ஐ வில் ட்ரை மை பெஸ்ட் டாக்டர் 4 30

வனிதா பெருமூச்சுடன், “Ok. Enough. ட்ரெஸ் பண்ணிட்டு போய் ஹாலில் வெய்ட் பண்ணுங்க”

சற்று நேர சல சலப்புக்குப் பிறகு ..

வனிதா, “ஓ, ப்ளீஸ் சந்த்ரூ, இன்னைக்கு ஆல்ரெடி ரெண்டு தடவை ஆச்சு. போதும் போய் வெளியில் வெயிட் பண்ணுங்க”

அறை வாசலைத் தாண்டிய சந்திரசேகர் இடப்புறம் திரும்பி பார்த்து ஸ்தம்பித்து நிற்பதை உணர்ந்து தானும் அறைக்கு வெளியில் தலை நீட்டிப் பார்க்க அவளது பார்வை விஸ்வாவின் கலங்கிச் சிவந்த கண்களைச் சந்தித்தது.

விஸ்வா, “யூ, பாஸ்டர்ட்” என்றபடி சந்திரசேகரை ஓங்கி அறைய அவர் அந்த ஹாலில் இருந்த சோஃபாவிற்கு அருகே சென்று விழுந்தார். எழுந்து தலை குனிந்தபடி அவசரமாக அவர் அவ்விடத்தை விட்டு அகன்றார்.

பயம், விரக்தி, ஆற்றாமை இவை அனைத்தும் முகத்தில் படர்ந்து கண்கள் குளமாகி வழிந்தோடியபடி நின்று கொண்டு இருந்த தன் துணைவியைப் பார்த்து …

விஸ்வா, “அஞ்சு வருஷமாவா? You slut!” என்றபடி அவள் கழுத்தைப் பற்றி நெருக்கினான். வனிதாவின் கண்கள் விரிந்து சில கணங்கள் அவள் மூச்சுத் திணறினாள் .. பிறகு அவளை உதறித் தள்ளி விட்டு அவ்விடத்தை விட்டு அகன்றான்.ராம், “I am so sorry Viswa. I can understand how hurt you would have been. எந்தக் கணவனுக்கும் நேரக் கூடாத அனுபவம்”

விஸ்வா, “அதுக்குப் பிறகு … I wanted to kill both of them and then I wanted to kill myself …”

ராம், “Thank God for making you think rationally”

விஸ்வா, “அப்படியும் மூணு நாலு நாள் .. என்னால எதுவும் யோசிக்க முடியலை”

ராம், “அது சரி, அஞ்சு வருஷமா தொடர்ந்து அப்படி நடக்கலை-ன்னு நான் கேள்விப் பட்டேனே”

விஸ்வா, “How does it matter Ram? ஒரு தடவையோ ஆயிரம் தடவையோ கணக்குப் பண்ணி என்ன பிரயோஜனம்? Anyway, அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி எனக்கு PMLஇல் வேலை வாங்கிக் கொடுக்க அவர்கூட முதல் முதலா படுத்தாளாம்”

ராம், “அதையும் டாக்டர் அமுதா சொன்னாங்க”

விஸ்வா, “அந்த ஆள் அப்படி கண்டிஷன் போட்டு இருக்கார். இவளும் நான் வேற வேலை கிடைக்காம கஷ்டப் படறதைப் பார்த்து ஒத்துட்டு இருக்கா. முதல் தரத்துக்குப் பிறகு அடுத்த மூணு தடவை, வாரம் ஒரு முறை, அவளே விருப்பப் பட்டு போனாளாம். அதற்குப் பிறகு அவங்க ரெண்டு பேருக்கும் நடுவே எந்த தொடபும் இல்லையாம். ஏழு மாசத்துக்கு முன்னாடி மறுபடி ஆரம்பிச்சு இருக்கு. அதே வீக்லி ஒன்ஸ் ஸ்கெட்யூல்”

பெருமூச்சு விட்ட ராம், “இந்த விவரம் எல்லாம் உனக்கு எப்படி தெரிஞ்சுது?”

விஸ்வா, “அன்னைக்கு அவங்களைப் பார்த்த பிறகு நான் வீட்டுக்குப் போகலை. க்ளப்பில் ரூம் போட்டு அங்கே தங்கி இருந்தேன். ஆஃபீஸுக்கும் போகலை. பயந்துட்டு வசந்திரசேகர் வந்து நடந்தது ஒண்ணு விடாம சொல்லி மன்னிப்புக் கேட்டார்”

ராம், “வனிதாகிட்டே பேசினியா?”

விஸ்வா, “இல்லை. அன்னைக்குப் பிறகு அவகிட்டே நான் இது வரைக்கும் ஒரு வார்த்தைகூட பேசலை”

அவர்கள் இருவரின் அன்னியோன்னியத்தைப் பற்றி நன்கு அறிந்த ராமின் கண்கள் கலங்கின….

1 Comment

Comments are closed.