ஓ நாளை விடிந்தால் தை பொங்கல்… ஊ ரே விழாக்கோலம் பூண்டிருந்தது. சிறுவர்கள் அங்கும் இங்கும் ஓடி விளையாடினார்கள்.
பாட்டி வெளியே வந்து என்னை கட்டி தழுவிக்கொண்டார்.
பாட்டி…நான் வருவேன்னு உனக்கெப்படி தெரியும்…
என் பேத்தி என்னை பார்த்துட்டுதான் ஊருக்கு போவான்னு என் மனசு அடிச்சு சொல்லுச்சு டா.
என் செல்ல பாட்டி …ப்ச்…. ப்ச் …
போதும்டியம்மா கட்டிக்க போறவனுக்கு பாக்கி வெய்யு…
உனக்கு போகத்தான் அவனுக்கு.
ஏய் என்னடி இது அவன் இவன்னு பேசுர? மரியாதையா அவருன்னு சொல்லு.
ஆமா என்ன கட்டிக்க க்யுல ஆள் நிக்குதுன்னு உனக்கு நினைப்பா பாட்டி, எனக்கு கல்யாணமெல்லாம் வேண்டாம் பாட்டி
நான் இப்படியே உன் கூட ஜாலியா இருந்துக்குறேன்
நீ மட்டும் உம் ன்னு சொல்லு இப்பவே பேக் பண்ணி இங்க வந்துறேன்.
பாட்டி நான் அம்மாவையும் தங்கச்சியும் பாக்க போகணும்.
இப்பவே என்னடி அவசரம் ரெண்டு நாள் கழிச்சு போ.
இல்ல பாட்டி தங்கச்சி கல்யாணதுக்காகதான் இந்த பணம் சம்பாதிக்க போனேன், அதை முறையாக கொண்டு சேர்க்கணும்.
நீ சொல்லுறதை பார்த்தா நான் பிடுங்கிக்குவேன்னு எனக்கே சந்தேகமா இருக்கு.
அய்யோ அப்படி இல்ல பாட்டி, சித்திகிட்ட ஒப்படைச்சா என் மனசு ஆறும். (பாட்டியிடம் அம்மா என்று சொல்ல மாட்டேன் ).
பரவாயில்லடா உனக்கு ரொம்பவும் அசதியா இருக்கும், வெந்நீர் போட்டு வெச்சுருக்கேன் குளிச்சுட்டு வா சேந்து சாப்பிடலாம்.
பாட்டியிடம் சிறிது நேரம் கொஞ்சிவிட்டு குளிக்கப்போனேன். குளியலறைக்கு சென்றதும் உதயின் ஞாபகம் வந்தது.
Super stroy . இது போன்று கதை எழுத ங்கள் ஆசிரியரே. இந்த கதை அருமை…
Ex a lent, supper
Hi
Super
Super
Cont..mannichudunaga ram story
Nice ?
அருமையான கதை ! காம கதை என நினைத்து படிக்கையில் ! அழகான காதல் கதையை உணர தேர்ந்தது! சிறு வயது காதலை நினைவு கூற வைத்தது !
Nice story
story touch my heart
Hi
Woooow excellent story…vaasiththu kondirukkumbothu neraya edangalil kan kalangi vidden…❤❤❤