உனக்கு என்ன வேணும் மதி? 72

கோவில்ல அம்மன் முகத்துல இருக்குற அதே சாந்தம் உங்க பேத்தி கிட்ட இருக்கு.
எங்களுக்கு சீர் எதுவும் வேண்டாம் உங்க பேத்தியை மட்டும் தந்தால் போதும்.

பாட்டியை என்ன என்று நிமிர்ந்து பார்த்தேன். அவர் கண்களால் சும்மாயிரு என்று ஜாடை செய்தார்.

ஏற்கனவே ஒரு தரம் இந்த பொன்னை தர மாட்டோம்ன்னு சொல்லிட்டாங்க.
அவங்க சின்ன பொண்ணுக்குதான் திருமணம் நடக்கும் அவளை பண்ணிக்கோங்கன்னு சொன்னாங்க ஆனா
எங்க பையனுக்கு மதியைத்தான் பிடிச்சுருக்கு என்று புதிய அம்மாள் சொன்னதும் பாட்டிக்கு சந்தோஷம் மிகையானது.

சித்தியை ஓரக்கண்ணால் கவனித்தேன் அவர் குனிந்த தலையை நிமிர்த்தவில்லை.

புதிய அம்மாள் பாட்டியிடம் “அப்போ தட்டை மாத்திக்கலாமா ”

ஓ மாத்திக்கலாம் பாட்டியின் கண்களில் ஆனந்த கண்ணீர்.

என்ன நடக்குது இங்கே?

யார் இவர்கள்?

உதிக்கு நிச்சயம் நடக்கும் அதே நாள் எனக்கும் நிச்சயமா?

கண்ணில் நீர் கோர்த்த போதுதான் அந்த அம்மாளின் முகம் எங்கே பார்த்தேன் என்று பிடி கிட்டியது…உதி… உதியின் …அதே சிரிப்பு
அப்படியென்றால் உதி எங்கே? என் கண்கள் அலை மோதியது?

இப்போது அந்த அம்மாள் “சந்திரா மறைந்து இருந்தது போதும் உதயமாகி வெளியே வா”என்று கலை நயத்தோடு பேசினார்.

அங்கே என் உதி என்னை பார்த்து கண்ணடித்து சிரித்தார்.

எனக்கு உலகமே சுழல்வது போல இருந்தது, நடப்பது கனவா இல்லை நனவா???
நான் சுதாரித்து “எனக்கு மாப்பிளையிடம் தனியே பேச வேண்டும் ” என்றேன்.

மதி என்ன இது…

பாட்டி ப்ளீஸ் அவர் கிட்ட நான் சில கேள்விகள் கேக்கணும்.

உதியின் அம்மா “தாராளமா கேட்டுக்கோ ஆனா நல்ல நேரம் முடியறதுக்குள்ள தட்டை மாத்திக்கலாம்”
என்று பாட்டியிடம் தட்டை மாற்றிக்கொண்டார்கள்.

உதியின் விரலில் மதுமிதா என்ற பெயரிலும் என் விரலில் உதய சந்திரன் என்ற பெயரிலும் மோதிரங்கள் பரிமாறினோம்.

இப்போவாவது நான் மாப்பிள்ளை கிட்ட பேசலாமா?

ஓகே என்று அனுமதி தந்தார்கள்.

பாட்டி வீட்டில் இருந்து தள்ளி இருந்த ஆத்தங்கரைக்கு சென்று அமர்ந்து கொண்டேன்!
என்னை விட்டு கொஞ்சம் தள்ளி உதி அமர்ந்து கொண்டார்.

12 Comments

  1. Super stroy . இது போன்று கதை எழுத ங்கள் ஆசிரியரே. இந்த கதை அருமை…

  2. Ex a lent, supper

  3. Cont..mannichudunaga ram story

  4. அருமையான கதை ! காம கதை என நினைத்து படிக்கையில் ! அழகான காதல் கதையை உணர தேர்ந்தது! சிறு வயது காதலை நினைவு கூற வைத்தது !

  5. story touch my heart

  6. Woooow excellent story…vaasiththu kondirukkumbothu neraya edangalil kan kalangi vidden…❤❤❤

Comments are closed.