கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 52 8

“நான் இல்லேன்னு சொல்லலையே? நாலு பேரு இந்த ஆஃபிசுல சுகன்யாவுக்கு கடலை போட்டோம்; சுகன்யா செல்வாவுக்கு கிளிக் ஆயிட்டா… தட்ஸ் ஆல். அதுக்காக உன்னாட்டாம் நான் எதுக்கு பொறாமையில காண்டாவணும்?”

“நீ புத்தராவே இரு. வேணாங்கலே. ஆனா நான் சொல்றதை கேளுடீச் செல்லம். ரெண்டு நிமிஷத்துக்கு முன்னாடி என் கண்ணால பாத்தேன்னு சொல்றேன். வெண்ணை… நீ நம்பனா என்ன? நம்பாட்டி என்ன? எனக்கு எதாவது நஷ்டமா; இல்லே உனக்கு நஷ்டமா? செல்வாவுக்கு நஷ்டம்; அந்த வடக்கத்தியான் அவனுக்கு வெள்ளையா நீட்டா ஆப்பு வெச்சிட்டான்.” கட்டைக் குரலுக்குரியவன் நீளமாக ஆங்காரமாக மீண்டும் ஒரு முறை சிரித்தான்.

“யார்ரா அது?”

“சுனிலோ… அனிலோ.. பேரு எனக்கு சரியாத் தெரியாது. டேரக்ட் அஸிஸ்டென்டா ஒருத்தன் வந்திருக்கான். ஒடம்பை ஷோக்கா வெச்சிருக்கான். பையன் செமை பர்சனாலிட்டி. அவன் கூடத்தான், சுகன்யா ஜாலியா போய்கிட்டு இருக்கா. பெரிய மசுரூ மாதிரி… நீ எனக்கு கவுண்டர் குடுக்கறியே; நான் சொல்றதுல உனக்கு சந்தேகம்ன்னா, இங்கேருந்து நேரா சுகன்யா செக்ஷ்னுக்கு போய் பாத்துட்டு வாடா. இந்த நிமிஷம் அவங்க ரெண்டு பேரும் அங்கே இருக்கமாட்டாங்க… என்ன பெட்டு வைக்கிறே நீ?”

கட்டைக்குரல் இப்போது ஆனந்தமாக விசிலடித்தவாறு வெளியே போனது. செல்வா ஃப்ளஷை தடாலென இழுத்தான். தெறித்த தண்ணீரில் தன் பேண்டை நனைத்துகொண்டான். வெளியில் வந்தவன் தன் முகத்தை அவசரமாக கழுவித் துடைத்துக்கொண்டான். மாடிப்படிக்கட்டுகளின் வழியே சுகன்யாவின் அறையை நோக்கி வேகமாக கால் தடுமாற ஓடினான்.
சுகன்யாவின் அறைக்குள் செல்வா நுழைந்தபோது, சாவித்திரி தன் இருகைகளையும், தன் தலையில் வைத்தவாறு உட்கார்ந்திருந்தாள். அவளுடைய முகம் தொங்கிப்போயிருந்தது.

சாவித்திரியின் இருபத்தைந்து வருட அனுபவம் பாண்டிச்சேரியில் இருக்கும் அவர்களுடைய கிளை அலுவலகத்திற்கு எந்த அளவுக்கு அந்த நேரத்தில் தேவைப்படுகிறது என்பதை கோபாலன் அவளுக்கு விரிவாக சற்று முன்தான் சுட்டிக்காட்டியிருந்தார். அடுத்த இரு வாரங்களுக்குள் பாண்டிச்சேரியில், அவள் ஜாய்ன் பண்ண வேண்டிய விஷயத்தையும் அவர் அஃபீஷியலாக தெரிவித்திருந்தார்.

சுகன்யா தன் சீட்டில் இல்லை. அறையில் சுனிலும் இல்லாததால், செல்வாவின் முகம் சட்டென காற்றுப்போன பலூனாக மாறியது.

5 Comments

  1. சூப்பர்.கதை interesting a இருக்கு.செல்வாவும் சுகன்யாவும் பிரிஞ்சுருவாங்கன்னு தெரியும்.அதை இவ்வளவு சீக்கிரம் முடிப்பீங்கனு எதிர்பார்க்கலை.அடுத்த பதிவை நோக்கி ஆவலுடன்…

  2. Intha kathai yappa than end agum roomba pottu boor adikuringa pls

  3. What happened for today’s episode?

  4. Intha kadhayoda source enga iruku

Comments are closed.