உனக்கு என்ன வேணும் மதி? 73

நான் வீட்டில் இருக்கும் பொது வந்த அந்த கனவு”உதய் என் கொசுவத்தை அவிழ்க்கும் கனவு ஞாபகம் வந்தது.

” ச்சே கொஞ்சம் நேரத்துல இப்படி அறிவில்லாம நடந்துகிட்டேனே!

சிறிது நேரத்தில் அறைக்கு வந்தவர் கையில் ஒரு பார்சல் இருந்தது. இப்போது என் முன்னாடியே அவர் அம்மாவுக்கு கால் செய்தார்.

அம்மா நான் உதி பேசுறேன்

……………………………………

என்னம்மா எல்லா ஏற்பாடும் முடிந்ததா?

……………………………….

ஹ்ம்ம் ஓகே நாளைக்கு சாயந்திரம் வந்துருவேன்

………………………………………….

நாளை மறுநாள் தானே நிச்சயம் செய்ய போகிறோம்

………………………………………

என்னை கீழ்க்கண்ணால் பார்த்தபடியே “ஒரு வாரத்தில் திருமணம்! பெண் வீட்டார் சம்மதித்தார்கள் தானே?
இப்போது என் கண்ணில் கண்ணீர் உருண்டு கீழே விழுவது போல அமர்ந்திருந்தேன்.
தேவை இல்லாமல் சீன க்ரியேட் செய்ய விரும்பாமல், என் முகத்தில் குளிர்ந்த நீரை அடித்து கழுவினேன்.

பிறகு நானோ அவரு பேசவே இல்லை. விமானத்தில் ஏறி ஊருக்கு பயணமானோம் .
சென்னை ஏர்போர்ட்டில் இறங்கியதும் என்னை ஒரு டேக்சியில் ஏற்றி அனுப்பினார்.

தேன்க் யு சார் என்றேன் நிமிராமலேயே!

ஹ்ம்ம் குட் இப்படித்தான் ஞாபகமா இருக்கணும்.

நம்ம ரெண்டு பெரும் ஒன்னா ஆபிஸ் போக வேண்டாம்! நீ இப்போ பாட்டி வீட்டுக்கு போறியா இல்லை உன் வீட்டுக்கு போகிறாயா?

பாட்டி வீட்டுக்கு சார். ரெண்டு நாள் அங்க இருந்துட்டு என் வீட்டுக்கு வந்துருவேன்.

ரெண்டு நாள் கழிச்சு ஆபிஸ் வந்தால் போதும். நாம பேசியதை விட கூடவே உன் அக்கவுண்ட்டில் க்ரெடிட் ஆகி இருக்கும்.

எனிவே பை & தேங்க்ஸ் பார் யுவர் கம்பெனி என்று நக்கலாக சொல்லி விட்டு சென்றார்.

நான் பாட்டி வீட்டுக்கு கனத்த மனதுடம் பயணம் செய்தேன். என் கண்ணீர் மட்டும் நிக்கவே இல்லை.

பாட்டி வீட்டுக்கு ஒரு கிலோ மீட்டர் க்கு முன்பு வண்டியை நிறுத்த சொல்லி முகம் அலம்பினேன். என் சோர்வு ஒரு பயண களைப்பாகவே இருக்கட்டும்.

டவுனில் உள்ள பிரவுசிங் செனடர் சென்று என் அக்கவுண்ட்டில் இருந்த பணம் பாதியை அம்மாவின் அக்கவுன்ட்டுக்கு மாற்றினேன்.

என்னுள் எல்லாவற்றையும் புதைத்துக்கொண்டு பாட்டி வீட்டில் இறங்கினேன்.

பொங்கல் அடுத்து வருவதால் பாட்டியின் வீட்டை சுற்றிலும் வெள்ளை அடித்து சுத்தம் செய்து இருந்தார்கள்.
வீட்டின் அருகே செல்லும் பொது நெய் மனம் வந்தது, எல்லோர் வீட்டிலும் காப்பு கட்டிக்கொண்டு இருந்தார்கள்.

12 Comments

  1. Super stroy . இது போன்று கதை எழுத ங்கள் ஆசிரியரே. இந்த கதை அருமை…

  2. Ex a lent, supper

  3. Cont..mannichudunaga ram story

  4. அருமையான கதை ! காம கதை என நினைத்து படிக்கையில் ! அழகான காதல் கதையை உணர தேர்ந்தது! சிறு வயது காதலை நினைவு கூற வைத்தது !

  5. story touch my heart

  6. Woooow excellent story…vaasiththu kondirukkumbothu neraya edangalil kan kalangi vidden…❤❤❤

Comments are closed.