… மொதல்ல..! உங்களுக்கெல்லாம் குடுக்க வந்தேன் பாரு.. என்னைச் சொல்லனும்…”
ஜன்னல் வழியாக வெளியே கை நீட்டி இரண்டு பழங்களையும் வாங்கினேன்.
”சாப்பிடலாம்ல..?”
”நீங்க சாப்பிடுவீங்களோ… இல்ல தூக்கி வீசுவீங்களோ..? அது உங்க விருப்பம்..”
”ச்ச.. என்னங்க.. உங்க பழத்த தூக்கி வீச முடியுமா..?” என்று நான் சிரிக்க.. என்னைக் கடுமையாக முறைத்தாள் .
மறுபடி நான் ”சாப்பிட்டா.. ஒன்னும் ஆகாதில்ல..?” என்று கேட்டேன்.
”உம்.. நல்லா ஜீரணம் ஆகும்..”
”ஓ..!”
” என்ன.. கிண்டலா இருக்கா..?”
”ச்ச.. என்னங்க.. நீங்க.. எதச் சொன்னாலும் பொசுக் பொசுக்னு கோவிச்சுக்கறீங்க..”
” ம்.. பேச்சு அப்படி இருக்கு…”
”ஓ…! அதென்னமோ… எனக்கு கொஞ்சம் வாய்ல தோசம்னு நெனைக்கறேன்..!” என்று சிரித்தேன்.
என்னை மறுபடி முறைத்தாள். அவளின் கோப முகத்தை ரசித்து சிரித்தேன். பின் பேச்சை மாற்றினேன்.
”சுவையா இருக்குமா..?”
”என்ன. .?”
”உங்க.. மாம்பழம்…?”
”ச்ச… நீங்க திருந்தவே மாட்டிங்கப்பா..” என்று விட்டு சட்டென நகர்ந்து போனாள்.
”ஸாரி… இருங்க…” என்று நான் சொல்ல.. திரும்பிக் கூடப் பார்க்காமல் போய்விட்டாள்.
‘ச்ச… நிஜமாகவே என் வாயில் சனியோ..? ‘
மேகலாவைப் பற்றி அசை போட்டுக் கொண்டே மாம்பழங்களைக் கழுவி… அறுத்துச் சாப்பிட்டேன். சுவையாக இருந்தது..!!
மாலை நேரம்..! அக்கா வீடு…!!
”நாளைக்கு உங்கப்பன் வர்றான்டா..” என்றாள் பெரியம்மா.
நான் ஒன்றும் பேசவில்லை. அவளே பேசினாள்.
” உனக்கு அவன புடிக்கலேன்னா பரவால்ல..! நீ பாட்டுக்கு பேசாம இருந்துக்கோ.! நாங்க என்ன பண்ணனுமோ பண்ணிக்கறோம்..!”
”என்னை டென்ஷன் பண்ணாம இருந்தா சரி..” என்றேன்.
என் அக்கா இடைபுகுந்தாள்.
” பொருத்துப் போடா.. ஒன்னும் கொறைஞ்சு போக மாட்ட..!”
அவளை முறைத்தவாறு சொன்னேன்.
”அதுக்கும் ஒரு லிமிட் இருக்கு..”
”அத.. நீ சொல்ற..” என்று சிரித்தாள்.
பெரியம்மா.. ”குடும்பத்தோட வருவான்..” என்றாள்.
அக்கா ”ஆமாடா.. உன் சித்திய நீ பாத்ததே இல்லல்ல… பாரு எப்படி இருக்கானு..”
நான் அக்காளை முறைத்தேன்.
”நல்லா பேசி பழகுவாடா..! ரொம்ப எதார்த்தம்..! உன் தங்கச்சியும் அப்படித்தான்.. !!” என்று சிரிப்பு மாறாமல் சொன்னாள்.
”சரி.. என்னமோ பண்ணித் தொலைங்க.. நான் போறேன். ..”என்றுவிட்டு எழுந்து… ஸ்டேண்டுக்குப் போய்விட்டேன்.
இரவு பத்து மணிக்கு.. மிதமான போதையில் வீட்டுக்குப் போனேன். லைட்டைப் போட்டு உடை மாற்றி ஜன்னலைத் திறந்து வைத்தேன். மேகலா வீட்டில் இன்னும் விளக்கு எரிந்து கொண்டிருந்தது. நான் டிவியைப் போட்டு விட்டு கட்டிலில் சாய… மேகலா வந்தாள். அதே புடவையில் இருந்தாள். ஆனால் முகம் திருத்தமாக பளிச்சென்று இருந்தது.

”இப்பத்தான் வர்றாப்ல இருக்கு.?” என்று கேட்டாள்.
”ஆமாங்க…” எழுந்தேன்.
”எங்க போனீங்க..?”
”அக்கா வீட்டுக்கு… ஏங்க…?”
”கேட்டேன்..” என்று சிரித்தாள்.

3 Comments

  1. Story nice antha mekala love sex continue panunga

Comments are closed.