கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 52 8

சுகன்யா தனக்குப்பிடித்த புத்தகங்களை மனதில் ஆழ்ந்த விருப்பத்துடன், படிக்கவேண்டும் என்ற முனைப்பில் படிக்க ஆரம்பித்ததால், அவ்வப்போது, மனதுக்குள் வந்து போகும் செல்வாவின் நினைப்பை, வரவிடாமல் தடுத்து நிறுத்துவதில், அவள் சிறிது வெற்றியும் பெற்றாள்.

ஒரு மனுஷி எத்தனை நேரம்தான் படிப்பதில் தன் கவனத்தை செலுத்தமுடியும்? இரவில் படுத்துதானே ஆகவேண்டும். சற்று நேரம் விழிகளை மூடித்தானே ஆகவேண்டும்.

இரவில் தூங்குவதற்கு முன், தினமும் தவறாமல், தன் மனதில் வரும் செல்வாவின் நினைப்பையும், அவனுடன் உல்லாசமாக திரிந்த காலத்தின் இன்பமான நினைவுகளையும் மட்டும், வராமல் தடுப்பதில் சுகன்யாவால் வெற்றிபெறமுடியாமல் போனது. இந்த ஒரு தோல்வியால் அவள் தவித்தாள். திணறினாள்.

சென்னையிலிருந்து கிளம்பும்போதே செல்வாவை மீண்டும் நினைக்கக்கூடாது, அவனை முற்றிலுமாக மறந்துவிட்டு வாழ்க்கையின் அடுத்த அத்தியாயத்தில் நுழைய வேண்டும் என்ற முடிவை அவள் எடுத்திருந்தாள். ஆனால் அதை செயலில் காட்டமுடியாமல், இரவு நேரங்களில், படுக்கையில் ஓசையில்லாமல் அழ ஆரம்பித்தாள்.

என் காதலனோட நான் கழிச்ச இனிமையான நேரங்களைத்தான் என்னால மறக்கமுடியலே. ஒருவிதத்துல அது சரிதான். சந்தோஷம். சந்தோஷம். சந்தோஷம். மனுஷ மனம் எப்பவும் சந்தோஷமா இருக்க விரும்புகிறது. மனசோட இயல்பே அதுதானே.

சந்தோஷம் எங்கே எங்கேன்னு மனசு எப்பவும் அதை மட்டும்தானே தேடிக்கிட்டே இருக்கு. மனுஷன் அனுபவிக்கற எந்த சுகமும் சட்டுன்னு ஒரு முடிவுக்கு வந்துவிடுகிறது. ஆனால் துக்கங்கள் மட்டும் வெகு நாட்களுக்கு அவன் மனதுக்குள் தங்களின் கசப்பை விட்டுவைக்கின்றன. மனிதன் எப்போதும் துக்கத்தை விரும்பறதேயில்லை. இதுவும் மனிதனின் மன இயல்பு.

திராட்சை ருசிக்கிறது. அதன் இனிப்பை மனசு விரும்பி சுவைக்கிறது. பாகற்காய் கசக்கிறது. உடல் ஆரோக்கியத்திற்கு அது நல்லதென்றாலும் கசப்பை மனிதன் விரும்புவதில்லை. சுகன்யாவின் மனம் இரவில், ஓய்வில்லாமல், கரையை நோக்கி அலையும் கடல் அலைகளைப் போல், இது போன்ற எண்ணங்களில் மிதந்து கொண்டிருந்தது.

எங்களுடைய காதல் முறிஞ்சு சிதறுண்டு போனதுக்கு அப்புறமும் செல்வாவை என்னால் ஏன் சட்டென மறக்கமுடியவில்லை? அவனை நான் கொஞ்சமாவா காதலிச்சேன்..? மனசாரக் காதலிச்சேனே? பாவி… எல்லாத்தையும் மறந்துட்டு என் மனசை சுக்கு நூறா உடைச்சி எறிஞ்சிட்டானே? சுகன்யா தன்னையே வெறுத்துக்கொண்டாள்.

காதலிச்சுட்டு பிரியறது இருக்கே அது பெரிய கொடுமை. மனசுக்கு அது பெரிய வலி. வலியை வார்த்தைகளால சொல்லி புரிய வெக்க முடியாது. வலி என்றால் என்ன என்பதை ஒருவன் சுயமாக அனுபவித்துத்தான் புரிந்துகொள்ளவேண்டும்.

சுகன்யா இரவு நேரங்களில் செல்வாவின் நினைவில், காதலின் நினைவில், இப்படியெல்லாம் யோசனை செய்துகொண்டு தவித்துப்போனாள். உறக்கம் வராமல் கட்டிலில் புரண்டு புரண்டு படுத்தாள். இரவு வருவதே அவளுக்கு பிடிக்கவில்லை. தூக்கம் வந்தாலும் அது நிம்மதியான தூக்கமாக இல்லை. திடீரென நள்ளிரவில் விழிப்பது அவளுக்கு வழக்கமாகிப்போனது.

5 Comments

  1. சூப்பர்.கதை interesting a இருக்கு.செல்வாவும் சுகன்யாவும் பிரிஞ்சுருவாங்கன்னு தெரியும்.அதை இவ்வளவு சீக்கிரம் முடிப்பீங்கனு எதிர்பார்க்கலை.அடுத்த பதிவை நோக்கி ஆவலுடன்…

  2. Intha kathai yappa than end agum roomba pottu boor adikuringa pls

  3. What happened for today’s episode?

  4. Intha kadhayoda source enga iruku

Comments are closed.