மெய் மறந்தேன் – Part 1 124

”நீதான்.. ஜாலியா கல்லை போடுவியே..”
”ஏதோ.. ஒரு ஜாலிக்கு கொஞ்ச நேரம் பேசலாம்..! அதுக்காக…”
”டேய்.. அது என்கிட்டல்லாம் மூஞ்சி குடுத்தே பேசாதுடா..! ஆனா உன்கிட்ட… சிரிச்சு.. சிரிச்சு பேசும்..! அத நீ யூஸ் பண்ணி பாரேன்..”
”வேணான்டா.. அதெல்லாம் ஒர்க் அவுட் ஆகாது..”
”ஹா.. சும்மா.. வெளையாட்டா… மூவ் பண்ணு மச்சி..! வந்தா.. மாங்க..! போனா மயிறு..!!” என உசுப்பேற்றினான் ராமு.
சசியின் மனதில் சபலம் தோன்றியது. ஒரு முயற்சி செய்துதான் பார்க்கலேமே.. ??
டீக்கடைக்கு டீ மாஸ்டர் வந்து விட்டதால் அண்ணாச்சியம்மா மளிகைக் கடைக்கு வந்து விட்டாள். ராமு தையல் வேலையைத் தொடர… சசி எழுந்து தண்ணீர் குடித்து.. கண்ணாடி முன்னால் நின்று.. தன் முகத்தை ஒரு முறை பார்த்துக் கொண்டு… அண்ணாச்சியம்மாவைப் பார்க்கப் போனான்.
”எங்கடா..?” என்று கேட்டான் ராமு.
”சும்மா.. அண்ணாச்சியம்மாவோட கல்லை போட..” என்றான்.
அரிசிக் கடை சாத்தப் பட்டிருந்தது. மளிகைக் கடைக்குப் போய்.. முன்னால் இருந்த பலகை மீது கையூன்றி நின்றான்.
”போண்டா கூட நல்லாத்தான் இருக்கு.. யாரு போடறது..?” என்று அவள் வாயைக் கிளறினான்.
சேரில் உட்கார்ந்து கொண்டிருந்தவள்.. அவனைப் பார்த்தபடி..
”நான்தான்..” என்றாள்.
”நல்லாவே போடறீங்க..?” டீக்கடையைப் பார்த்தான். மாஸ்டர் டீ ஆற்றிக் கொண்டிருக்க… கடை முன்னால் நின்றபடி இரண்டு பேர் சிகரெட்டில் புகைந்து கொண்டிருந்தனர்.
சசி மீண்டும் அவளைப் பார்த்தான்.
”ஏன்.. அண்ணாச்சி போட மாட்டாரா..?”
”ஓ.. போடுவாரே..” என்றாள்.
”நல்லா போடுவாரா..?”
”ஏதோ.. அவரளவுக்கு..”
”நல்லாருக்குமா..?”
அவனை முறைத்தாள். பின் நெஞ்சகம் விம்ம ஒரு நெடுமூச்சு விட்டு சேரை விட்டு எழுந்து வந்தாள். ரோட்டை ஒரு பார்வை பார்த்து விட்டு.. அவன் மேல் பார்வையை ஊன்றினாள். அவள் கண்களை நேருக்கு நேராக சந்திக்க பயமாக இருந்தது. கொஞ்சம் பார்வையை மாற்றினான். பின் அவளைப் பார்த்து சிரித்தான்.
”எனக்கு ஒரு.. டவுட்டு அண்ணாச்சிமா..”
”என்ன..?”
”ரொம்ப நாளா உங்கள கேக்கனும்னு நெனச்சிட்டுருந்தேன்..”
”என்னைவா..?”
அவள் பார்வையே நேருக்கு நேராக சந்தித்தான். அவள் பார்வை அவனை ஊடுருவித் துளைத்தது. அவள் பார்வையில் சிறிதும் தயக்கமோ தடு மாற்றமோ இல்லை.
”ம்..ம்ம்.. தப்பா நெனைச்சிக்க மாட்டிங்களே..?”
”ஆனா.. நான் என்னை தர்றதா இல்லையே..” என்றாள்.
”சே.. தப்பா மீனிங் பண்ணாதிங்க.. இது வேற மேட்டர்..”
”மேட்டரா…?”
” ம்..ம்ம். .”
”என்ன..?” என்று லேசாக முன்னால் குணிந்தாள்.
”நீங்க லவ் பண்ணியிருக்கீங்களா..?” என்று சிரித்துக் கொண்டு கேட்டான்.
”அத தெரிஞ்சு நீ என்ன கிழிக்கப் போற..?”
”புதுசா.. எதையும் கிழிக்கப் போறதில்ல.! இல்ல.. இப்பவே.. இத்தனை ஃபிகரா… பியூட்டியா.. இருக்கீங்கன்னா.. டீன் ஏஜ்ல.. எப்படி இருந்துருப்பீங்க… ஸோ….” என இழுத்தான்.
”ஸோ…?”
”நீங்க லவ் பண்ணாமயா இருந்துருப்பீங்க..? உங்களுக்கு நிறைய பிரபோஷல் வந்துருக்கும் இல்ல..? அதுல.. ஏதாவது ஒன்னு.. உங்களுக்கு புடிச்சதா இருந்துருக்கலாம்.. இல்ல….?”
கண்களை இமைக்காமல் அவனையே பார்த்தாள். அவள் மனத்திரையில் பருவ வயது.. நினைவுகள் ஓடிக் கொண்டிருக்கலாம..!
ஒரு பெருமூச்சு விட்டாள்.
”ம்..ம்ம்..”
”வாவ்..! யாரு.. அண்ணாச்சியவா..?”