உனக்கு என்ன வேணும் மதி? 73

………………………………………….

ஹ்ம்ம் நல்லா இருக்கேன்…

…………………………………………

இல்லம்மா….

……………………………………….

ஹ்ம்ம்….

………………………………………..

ஹ்ம்ம்…

அந்த அம்மாள் ஏதோ சொல்ல சொல்ல அவரும் ஹ்ம்ம் கொட்டி கொண்டு இருந்தார்.

கடைசியில் “அம்மா நாம கடைசியா கேட்ட பொன்னை மறுபடியும் ட்ரை பண்ணி கல்யாணத்துக்கு ஓகே பண்ணிருங்க என்றார்”.

என் தலையில் இடி விழுந்த போல ஆனேன். அப்படி என்றால் இவர் மனதில் நான் இல்லை. உடல் சோர்வும் சுயபச்சாதாபமும் சேர்ந்து மனதை அழுத்தியது.

என் பெட் சீட்டை நன்றாக இழுத்து போர்த்தி குட் நைட் மதி என்றார்.

குட் நைட் என்று முனங்கி விட்டு உறங்க ஆரம்பித்தேன்.

பின் வந்த ஆறு நாட்கள் உதய் என்னை பார்த்துக்கொண்டது ஒரு அம்மாவின் அன்பு கலந்து இருந்தது. அன்றைய தினத்துக்கு பிறகு தினமும் என் தலை கொதி கூட் நைட் சொல்வது வாடிக்கை ஆனது.

இருபத்து ஐந்து நாட்கள் முடிந்தது.

அப்புறம் மதி அமெரிக்கா புடிச்சு இருக்கா?

நல்லா இருக்கு உதய் .

பேசாம இங்கயே வேலை வாங்கி தருகிறேன் இருந்து கொள்கிறாயா?

ஐயோ என்னால் முடியாது”” சொர்கமே என்றாலும் அது நம்மூரை போல வருமா” என்று பாடி காட்டினேன்.

ஹ ஹ ஹா நீ சொல்லுறதும் சரிதான். சேலை தாவணி எல்லாம் இங்க பார்க்க முடியுமா என்று கண் அடித்தார்.

நாளை நான் சேலை அணிந்து கொள்ளலாம் என்று நினைத்தேன் மேட்ச் ப்ளவுஸ் என்னிடம் இருக்கும் சரி உதயுடன் ஷாப்பிங் செல்லலாம் என்று சேலை கிடைக்கும் மாலுக்கு போக சொன்னேன்.

உதய் என்னை போதயோடு பார்த்து என்னை நல்லவனாகவே நாட்டுக்கு திரும்ப விடு தாயே என்று சலாம் போட்டார்.

போங்க நீங்க வேற என்று முதுகை பிடித்து தள்ளினேன்.

ஒரு பெரிய கடையில் சென்று தேட துடன்கினோம். ஒரு இளம் ரோஸ் நிறத்தில் முத்து வேலை செய்த புடவை எனக்கு மிகவும் பிடித்து இருந்தது. அதன் விலை இந்தியன் மதிப்பில் பதினைந்தாயிரம் ரூபாய். வேகமாக வைத்து விட்டு ஒரு ஆகாய நீல புடவையை தேர்ந்தெடுத்து பில் போட செய்தேன்.

சிறிது நேரத்தில் உதயும் சில பர்சேஸ் பேகோடு வந்தார். இருவரும் மகிழ்ச்சியாகவே ஹோட்டல் அறைக்கு திரும்பினோம், வழியில் சித்திக்கு, தங்கைக்கு, பாட்டிக்கு என்று பரிசுகள் வாங்கினேன். வீட்டுக்கு செல்லும் பொது எப்படி மகிழ்வார்கள் என்று கற்பனை செய்து கொண்டேன்.

12 Comments

  1. Super stroy . இது போன்று கதை எழுத ங்கள் ஆசிரியரே. இந்த கதை அருமை…

  2. Ex a lent, supper

  3. Cont..mannichudunaga ram story

  4. அருமையான கதை ! காம கதை என நினைத்து படிக்கையில் ! அழகான காதல் கதையை உணர தேர்ந்தது! சிறு வயது காதலை நினைவு கூற வைத்தது !

  5. story touch my heart

  6. Woooow excellent story…vaasiththu kondirukkumbothu neraya edangalil kan kalangi vidden…❤❤❤

Comments are closed.