கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 52 8

சுகன்யாவை நான் மயக்கிடுவேன்னு இந்த கம்மினாட்டி செல்வா நினைக்கிறானா? என் பர்சனாலிட்டியைப் பாத்து பயப்படறான் போல இருக்கு. நான் சிரிச்சி சிரிச்சி பேசறதுனால, சுகன்யாதான் என்னை லவ் பண்ண ஆரம்பிச்சுடுவாளா? இவன் என்னை நம்பாம போகலாம். ஆனா இவன் லவ்வரை இவன் நம்பணுமில்லே. ஹீ ஈஸ் ரியலி எ ஃபூல்.

சுகன்யாவுக்குத்தான் எவ்வளவு சென்ஸ் ஆஃப் ஹூயுமர்? மூட் அவுட்டாயிருந்த சுகன்யாவை, என் கலீக்கை, நான் சிரிக்கவெச்சேன். பதிலுக்கு அவ ஃப்ரெண்ட்லியா என் தோளை தட்டினா? இட் ஈஸ் அ சிம்பிள் மேட்டர். அவ்வளவுதானே? சுகன்யா மாதிரி ஒரு லேடிக்கு இப்படி ஒரு லவ்வரா?

“செல்வா மஸ்ட் பீ அன் இடியட்…?” தன் மனதுக்குள் சிரித்துக்கொண்ட சுனில், நீளமாக தன் உதட்டிலிருந்து ஒரு பெருமூச்சை வெளியேற்றினான்.

இரண்டு நிமிடம் தன் சீட்டிலேயே ஒருவிதமான குற்ற உணர்வுடன் உட்கார்ந்திருந்தான் சுனில். காலையில் அவன் அலுவலகத்துக்குள் நுழைந்த போது தன் மனதில் இருந்த உற்சாகம், அமைதி இரண்டுமே இப்போது காணாமல் போயிருப்பதாக அவன் உணர ஆரம்பித்தான். தன் இருகைகளையும் தலைக்குமேல் உயர்த்தி சோம்பல் முறித்தான்.

சாவித்ரி வேர்க்க விறுவிறுக்க அறைக்குள் நுழைந்தாள்.

“குட்மார்னிங் மேடம்” சுனில் இயந்திரமாக அவளை நோக்கி புன்னகைத்தான். சாவித்ரி, தன் டிராயரை இழுத்தாள். அதனுள்ளிருந்து அழுக்காக இருந்த ஒரு சிறிய வெள்ளை டவலால் தன் முகத்தை துடைத்துக்கொண்டிருந்தாள். அழுக்கான டவல் மேலும் அழுக்காகியது.

சுனில், தன் டேபிளின் மேல் கிடந்த சுகன்யாவின் சுத்தமான கர்சீஃபை ஒரு முறை வெறித்து நோக்கினான். எழுந்து அறைக்கு வெளியில் வந்தான். கேன்டீனை நோக்கி மெல்ல நடக்க ஆரம்பித்தான்.
“இரண்டு பஜ்ஜி. இரண்டு காஃபி” சுகன்யா ஐம்பது ரூபாய் தாளை எடுத்து கவுண்டரில் நீட்டினாள்.

“சுகன்யா வெயிட்… எனக்கு பஜ்ஜி வேண்டாம். மெது வடை வேணும்.”

செல்வா பஜ்ஜியைத்தான் எப்போதும் விரும்பி சாப்பிடுவான். அவன் மறுப்பைக்கேட்டதும், சுகன்யாவின் விழிகள் விரிந்தன. புருவங்கள் உயர்ந்தன. சுகன்யாவும், செல்வாவும் கேண்டீனை விட்டு வெளியில் வந்தார்கள். ஒரு மரத்தடியில், புல்தரையில் எதிரெதிராக உட்கார்ந்துகொண்டார்கள்.

“செல்வா… உனக்கு பஜ்ஜிதானே பிடிக்கும்?”

“யெஸ்… பிடிச்சுது. ஆனா இப்ப பிடிக்கலை. நேத்துவரைக்கும் எனக்கு பிடிச்சதெல்லாம் இன்னைக்கும் எனக்கு பிடிக்கணும்ன்னு என்ன அவசியம் இருக்கு?” செல்வா மெல்ல சிரித்தான். சிரிப்பதாக நினைத்தான். அவன் சிரிப்பில் சிடுசிடுப்பின் சாயை இருப்பதை சுகன்யா உணராமலில்லை.

“ஐ சீ..” சுகன்யாவின் வாயிலிருந்து வார்த்தை வெளிவரவில்லை.

சற்று நேரம் அவர்கள் இருவருக்குமிடையில் இறுக்கமான மவுனம் நிலவியது. இருவருமே ஒருவர் முகத்தை ஒருவர் பார்க்காமல், தங்கள் கையிலிருந்த காஃபியை கடனே என உறிஞ்சிக் கொண்டிருந்தார்கள். சுகன்யா தன் கையிலிருந்த பேப்பர் கிளாஸை தரையில் வைத்தாள். தன் உதட்டை முந்தானையால் துடைத்துக்கொண்டாள்.

“செல்வா… உனக்கு பஜ்ஜியை பிடிக்கலேன்னா அது பெரிய விஷயம் இல்லே. நேத்து வரைக்கும் என்னை உனக்கு பிடிச்சிருந்தது. இன்னைக்கு உனக்கு என்னை பிடிக்குதா? இது ரொம்ப ரொம்ப முக்கியம். ஆர் யூ ஸ்டில் லவ்விங் மீ? ஆர் யூ ஷ்யூர் அபவுட் யுவர் லவ்.” சுகன்யாவின் முகத்தில் உணர்ச்சிகள் இல்லை.

5 Comments

  1. சூப்பர்.கதை interesting a இருக்கு.செல்வாவும் சுகன்யாவும் பிரிஞ்சுருவாங்கன்னு தெரியும்.அதை இவ்வளவு சீக்கிரம் முடிப்பீங்கனு எதிர்பார்க்கலை.அடுத்த பதிவை நோக்கி ஆவலுடன்…

  2. Intha kathai yappa than end agum roomba pottu boor adikuringa pls

  3. What happened for today’s episode?

  4. Intha kadhayoda source enga iruku

Comments are closed.