உனக்கு என்ன வேணும் மதி? 73

சுடிதார் பிரிவுக்கு சென்று அவரின் விருப்ப படியே உடைகள் வாங்கினோம், அவர் உள்ளாடை பிரிவை பார்த்த போது வெட்கமும்
அருவருப்பும் ஒரு சேர வந்தது. ஆனால் அவர் விடுவதாக இல்லை. வா என்று அங்கேயும் அழைத்து சென்றார்.
அங்கே விற்பனை பிரிவில் உள்ள பெண்ணிடம் ரகசியமாக என் அளவை சொன்னேன்.

அவர் புரிந்து விலகுவார் என்று நினைத்தால் அவரோ என் உள்ளாடையை எடுத்து அளவை பார்த்தார்.
என் முகம் சிவந்து காலின் கட்டை விரலை நிலத்தில் அழுத்தி பிடித்து நின்று இருந்தேன்.
அவர் கண்கள் என் அளவை பார்த்து வியந்ததை என் கடைக்கண்ணால் கண்டேன். பிறகு முப்பது செட் கொடுங்கள் என்று ஆணை இட்டார்.

நான் எதுவும் பேசவில்லை. விற்பனை பெண் என்னை பொறாமையோடு பார்த்தாள்.

காரில் வரும் பொது உதயன் என்னிடம் அன் பிலீவபில் என்று சொன்ன பொது
அவர் எதை சொல்கிறார் என்று தெளிவாக புரிந்தது என் முகம் சிவந்ததை என்னால் மறைக்க முடியவில்லை .

ஸார் …

சொல்லு மதுமிதா நான் இந்த உடைகள் இப்போது என் வீட்டுக்கு கொண்டு செல்ல முடியாது

ஒய்

அம்மா திட்டுவாங்க..

ரியலி உன்னை ஒரு மாசம் அனுப்பும் பொது அவங்க திட்ட மாட்டாங்களா?

என் கண்ணில் கண்ணில் கண்ணீர் தழும்பி கன்னத்தில் வழிந்தது…

இட்ஸ் ஓகே கூல் கூல் இப்போது உதயனின் கைகள் என் தோள் தொட்டு என்னை ஆதரவாய் தடவியது.

நிமிடத்தில் சுதாரிது அவர் கையை மெல்ல தட்டி விட்டேன்

அவரும் அதற்க்கு மேல் என்னை கம்பல் செய்யவில்லை.

வீட்டுக்கு செல்லும் வழியில் உள்ள கோவிலின் அருகில் இறங்கி கொண்டேன்.
ஏன் மதுமிதா உன் வீட்டுக்கு கூப்பிட மாட்டாயா. இல்ல சார் அம்மாக்கு நம்ம ரெண்டு பேர் மட்டும் போறது தெரியாது,
ஆபிஸ்ல இன்னும் சில பேர் வராங்கன்னு சொல்லி இருக்கேன்.

இட்ஸ் ஓகே என்று தொலை குலுக்கி வண்டியை கிளப்பி கொண்டு சென்றார்.

பிள்ளையாரிடம் சிறிது நேரம் அமர்ந்து பிரார்த்தனை செய்தேன். என் அருகில் யாரோ நிற்பதை உணர்ந்து கண்மிழித்தேன்.
தங்கையின் வருங்கால மாமியார் நின்று என்னை பார்த்து சிநேகமாக புன்னகைத்தார்.

வாங்க அம்மா எப்படி இருக்கீங்க?

நல்லா இருக்கேன் கண்ணு நீ அடிக்கடி இந்த கோவிலுக்கு வந்துருக்க நான் உன்னை பார்த்து இருக்கேன்.

அப்படியா நான் உங்களை பார்த்ததில்லை.

எங்க நீ தலையை நிமிர்தினால்தானே தெரியும்!

12 Comments

  1. Super stroy . இது போன்று கதை எழுத ங்கள் ஆசிரியரே. இந்த கதை அருமை…

  2. Ex a lent, supper

  3. Cont..mannichudunaga ram story

  4. அருமையான கதை ! காம கதை என நினைத்து படிக்கையில் ! அழகான காதல் கதையை உணர தேர்ந்தது! சிறு வயது காதலை நினைவு கூற வைத்தது !

  5. story touch my heart

  6. Woooow excellent story…vaasiththu kondirukkumbothu neraya edangalil kan kalangi vidden…❤❤❤

Comments are closed.