உனக்கு என்ன வேணும் மதி? 73

டாக்டர் வேண்டாம் என் பெட்டியில ஒரு வெள்ளை டப்பா இருக்கும் எடுங்க அப்படியே ரூம் பாய் கிட்ட சுடுதண்ணி கொண்டு வர சொல்லுங்க

ஓகே ஓகே

இந்த வலியே இவரால் காண முடியவில்லை இவர் மனைவியின் பிரசவ வலியை எப்படி காண்பார் என்று அந்த நேரத்திலும் உதயின் மீது பரிதாபம் வந்தது.

மின்னல் வேகத்தில் எல்லாம் கொண்டு வந்தார்.நான் பாட்டி வறுத்து அரைத்து கொடுத்த வெந்தய பொடியை சுடு தண்ணியில் கலக்கி குடித்தேன், கசப்பாக இருந்ததாலும் வெந்தய மணம் குமட்டிக்கொண்டு வந்தது. எப்படியோ சமாளித்தேன்.

சிறிது நேரத்தில் வயிற்று வலி குறைந்தது கொஞ்சம் கண்ணயர்ந்து உறங்கினேன்.கால் குடைச்சல் அதிகமாக இருந்தது கொஞ்ச நேரத்தில் விழிப்பு வந்த பொது உதய் என் காலை பிடித்து விட்டு கொண்டு இருந்தார்.

வாட் இஸ் திஸ் உதய் ?

பரவாயில்லை மதி என் பிரெண்டுக்காகதானே .

தேங்க்ஸ் உதய்.

எழுந்து பாட்டி கொடுத்த எண்ணெய் மிக்ஸ் தலையில் தேய்த்தேன்.

ஹேய் இந்த ஸ்மெல் நல்லா இருக்கு என்று உதய் என் பின்னால் இருந்து மணந்து பார்த்தார்.

நெல்லிக்காய், சீயக்காய், புனுகு எல்லாம் போட்டு என் பாட்டி காய்ச்சி கொடுத்தாங்க உதய்.

அப்படியே என் தலை முடியை கோதி விட்டார்.என் பின்னங்கழுத்தில் இருந்து மேலே என் முடியை அலைந்து பார்த்தார்.

என் கணுக்காலில் இருந்து மயிர்கூச்செரிந்தது. உதையின் மூச்சுக்காற்று என் கழுத்தில் ஊர்ந்தது.

என் கண்கள் மூடிய நிலையில் ஒரு மோன நிலையில் நின்றிருந்தேன்.

மெல்ல என்னை தன பக்கம் திருப்பினார்.

நான் ஏதோ ஒரு மோன நிலையில் மிதந்து கொண்டு இருந்தேன்.

இது என்ன என்று உணர்வதற்கு முன்னே உதயின் இதழ் என் இதழ்களை சுவைக்க தொடங்கியது. என் உடல் நிலை மறந்து நானும் ஒத்துழைத்து கொண்டிருந்தேன்.

திடீரென்று சுய நினைவை அடைந்தவர், என்னை மாற்றி நிறுத்தி ஐ எக்ஸ்ட்ரீம்லி சாரி மதி என்று விலகிச்சென்றார்.

எதையும் விளங்கிக்கொள்ளும் நிலையில் நான் இல்லை. இது காதலா? காமமா?

இது காதல் என்றால் விஜி மீது வந்த காதலுக்கு என்ன பெயர்.

இருவரின் நெருக்கம் மட்டுமே இந்த நிலைக்கு காரணமா?

இல்லை என் மனதில் உதயின் மீது காதல் மலர்ந்து விட்டதா?

அன்று விஜிமீது வந்தது வெறும் இன்பாச்சுவேஷன் என்று புரியத்தொடங்கியது!!!

ஆனால் உதய் வெளியே சென்றவர் திரும்ப வராமல் போகவே அவருக்கு என் மீது காதல் இல்லை என்று உறுதி செய்து கொண்டேன்.

ஒரு மணி நேரம் கழித்து நான் உறங்கி இருப்பேன் என்று முடிவு செய்து அறைக்குள் வந்தவர் யாருக்கோ போன் செய்தார். அது அவருடைய அம்மா என்பது பேச்சிலேயே தெரிந்தது.

இல்ல மா…தூக்கம் வரலை அதான் கூப்பிட்டேன்…

12 Comments

  1. Super stroy . இது போன்று கதை எழுத ங்கள் ஆசிரியரே. இந்த கதை அருமை…

  2. Ex a lent, supper

  3. Cont..mannichudunaga ram story

  4. அருமையான கதை ! காம கதை என நினைத்து படிக்கையில் ! அழகான காதல் கதையை உணர தேர்ந்தது! சிறு வயது காதலை நினைவு கூற வைத்தது !

  5. story touch my heart

  6. Woooow excellent story…vaasiththu kondirukkumbothu neraya edangalil kan kalangi vidden…❤❤❤

Comments are closed.