உனக்கு என்ன வேணும் மதி? 73

நீயும் விஜியும் நட்பை காதலாக குழப்பும் தருணத்தில்தான் நான் உன்னை சந்தித்தேன்.
விஜி உன்னை காட்டிய அன்றே என் மனதை தொலைத்து விட்டேன்

………………………………..

அப்போது வெறும் பனிரெண்டாம் வகுப்புதான் படித்துகொண்டிருந்தேன்
நீ பதினொன்றாம் வகுப்பில் படித்துக்கொண்டு இருந்தாய்.

ம்..ம்

விஜி உன்னை காட்டி என் தோழி என்றான். அதன் பின் நட்பின் பல கதைகளை எடுத்து சொல்லி உன்னிடம் இருந்த ஈர்ப்பை மாற்றினேன்.
அவனும் காவியாவை விரும்பி இப்போது மனம் முடித்து நன்றாக வாழ்கிறான்.

…………………………………………………..

ஆனால் என் அப்பா நான் சுயமாக கால் ஊன்றினால் மட்டுமே திருமணம்னு சட்டம் போட்டார்.,
உன்னை என் அப்பா கம்பெனிக்கு ரெக்கமெண்டு செஞ்சதே நாந்தான். நீ எங்கயும் போயிட கூடாதுன்னு நான் கவனமா இருந்தேன்.

…………………………………….

வெளி நாட்டுல படிக்க போனப்பவும் உன் ஞாபகம்தான். உன் ஈகோவை தூண்டி விட்டதால
நீ யாரையும் கல்யாணம் பண்ண மாட்டன்னு எனக்கு ஒரு நம்பிக்கை.

……………………………………

அப்புறம் உன் சித்தி கிட்ட பொண்ணு கேக்க அம்மாவை அனுப்பினேன்.
அவங்க உன் தன்கைக்குதான் கல்யாணம் செய்யலாம்னு பிடிவாதமா சொல்லவும் அம்மா வேற வழி இல்லாம திரும்பி வந்துட்டாங்க.

நீ வேற என்னை கண்டால ஓடுற? உனக்கு என்னை பிடிச்சு இருக்கணும்ன்னா நாம ரெண்டு பெரும் நெருங்கி பழகனும்னு தான்
அமெரிக்காக்கு ரெண்டு பெறுமா போக ஏற்பாடு செஞ்சேன்.

என்னதான் கல்யாணம் பண்ணினாலும் உன் தங்கச்சிக்கு நான் செலவு பண்ணினா உனக்கு பிடிக்காதுன்னுதான்
உனக்கு சம்பளம் சேர்த்து கொடுத்தேன்.

உண்மையை சொல்லனும்னா கடந்த ஒரு மாசமும் நான் எவ்வளவு சந்தோஷமாக இருந்தேன் தெரியுமா?
அந்த சந்தோஷம் நிலைக்கனும்னுதான் உன்னிடம் கொஞ்சம் அதிகமாவே நெருங்கினேன்.

ஆனா நீ என் முத்தத்தை மட்டும்தான் ஏற்றுக்கொண்டாய்! அதிலேயே உன் சம்மதம் கிடைத்து விட்டது!
அதனால்தான் அம்மாவிடம் போன் செய்து பாட்டியை சந்திக்குமாறு சொன்னேன்!

என்கிட்டே ஒரு வார்த்தை சொல்லி இருக்கலாம். நான் எவ்வளவு அழுதேன் தெரியுமா?
என் குரலில் இருந்த வலி உதி உணர்ந்திருக்க வேண்டும்!

ப்ளீஸ் மதுக்குட்டி என்று என் முன் மண்டியிட்டு என் கைகளை பிடித்துக்கொண்டார்.

12 Comments

  1. Super stroy . இது போன்று கதை எழுத ங்கள் ஆசிரியரே. இந்த கதை அருமை…

  2. Ex a lent, supper

  3. Cont..mannichudunaga ram story

  4. அருமையான கதை ! காம கதை என நினைத்து படிக்கையில் ! அழகான காதல் கதையை உணர தேர்ந்தது! சிறு வயது காதலை நினைவு கூற வைத்தது !

  5. story touch my heart

  6. Woooow excellent story…vaasiththu kondirukkumbothu neraya edangalil kan kalangi vidden…❤❤❤

Comments are closed.