மெய் மறந்தேன் – Part 1 124

”ஏன்டா.. கீழ இருக்கற கடைல போய் பால் வாங்கிட்டு வரதுக்கு இவ்வளவு நேரமா..?”என்று கேட்டாள் குமுதா.
”உனக்கு வேற.. வேலை இல்ல..! சீக்கிரம் காபி கலக்கு..!” என்றான்.
இன்னும் இடுப்பிலே தன் இருந்த குழந்தையைக் கீழே இறக்கி விட்டாள்.
”இவள கொஞ்சம் பாத்துக்க..”
கதவைச் சாத்தி விட்டு.. குழந்தையைக் கையில் எடுத்தவாறு கேட்டான்.
”ஆமா.. எதுத்த வீட்ல இருக்கே.. அதுக்கு என்ன வயசிருக்கும்..?”
”தெரியலியே.. காலேஜ் போறா. அது மட்டும் தெரியும்” என்றாள் குமுதா.
”ஏய்.. நா கேட்டது.. மகள இல்ல.. அம்மாவ..” என்றான்.
குபீரெனச் சிரித்தாள் குமுதா.
”அடப்.. பாவி.. மகள விட்டுட்டு.. அம்மாவ சைட்டடிக்கறியா..?”
”அட..ச்ச.. நீ ஒண்ணு..” சிரித்தான். ”இன்னும் இளமையா இருக்கேனு கேட்டேன்..”
”மகள விடவா..?” ஒரு மாதிரியாகப் பார்த்தாள்.
”சரி.. மக எப்படி..?”
”அத.. நீயே பாத்து தெரிஞ்சுக்க..”
”ம்.. ம்ம்..! பாத்தேன்..! பல்லி மாதிரி இருக்கு.. படு லீன்..!!”
”அதானே.. நீயாவது.. பாக்காம இருக்கறதாவது..?” எனச் சிரித்தாள் குமுதா.
குழந்தையை மடியில் வைத்துக் கொண்டு சோபாவில் உட்கார்ந்தான். டி வி ரிமோட்டை எடுத்து சேனல்களை மாற்றினான். குழந்தையும் அவனோடு சேர்ந்து.. ரிமோட்டை அழுத்தினாள். சிறிது நேரத்தில் குமுதா காபியோடு வந்தாள்.
”ம்..ம்ம்..! பால் எங்கடா வாங்கின..?” என்று அவன் கையில் கொடுத்துக் கொண்டே கேட்டாள்.
”அண்ணாச்சி கடைலதான்..! ஏன்..?”
”பால் திக்காவே இல்ல..” என்று அவளும் உட்கார்ந்தாள்.
காபி குடித்தனர். சசி ”சரி.. அண்ணாச்சியம்மாக்கு என்ன வயசிருக்கும்..?” எனக் கேட்டான்.
அவனை வியப்பாகப் பார்த்தாள் குமுதா.
”என்னடா.. எல்லாம்.. பொம்பளைங்க வயசாவே கேக்கற..?”
”அட.. சும்மா.. சொல்லேன்…?”
”ம்.. ம்ம்.. என்ன.. ஒரு முப்பது வயசு இருக்கும்..!!”
”சரி.. அண்ணாச்சிக்கு..?”
”அவருக்கு…அம்பது பக்கம் இருக்கும்னு நெனைக்கறேன்..”
”ரொம்ப கேப்.. இல்ல..?”
”அது சரிடா.. நீ எதுக்கு.. இதெல்லாம் விசாரிக்கற..?” என்று இள நகையுடன் கேட்டாள்.
”சும்மாதான்..! ஒரு இன்பர்மேஷனுக்காக..” என்று சிரித்தான்.
நம்பமாட்டாமல் அவனையே பார்த்தாள்.
”என்ன பாக்ற..?” என்று கேட்டான்.
”ஹ்ம்.. என் தம்பிக்கு.. லவ் பண்ண.. எள வயசு பொண்ணுக எவளுமே கெடைக்கலியேனு பாத்தேன். ” என்று சிரித்தாள்.
அவள் தலை மீது தட்டினான்.
”நீ ஒருத்தி போதும்..! வெளங்கிரும்..!!”
”பின்ன.. என்னடா..? ஒரு இது இல்ல..?” என்றாள்.
காலியான காபி டம்ளரைக் கீழை வைத்து விட்டு.. குழந்தையைத் தூக்கி அவள் மடிமேல் வைத்துவிட்டு எழுந்தான்.
”எதும் இல்ல..” என்று கண்ணாடி பார்த்தான்.
”ஏன்டா.. போறியா..?”
”கீழ பசங்க கூப்டானுக.. ஏன்..?”
”போறப்ப சொல்லிட்டு போ..”என்றாள்.
”ம்..ம்ம்..!” குழந்தையின் கன்னத்தில் ஒரு முத்தம் வைத்து.. டாடா காட்டிவிட்டு கதவைத் திறந்து வெளியே போனான்.
எதுத்த வீட்டைச் சேர்ந்த இளம் பெண்கள் இருவர் வராண்டாவில் நின்றிருந்தனர். அவர்களுடன்.. ஒல்லியான அந்தப் பெண்ணின் தம்பி. சசியைப் பார்த்ததும் அந்தப் பெண்களின் பேச்சு சட்டென நின்றது. கூட இருந்த பெண்ணின் இளமையை ரசித்தபடி படிகளில் கீழே இறங்கினான்.
”பாக்கறத பாரு.. பொட்டக்கணணா..! கண்ண நோண்டிருவேன்.. என்னடா பார்வை.. அப்படி. .?” என்று அவன் முதுகுக்குப் பின்னால் இருந்து குரல் கேட்டது.
எதிர் வீட்டுப் பெண்ணின் குரல். கலீரெனச் சிரித்தாள் இன்னொரு பெண்..! படிகளில் இறங்கிய சசி அன்னாந்து மேலே பார்த்தான். அந்தப் பெண்கள் அவனைப் பார்த்துத்தான் சிரித்தனர்.
சட்டென இன்னொரு பெண்.. பையனின் கன்னத்தில் கிள்ளி
”ஏன்டா.. கண்ணா டென்ஷனாகற..? கூல்டா..!” என்றாள்.
மறுபடி.. சிலீர் சிரிப்பு..!! சசி கீழே இறங்கிய பின்னர்தான் உறைத்தது. அந்தப் பெண்கள் கிண்டல் செய்தது சசியைத்தான் என்பது..! ஒரு கணம் அசந்து விட்டான். முகத்தில் ஒரு சீற்றத்துடன் சட்டென நிமிர்ந்து மேலே பார்த்தான். அந்தப் பெண்கள் இரண்டு பேரும் மீண்டும் வெடிச் சிரிப்புடன் அவனை எட்டிப் பார்த்து விட்டு.. ஓடி மறைந்தனர். மாடிப்படி கைப்பிடியில ஓங்கிக் குத்திவிட்டு வெளியே போனான்.!
மழை இன்னும் லேசாக தூரிக் கொண்டுதான் இருந்தது. அவன் கேட்டை நெருங்க.. எதிரே ‘காத்து’ வந்தான்.
அவனது நிஜப்பெயர் மணி.
‘காத்து ‘ என்பது நிக் நேம்..! நண்பர்களுக்கு அவன் இப்பவரை காத்துதான். அவன் முகத்தில் எப்போதும் தாடி இருக்கும்.!!
”வேலைக்கு போகலியாடா..?” சசி கேட்டான்.
”இல்லடா.. போகல..” என்றான் காத்து.
”சரி.. கடைக்கு வா..”
”நீ போ.. வரேன்..”
”கடைல சம்சு இருந்தான்..?”
”இல்லடா.. காணம்..! ராமு மட்டும்தான் இருந்தான்..” என்று விட்டு அவன் போனான்.
காத்துவின் அண்ணன் இதே காமபௌண்டில்தான்.. கீழ் போர்சனில் குடியிருந்தார். டெய்லர் கடையில் சம்சு இல்லை. ராமு மட்டும்தான் இருந்தான் மிஷினில் உட்கார்ந்து தைத்துக் கொண்டிருந்தான். சீ டி பிளேயர் இரைச்சலாகக் கத்திக் கொண்டிருந்தது.
”எதுக்குடா.. இத்தனை சவுண்டு..” என்றான் சசி.
” நா.. எங்கடா வெச்சேன்..” என்றான் ராமு. ”சம்சுதான் வெச்சுட்டு போய்ட்டான்..”
வால்யூமைக் குறைத்தான் சசி.
”எங்க அவன்.. போய்ட்டானா..?”
”ம் ..ம்ம்..”
”என்னமோ பேசனும்னான்..?”
ராமு சிரித்தவாறு சொன்னான்.
”புதுசா.. வந்துருக்காங்களே.. அதப்பத்தி பேசத்தான்.”
ஸ்டூலில் உட்கார்ந்தான் சசி.