உனக்கு என்ன வேணும் மதி? 73

அந்த நேரம் நான் எல்லாம் மறந்து அவர் கன்னத்தில் நச்சென்று ஒரு முத்தம் இட்டேன்.
நான் கொடுத்த முதல் முத்தம்! உதி என்னை அவர் தோளில் சாய்த்துக்கொண்டு மேலே சொல்ல ஆரம்பித்தார்!

அமெரிக்காவில் என்னை கண்ட்ரோல் பண்ண ரொம்ப சிரம பட்டேன்.
எட்டு வருடம் காத்திருந்த எனக்கு எட்டு நாட்கள் காத்து இருக்க முடியவில்லை தெரியுமா?

நான்…

நீ எதுவும் சொல்ல வேண்டாம்டா நீ எதையும் நினச்சு கவலை பட வேண்டாம்”இனி உனக்கு நான் இருக்கேன் ” என் நெற்றி முத்தமிட்டார்
நான் அவர் தொழில் சாய்ந்து அழுது விம்மினேன். என் பாரம் குறைந்தது.

வீட்டுக்கு வந்தோம். என்னம்மா என் பையனுக்கு இண்டர்வியு முடிஞ்சுதா?

முடிஞ்சுதுங்க அத்தை.

பாருடா…ஹ்ம்ம் அவ்ளோக்கு போயிடுச்சா? அடுத்த மாசம் கல்யாணம். உங்க ரெண்டு பேருக்கு ஓகே தான.

அம்மா என்ன இது? உதி பதறினார்.

ஹ ஹ ஹா அவசரம் பாரு! பத்து நாளுல கல்யாணம். என்னடா சந்திரா உனக்கு சந்தோஷம்தானே .

என்ன என்று உதயை பார்த்தேன்.

உன் கல்யாணம் முடிஞ்சுதான் உன் தங்கை கல்யாணம் ஓகே தான.

அனைவர் முன்னிலையில் உதயை அணைத்துக்கொண்டேன். அந்த பொன்னான வேளையில் அங்கு சந்தோஷம் மட்டுமே இருந்தது.

பாட்டியின் ஆசிர்வாதத்துடன் எங்கள் கல்யாணமும் முடிந்தது.

பத்தே மாசத்தில் அழகான பெண் குழந்தையை பெற்று எடுத்தோம். கணவர் என் குழந்தைக்கு ஸ்மிதா என்று பெயரிட்டார்.

எங்கள் குடும்பம் நிறைவோடு செல்கிறது.

(முடிந்தது )

12 Comments

  1. Super stroy . இது போன்று கதை எழுத ங்கள் ஆசிரியரே. இந்த கதை அருமை…

  2. Ex a lent, supper

  3. Cont..mannichudunaga ram story

  4. அருமையான கதை ! காம கதை என நினைத்து படிக்கையில் ! அழகான காதல் கதையை உணர தேர்ந்தது! சிறு வயது காதலை நினைவு கூற வைத்தது !

  5. story touch my heart

  6. Woooow excellent story…vaasiththu kondirukkumbothu neraya edangalil kan kalangi vidden…❤❤❤

Comments are closed.