சரிடியம்மா உன் இஷ்ட்டம் போல செய் , எல்லாம் நம்ம குடும்பத்துகாகதான்னு மட்டும் ஞாபகம் வெச்சுக்கோ
வேண்டா வெறுப்பாக காப்பி அருந்தி விட்டு சிறிது நேரம் கட்டிலில் கண் அயர்ந்தேன்.
சிறிது நேர உறக்கத்து பின் உதயன் என் சேலை கொசுவத்தை அவிழ்ப்பது போல கனவு வந்தது
ஹேய் சீய் என்று தட்டி விட்டு எழுந்து பேந்த பேந்த விழித்தேன்.
ச்சே என்ன கனவு இது. முதல்ல இங்க இருந்து கிளம்பனும்.
கிளம்பும் பொது அம்மா என்னிடம்”ஏன் மதிக்குட்டி ஒரு வாரம் டைம் இருக்கே ” இப்பவே ஏன் கிளம்புற
இங்க பாருமா ஒரு மாசம் நான் வெளியூர் போயிருக்கேன்னு வெளில சொல்லாத.
வீட்டு பொண்ணு வெளிநாடு போறது உங்களுக்கு வேணுமின்னா சரியாக தெரியலாம் ஆனா
நாளைக்கு தங்கச்சி வீட்டுல தப்பா நினச்சு கல்யாணம் நடக்க விடாம பண்ணினா என்ன பண்ணுறது?.
உனக்கு பாசம் இருக்குன்னு எனக்கு தெரியாதா மதிக்குட்டி.
முன்பெல்லாம் இனித்த மதிக்குட்டி இப்போது அனாயசமாக காதில் விழுவது போல இருந்தது.
ஆமா உன் துணி எல்லாம் பேக் பண்ணலையா?
இல்லம்மா அதெல்லாம் ஆபிஸ்ல ஸ்போன்சர் பண்ணுவாங்க.
நான் பாட்டியை பார்த்துட்டு மறுபடியும் ஆபிஸ் போயிருவேன். நீ உடம்பை பார்த்துக்கோ.
தங்கச்சியை நல்லா தூங்கி எழுந்து, சாப்பிட்டு உடம்பை தேத்த சொல்லுங்க.
நீங்க ஏர்போர்ட் வரவேண்டாம். அடுத்த மாசம் நான் வந்துருவேன்
சரிடா செல்லம் என் மேல கோபம் வெச்சுக்காத டா.
உங்க மேல எனக்கு கோபம் இல்லமா சின்ன வருத்தம் தான். அதுவும் இந்த ஒரு மாச பிரிவில் சரி ஆயிரும் .
ஓகே மா பை. தங்கசிகிட்ட சொல்லிரு.
நைட்டே நான் பாட்டி ஊருக்கு கிளம்பியதில் அம்மாவுக்கு வருத்தம் என்று தெரியும் ஆனாலும் இப்போது அதை பற்றி கவலை பட நேரமில்லை.
இரவு எட்டு மணி பேருந்தில் ஏறி பாட்டி வீட்டுக்கு பயணம் ஆனேன்.
அதிகாலை ஐந்து மணிக்கு பாட்டியின் ஊரில் கால் வைத்தேன். நாய்கள் குறைக்கும் ஒளியை தவிர எதுவுமே கேட்கவில்லை.
கொஞ்ச தூரம் நடந்த பொது ஒரு வீட்டின் திண்ணையில் இருந்த பெரியவர்
“யாரது இந்த நேரத்துல?” என்று அதட்டினார்.
தாத்தா நான் செங்கனியம்மா பேத்தி , டவுன்ல இருந்து வாறேன்.
அவர் பாஷையில் பேசியதாலா? இல்லை பாட்டியின் பெயரை கேட்டதாலா தெரியவில்ல! தாத்தாவின் முகம் அந்த இருட்டிலும் பளபளத்தது.
Super stroy . இது போன்று கதை எழுத ங்கள் ஆசிரியரே. இந்த கதை அருமை…
Ex a lent, supper
Hi
Super
Super
Cont..mannichudunaga ram story
Nice ?
அருமையான கதை ! காம கதை என நினைத்து படிக்கையில் ! அழகான காதல் கதையை உணர தேர்ந்தது! சிறு வயது காதலை நினைவு கூற வைத்தது !
Nice story
story touch my heart
Hi
Woooow excellent story…vaasiththu kondirukkumbothu neraya edangalil kan kalangi vidden…❤❤❤