ஐ வில் ட்ரை மை பெஸ்ட் டாக்டர் 4 30

விஸ்வா, “From a different source. அதை அப்பறம் சொல்லறேன் முதலில் நீங்க உங்களுக்கு என்ன விடைகள் கிடைச்சு இருக்குன்னு சொல்லுங்க”

அமுதா, “செக்ஸ்ஸும் லவ் பண்ணறது வேற வேற எனும் அந்த நம்பிக்கை அவ முதலில் தவறு செய்ய, I mean, உனக்கு வேலை வாங்கிக் கொடுக்கறதுக்காக, முடிவு எடுக்க உதவி இருக்கு”

விஸ்வா, “எப்படி?”

அமுதா, “உனக்கு வேலை வாங்கிக் கொடுக்க வேண்டிய நிர்பந்தம். அந்த மனுஷன் அதுக்கு பதிலா அவளை கூப்பிட்டு இருக்கான். விஸ்வாவுக்கு வேலை கிடைக்க அந்த ஆள் கூட செக்ஸ் மட்டும்தான் வெச்சுக்கப் போறேன் அவரை காதலிக்கப் போறது இல்லை, அவரோட அன்னியோன்னியமா இருக்கப் போறது இல்லை அப்படின்னு அவ மனசில் எளிதா முடிவு எடுக்க முடிஞ்சுது”

விஸ்வா, “சாரி மேம், என் மேல், எங்க கல்யாணத்தின் மேல் அவளுக்கு துளியும் மரியாதை இல்லை. அவர் கூடப் போறதை எனக்கு, எங்க கல்யாணத்துக்கு செய்யும் துரோகமா அவ நினைக்கலை”

அமுதா, “இதை அவ கண்ணோட்டத்தில் பாரு. உன் நலனுக்காகன்னு நினைச்சுச் செய்யும் காரியத்தை உனக்கும் செய்யும் துரோகம்ன்னு எப்படி அவளால நினைக்க முடியும்?”

விஸ்வா, “ஸொ, அவ ஒரு விபசாரி மாதிரி அவர்கூடப் படுத்தான்னு சொல்லறீங்களா?”

அமுதா, “ஆமா”

விஸ்வா, “நீங்க சொல்றதை என்னால ஒத்துக்க முடியாது”

அமுதா, “ஏன்?”

விஸ்வா, “அப்படி முடிவு எடுக்காம. அந்த வேலை எனக்கு வேண்டாம்ன்னு என்னை கன்வின்ஸ் பண்ணி இருக்கலாம். அவர் அப்படிக் கேட்டதை என்னிடம் சொல்லி இருந்தா நானே அந்த வேலை வேண்டாம்ன்னு சொல்லி இருப்பேன்”

அமுதா, “உன் கிட்டே சொல்லி இருந்தா நீ நிச்சயம் வேண்டாம்ன்னு சொல்லி இருப்பே. ஆனா அதே சமயம் நீ பட்ட கஷ்டத்தை அவளால் தாங்க முடியலை. அதனால தான் அவ உன்னை திரும்பத் திரும்ப உனக்கு அந்த வேலை வேணுமான்னு கேட்டு இருக்கா”

விஸ்வா மௌனம் காத்தான் …

அமுதா, “அப்படியும் வனிதா எளிதா சந்திரசேகரின் நிபந்தனைக்கு ஒத்துக்கலை. அவரைப் பத்தி மிஸ்டர் சண்முகம், சுமதி இவங்க ரெண்டு பேர்கிட்டேயும் புகார் பண்ணப் போறேன்னு மிரட்டி இருக்கா. தான் பிற பெண்களோட உறவு வெச்சு இருப்பது அவங்களுக்கு தெரியும் அதனால் நீ புகார் பண்ணறதை சீரியஸா எடுத்துக்க மாட்டாங்க. மிஸ்டர் சண்முகமே கூட உன்னை படுக்கைக்கு கூப்பிட வாய்ப்பு இருக்குன்னு சொல்லி இருக்கார்”

விஸ்வாவின் முகம் இறுகி கண்களில் உக்கிரம் கொப்பளித்தது ..

தொடர்ந்த அமுதா, “அந்த வழியிலும் அவரை ஒப்புக் கொள்ள வைக்க முடியலைன்னு குழம்பி இருந்தா. இவ்வளவு பேசினதுக்குப் பிறகு தன்னால் அவளை வேலையில் வெச்சுட்டு இருக்க முடியாதுன்னு சொல்லி அவளையும் வேலையை விட்டு விலக்கறதா மிரட்டி இருக்கார். அன்னைக்குத் தான் உங்கிட்டே அவ கடைசியா கேட்டு இருக்கா. நீ அவகிட்டே கோபமா பேசி இருக்கே. வேற வழி இல்லைன்னு நினைச்சு ஒத்துகிட்டா”

1 Comment

Comments are closed.