உனக்கு என்ன வேணும் மதி? 73

செங்கண்டி பேத்தியா. வா வா என்று நாலு சந்து கடந்த ஒரு பண்ணை வீட்டில் சென்று கதவை தட்டினார். பாட்டிதான் வந்து கதவை திறந்தார்.
கையில் ஒரு அருவாள் இருந்தது.

என்ன பாட்டி ஒரே போடா போட்டுரலாம்னு பாக்குறியா?

என்னை பார்த்ததும் பாட்டி இழுத்து கட்டி அணைத்துக்கொண்டார். என் கண்ணே எப்படியம்மா இருக்க?

நான் நல்லா இருக்கேன் பாட்டி நீ எப்படி இருக்க?

உன் கல்யாணத்தை பாக்குற வரைக்கும் என் கட்டை போகாது என்று சிரித்தார்.

பாட்டி ஒரு ரெண்டு நாள் உன் கூட தங்கிகலாம்னு வந்துருக்கேன்.

இன்னும் ரெண்டு நாள் சேர்ந்தாப்புல தங்கிக்கோடா இது உன் வீடு.

இப்படி எனக்கென வீடு இருப்பது சித்தி அம்மாவுக்கு தெரிந்தால் உடனே விற்று காசாக தரும்படி கேட்பாள் என்று நினைத்து சிரித்துக்கொண்டேன்.

உருவத்தில் நான் என் அம்மா சாயல் ஒத்து இருந்ததால் பாட்டி என்னை கட்டி
கொண்டார்.

பொழுது புலர தொடங்கியது.

சித்தி வந்த பிறகு பாட்டி வீட்டுக்கு வருவது குறைந்து போயிருந்தது.
அப்பா இறந்த பிறகு சுத்தமாக நின்று இருந்தது. ஆனாலும் அருகில் இருக்கும்
மருந்து கடைக்கு இடையில் போன் செய்து பாட்டியிடம் பேசுவேன்.

நான் சொல்லாமல் கொள்ளாமல் வந்தது பாட்டிக்கு இன்ப அதிர்ச்சி. காலை சமையலே தட புடலாக இருந்தது.

பாட்டி

சொல்லுடிம்மா

எனக்கு அடுத்தவாரம் தீட்டு எனக்கு அந்த சமயத்துல வயிறு வலி அதிகமா இருக்கும் ஏதாவது மருந்து குடேன்.

இதொண்ணும் பெரிய ஆரிய வித்தை இல்லை தண்ணீருள கொஞ்சம் வெந்தயம் இரவில் ஊற வெச்சு
அதை காலைல குடிச்சா வயிறு சூடு குறையும்.

12 Comments

  1. Super stroy . இது போன்று கதை எழுத ங்கள் ஆசிரியரே. இந்த கதை அருமை…

  2. Ex a lent, supper

  3. Cont..mannichudunaga ram story

  4. அருமையான கதை ! காம கதை என நினைத்து படிக்கையில் ! அழகான காதல் கதையை உணர தேர்ந்தது! சிறு வயது காதலை நினைவு கூற வைத்தது !

  5. story touch my heart

  6. Woooow excellent story…vaasiththu kondirukkumbothu neraya edangalil kan kalangi vidden…❤❤❤

Comments are closed.