கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 52 8

சுகன்யாவின் அப்பட்டமான, ஒளிவு மறைவில்லாத கேள்வியை செல்வா சற்றும் எதிர்பார்க்கவில்லை என்பதை அவன் முகத்தில் எழுந்த சுருக்கம் தெளிவாக சொல்லியது.

“நானும் இந்த கேள்விக்கான பதிலைத்தான் ஒரு வாரமா தேடிகிட்டு இருக்கேன்.”

“நமக்குள்ள இந்த கேள்வியும் பதிலும் நிஜமாவே தேவைதானா? சுகன்யாவுக்கு சற்றுமுன் குடித்த காஃபி தொண்டையில் கசப்பது போலிருந்தது. எச்சிலை மெல்ல விழுங்கினாள் அவள்.

“சுகன்யா… உன்னை நான் ஏன் காதலிக்க ஆரம்பிச்சேன் தெரியுமா?”

“சொல்லு…”

“நீ அமைதியா இருந்தே. உன் கிட்ட ஆரவாரமான பேச்சோ, சிரிப்போ எப்பவும் இருந்ததேயில்லை. எப்பவும் தனியாத்தான் இருப்பே. யார்கிட்டவும் தேவையில்லாம நீ பேசினதே கிடையாது.”

“சுத்தி வளைச்சுப் பேசாதே செல்வா. நேத்து நான் என் அத்தான்கிட்ட பேசினது உனக்குப்பிடிக்கலே. நீ என் ரூமுக்குள்ள வர்றதுக்கு முன்னாடி என் கலீக் சுனிலோட நான் சாதாரணமா சிரிச்சி பேசிகிட்டிருந்தேன். அதை நீ விரும்பலே.”

“நேத்து என் அத்தானை நீ இன்ஸல்ட் பண்ணே? இன்னைக்கு சுனிலை இன்ஸல்ட் பண்ணே? ஆனா ஒரு விஷயத்தை நீ மறந்துட்டே.”

“என்னன்னு அதையும் சொல்லிடு…”

“நீ அவங்களை மட்டும் தேவையே இல்லாம அவமானப்படுத்தலே… என்னையும் தான் பண்றே..” தன் மனதில் இருப்பதை அவனுக்கு தெளிவாக உணர்த்த வேண்டும் என அவள் முடிவெடுத்துவிட்டாள்.

“இன்னும் எதாவது சொல்ல வேண்டியது பாக்கியிருக்கா?” செல்வா தன் கையிலிருந்த பாதி காஃபியை ஒதுக்கிவைத்தான். தன் உதடுகளைத் துடைத்துக்கொண்டான்.

“உன்னைத்தவிர வேறு எந்த ஆம்பிளையோட நான் பேசறதும், சிரிக்கறதும் உனக்குப்பிடிக்கலே. இதானே விஷயம்?” சுகன்யா தாழ்ந்த குரலில் பேசினாலும், ஒரு தீர்மானத்துடன் பேசிக்கொண்டிருந்தாள்.

“வெல்… யூ ஆர் அப்சொல்யூட்லி ரைட். யெஸ்… நீ சம்பத்தோட பேசறது எனக்கு பிடிக்கலே. இப்ப நீ சொல்றமாதிரி சுனிலோட பேசறதும் பிடிக்கலே.”

“ஏன்?”

“சம்பத் உனக்கும் எனக்கும் நடுவுல வெச்ச ஆப்பைப் பத்தி உனக்குத் தெரியாதுடீ… ஐ ஹேட் ஹிம். என் காதலுக்கு நடுவுல வர்ற யாரையும் எனக்கு பிடிக்கலே. எனக்கும் உனக்கும் நடுவுல வர்ற யாரையும் எனக்கு பிடிக்கலே.” செல்வாவின் குரலில் சூடு ஏறியது.

5 Comments

  1. சூப்பர்.கதை interesting a இருக்கு.செல்வாவும் சுகன்யாவும் பிரிஞ்சுருவாங்கன்னு தெரியும்.அதை இவ்வளவு சீக்கிரம் முடிப்பீங்கனு எதிர்பார்க்கலை.அடுத்த பதிவை நோக்கி ஆவலுடன்…

  2. Intha kathai yappa than end agum roomba pottu boor adikuringa pls

  3. What happened for today’s episode?

  4. Intha kadhayoda source enga iruku

Comments are closed.