ஐ வில் ட்ரை மை பெஸ்ட் டாக்டர் 4 30

ராம், “இப்போ வீட்டில்தானே இருக்கே?”

விஸ்வா, “ஆமா”

ராம், “வனிதா எந்தப் பேச்சையும் எடுப்பது இல்லையா?”

விஸ்வா, “மறுபடி வீட்டுக்குப் போன அன்னைக்கு சாரி-ன்னு சொல்லி பேச ஆரம்பிச்சா. மியூசுவல் கன்ஸர்ன் பேஸிஸில் டைவர்ஸுக்கு அப்ளை பண்ணப் போறேன். அதுக்கு நீ ஒத்துக்கலைன்னா நீ நடத்தை தவறியதை அடிப்படையா வெச்சு அப்ளை பண்ண வேண்டி இருக்கும். அதற்குப் பிறகு உன் ரகஸியம் ஊருக்கே தெரிஞ்சுடும். உன் இஷ்டம். நான் உன் கூட ஒரு வார்த்தை கூட பேச விரும்பலை. உன் கூட நான் பேசணும்-ன்னு எதிர்பார்த்தா நான் வீட்டுக்கே வரப் போறது இல்லைன்னேன். அதுக்குப் பிறகு அவளும் பேசறது இல்லை”

ராம், “இப்போ கவுன்ஸிலிங்கில் அமுதா மேடம் உன்னை அவகூட பேசச் சொல்லலையா?”

விஸ்வா, “அந்த ஸ்டேஜுக்கு இன்னும் வரலை”

ராம், “அந்த வெவ்வேறு ஸ்டேஜஸ்ஸைப் பத்தி டாக்டர் அமுதா எனக்கும் விளக்கினாங்க. அடுத்த ஸ்டேஜுக்குப் போறதுக்கு முன்னாடி நீ அவங்க கிட்டே பேச சங்கோஜப் பட்ட விஷயங்களை, I mean the sexual intimacy between you both, பத்தி அவங்க தெரிஞ்சுக்க விரும்பறாங்க. அதைத் தான் உன் கூட பேசிட்டு அவங்களுக்கு சொல்லச் சொன்னாங்க”

விஸ்வா, “தெரியும்”

ராம், “விஸ்வா, ஒரு சைக்கியாட்ரிஸ்ட் கூட பேசறதை விட நீ இந்த விஷயங்களை என்கூட பேச விரும்பறதா சொன்னாங்க. ஒரு விஷயத்தை நீ புரிஞ்சுக்கணும். உனக்கு இருக்கும் அளவுக்கு எனக்கும் ரொம்ப கஷ்டமா இருக்கு!! நீ படற மன வேதனை எனக்கு நல்லா புரியுது. அது மட்டும் இல்லை எனக்கு வனிதா மேலும் உன் குழந்தைகள் மேலும் ரொம்ப அக்கறை இருக்கு. ஆனா நானும் டாக்டர் அமுதா மாதிரி பாரபட்சம் இல்லாமத்தான் உன் கூட பேசப் போறேன். உனக்கு அது ஓ.கேவா?”

விஸ்வா, “ஓ.கே?”

ராம், “இன்னொரு விஷயம். நீ என் கூட பேசினது வனிதாவுக்கு எந்தக் காரணத்தைக் கொண்டும் தெரியக் கூடாது. அதற்குப் பிறகு என் முகத்தில் அவ முழிக்க மாட்டா. She does not deserve it”

விஸ்வா, “இந்த சமயத்திலும் நீ அவளுக்கு சப்போர்ட் பண்ணறியா?”

ராம், “டேய், உன்னுடைய முன்னேற்றத்தில் உன் நலனில் அவளை விட வேற யாருக்கும் அதிகம் அக்கறை இருக்க முடியாது. இருந்தும் அப்படி அவ நடந்துட்டு இருக்கான்னா எதாவுது ஆழ்ந்த காரணம் இருக்கும்”

விஸ்வா அவனை கூர்ந்து பார்த்த படி, “அதாவது நான் சொல்லறதை வெச்சு நீயும் என் மேலயும் தப்பு இருக்கு-ன்னு சுட்டிக் காட்டப் போறியா?”

ராம், “டேய், அவ செஞ்சது சரி-ன்னு சொல்லலைடா. புரிஞ்சுக்கோ. உன் மேல தப்பு இருந்து இருந்தா அதை அவ உன் கிட்டே முதலில் பேசி இருக்கணும். இருந்தாலும், அவ அப்படி செஞ்சதுக்கு என்ன காரணம்-ன்னு தெரிஞ்சுக்க விருப்பம் இல்லையா?”

விஸ்வா, “முதல் முதலில் என் வேலைக்காக கூட படுக்க ஆரம்பிச்சா-ன்னு சந்திரசேகரே சொன்னார். அதற்குப் பிறகு அவளே விருப்பப் பட்டு வந்ததா சொன்னார்”

1 Comment

Comments are closed.