மெய் மறந்தேன் – Part 1 124

”ம்..ம்ம்..”
”எங்க..?”
”எங்கம்மாவ கேளு..” என்றான்.
உள்ளறையில் இருந்த.. அவனது அம்மாவிடம் போனாள். சசி டீ குடித்து முடிக்க.. உள்ளிருந்து.. கொய்யாப் பழம் சாப்பிட்டவாறு வந்தாள் புவியாழினி. கையில் இன்னும் மூன்று பழங்களை நாம்பியிருந்தாள். அவள் கொய்யா சாப்பிடும் அழகை ரசித்து..
”நல்லாருக்கா..?” என்று கேட்டான்.
”சூப்பர் டேஸ்ட்..! உங்க தோட்டத்து கொய்யா.. ரொம்ப நல்லாருக்கும்..” என்று கொய்யாவைக் கடித்து சப்புக் கொட்டிக் கொண்டு சாப்பிட்டாள்.
”தோட்டத்துல இன்னும் வேற என்ன இருக்கு..?”
”வேற என்ன வேனும்..?” என்று கேட்டு விட்டு கட்டிலில் இருந்து எழுந்து வீட்டில் இருந்து வெளியே போனான்.
அவன் பின்னாலேயே வந்தாள் புவியாழினி.
”சீதா இருக்கா..?”
”இல்ல…”
”மாங்கா…?”
”எல்லாமே பிஞ்சு..” அவளுடன் பேசிக் கொண்டே நடந்து.. முன்னால் போய் அவள் வீட்டுச் சாவியை எடுத்து.. பூட்டைத் திறந்தான்.
”சே.. வேற எதுமே இல்லயா..?”
”ம்கூம்..” என்று அவள் வீட்டுக்கு உள்ளே போய் பாக்கெட்டில் இருந்த சிகரெட்டை எடுத்து வாயில் வைத்தான்.
”தீப்பெட்டி. .?” என்று அவனுக்குப் பின்னால் உள்ளே வந்த புவியாழினியிடம் கேட்டான்.
அவள் சமையலறைக்குப் போய் எடுத்து வந்து கொடுத்தாள்.
”கொய்யா.. தவற வேற என்ன தருவீங்க..?” என்று கொய்யாவைக் கடித்தவாறு அவனைக் கேட்டாள்.
சட்டென.. ”கிஸ்…” என்றான்.
” ஆ..!” கன்னம் குறுகுறுக்கச் சிரித்தாள் ”நா ஒண்ணும் கிஸ் கேக்கல..”
”கேளேன்.. தரேன்..” என்று சிகரெட் பற்ற வைத்தான்.
”ஐய்யோ.. வேண்டாம்ப்பா.. தெரியாத்தனமா.. உங்ககிட்ட வாயக் குடுத்துட்டேன்..” என்று சிரித்தாள்.
புகை இழுத்து.. வெளியே விட்டான்.
”ஏய்.. கதை விடாத..”
”என்ன கதை..?”
”இப்பவரை.. நீ என்கிட்ட.. உன் வாயெல்லாம் குடுத்ததில்ல..” என்று சேரில் உட்கார்ந்தான்.
திகைத்து… ”நா சொன்னது..ம்கூம்.. இனிமே உங்ககிட்ட பேசவே போறதில்ல..” என்று திரும்பி டி வியைப் போட்டு விட்டாள்.
சசி சிரித்தான்.
”அப்ப.. கொய்யாப் பழம் நஹி..!”
”அத நா.. உங்கம்மாகிட்ட வாங்கிப்பேன்..” என்று கட்டிலில் உட்கார்ந்தாள்.
அவன் மறுபடி.. புகை இழக்க.. புவியாழினியின் அம்மா டி வி எஸ் எக்ஸெலைக் கொண்டு வந்து வீட்டின் முன் நிறுத்தினாள். அவளை எட்டிப் பார்த்த சசி சட்டென சிகரெட்டை அணைக்க… கை தட்டிச் சிரித்தாள் புவியாழினி.
” போச்சா..? நல்லா வேனும்..!”
அவன் சட்டென எழுந்து பேனைப் போட்டு விட்டான். அவளது அம்மா வண்டியை நிறுத்தி விட்டு.. அதன்பின் பாத்ரூம் போய் விட்டுத்தான் வந்தாள். அவள் கையில் ஒரு பெரிய கவர்.! அது நிறைய.. பூ..!!
அவள் அம்மா உள்ளே வந்து சிரிக்க.. புவியாழினியைப் பார்த்து..
”உனக்கு வேலை வந்தாச்சு..” என்றான்.
புவியாழினியின் அம்மா.. புவனா.. !! கணவன் இல்லாதவள். இரண்டு பெண் குழந்தைகளை விட்டு விட்டு… அவள் கணவன் வேறு ஒரு பெண்ணுடன் ஓடிவிட்டான் என அடிக்கடி சொல்லுவாள்..! கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக.. கணவன் இல்லாமல்தான்.. போராடி.. மகள்களைப் படிக்கவும் வைத்துக் கொண்டிருக்கிறாள்..!!
பெரியவள் கவிதாயினி. காலேஜ் போகிறாள்..! புவனா.. ஒரு பூ… வியாபாரி..! பேருந்து நிலையத்தை ஒட்டி கடை போட்டிருந்தாள்..! அதில் நல்ல வருமானம் இருந்தது..!!
கொய்யாவை எடுத்துக் கொண்டு போய் தரையில் உட்கார்ந்து பூ தொடுக்கத் தொடங்கினாள் புவியாழினி. அவள் விரல்கள் சரளமாக பூ கட்டியது. அவளது அம்மா சமையல் வேலையைத் துவங்கியிருக்க.. அவளுக்கு எதிரில் சேரில் உட்கார்ந்து அவளோடு வம்பு செய்து கொண்டிருந்தான் சசி.
அவன் பார்வை.. அவ்வப்போது அவளது சுடிதார் கழுத்து வளைவில் பதிந்து கொண்டிருந்தது. அவள் லேசாக குனிந்து பூ எடுத்து தொடுக்கும் போது.. அவளது கதுப்பு மேடுகள்.. அவன் பார்வையில் கொஞ்சூண்டு தெரியும்..!!
”ஹேய் புவி..?”
அவனை நிமிர்ந்து பார்க்காமல்
”ம்..ம்ம்..?” என்றாள்.
”நீ.. சூப்பரா பூ கட்ற..”
”தேங்க்ஸ்..” என்றாள்.
”உன்ன பாக்கப் பாக்க.. எனக்கு ஒன்னு தோணுது..”
”என்ன..?”
”உனக்கு வவ் லெட்டர் எழுதட்டுமா..?” என அவன் கேட்க.. சட்டென நிமிர்ந்து அவனைப் பார்த்தாள். அவளது வெங்காயச் சருகு நிற உதட்டில் புன்னகை அரும்பியது.
”என்ன.. சொல்ற..?” என்று கேட்டான்.
”ம்..ம்ம்..! உங்களுக்கு எதுக்கு அவ்ளோ ரிஸ்க்..? என்கிட்ட சொன்னா.. நானே எழுதிப்பேன் இல்ல.. ? கண்மணி.. அன்போடு காதலன்.. நான்.. நான்.. சசி பக்கி… எழுதும்.. லவ் லெட்டர்..!” என்று அவள் சிரித்துக் கொண்டே சொன்னாள்.
”ஓய்.. நான் என்ன பக்கியா..?” என்று எட்டி அவள் தலையில் தட்டினான்.
அவள் சிரித்து.. ”அம்மா…” என்றாள் கொஞ்சம் சத்தமாய்.
அவளது அம்மா உள்ளிருந்து
”என்னடீ..?” என்று கேட்டாள்.
”நா.. பூ கட்றதா வேண்டாமா..?”
”ஏன்டீ..?”
”இந்த பக்கியண்ணா.. என்னை பூ கட்டவே விடமாட்டேங்குது..!” என்றாள்.
” அடிப்பாவி..” என்றான். ”சரி.. அதவிடு..! நான் சொன்ன ஜோக்க பத்தி கெஸ் பண்ணியா..?”
”ம்கூம்..! அத நான்.. நெனைக்கவே இல்ல..!”
”உனக்கு.. ஐ க்யூ கம்மின்றது நல்லாவே தெரியுது..!”
”பரவால்ல உங்கள மாதிரி.. அசிங்கமா இருக்கறவிட.. இல்லாமப் போனா.. அதுவே பெட்டர்..” என்று அவனைப் பார்த்துச் சொன்னாள்.
”கிரேட் இன்சல்ட்..” என்று விட்டுச் சொன்னான்.
”சரி நானே சொல்லிர்றேன்..”
”ஒன்னும் வேண்டாம்..”
”ஏய்.. சொன்னா நீ சிரிப்ப..! பிகு பண்ணாம கேளு..! அந்த பொடியன் கேட்டானாம்.. அதுதான் உண்மைனு வெச்சுகிட்டாலும்.. வேலைக்காரி வயித்துக்குள்ள.. காக்கா எப்படி போகும்’ னு..” என சசி சொல்ல…
‘கெக்’ கெனச் சிரித்தாள் புவியாழினி. அவள் கன்னங்களில் செம்மை படர்ந்தது..! அதே நேரம் காலேஜ் விட்டு வந்த.. அவளது அக்கா.. கவிதாயினி.. வீட்டுக்குள் நுழைந்தபடி கேட்டாள்.
”வேலைக்காரி வயித்துக்குள்ள.. ஒரு காக்கா எதுக்கு போகனும்..?”
சசி அவளைப் பார்த்து சொன்னான்.