ஐ வில் ட்ரை மை பெஸ்ட் டாக்டர் 6 45

விஸ்வா மௌனம் காத்தான்…

டாக்டர் மதுசூதன், “கம் ஆன் யோசி விஸ்வா, உனக்கே விளங்கும்”

விஸ்வா, “நான் நினைச்சா அவங்களை கொல்ல முடியும்ன்னு அவங்களுக்கு காண்பிக்க” என்று இழுத்தான்

டாக்டர் மதுசூதன், “யூ ஆர் ரைட். சரி, அப்படி அவங்களுக்குக் காண்பிக்கணும்ன்னு உன் ஏன் உள் மனசு சொல்லுச்சு?”

விஸ்வா சில கணங்கள் மௌனம் காத்தான்.

டாக்டர் மதுசூதன், “இட்ஸ் ஓ.கே. கோவத்தைத் தவிற இன்னும் சில உணர்வுகள் உன் ஆழ்மனத்தில் இருக்கு. அது இருப்பதை நீ ஒத்துப்பியோ இல்லையோன்னு தெரியலை. அதனால்தான் அந்த லைனில் உன்னை யோசிக்க வெச்சேன்”

விஸ்வா, “என்ன உணர்வு?”

டாக்டர் மதுசூதன், “ஒண்ணு Jealousy. பொறாமை. அடுத்தது இயலாமை … feeling inadequate. இதைத் தவிற உன் கோவம் குறைவதற்கு வேற ஏதோ காரணமும் இருந்து இருக்கலாம். But I am not sure. ஆனா, பொறாமை, இயலாமை இந்த ரெண்டு உணர்வுகளும் நிச்சயம் சேர்ந்து வந்து இருக்கும்ன்னு நினைக்கறேன். இந்த லைனில் யோசிச்சு நீயே உன் செயலுக்கு விளக்கம் கொடு”

விஸ்வா தலை குனிந்து அமர்ந்து இருந்தான். பிறகு கிசு கிசுத்த குரலில், “I felt sexually inferior. அவங்க ரெண்டு பேரும் பேசிட்டு இருந்ததில் இருந்து என்னை விட சந்திரசேகர்கிட்டே இருந்து வனிதாவுக்கு அதிக சுகம் கிடைக்குதுன்னு … ” என்றவனால் அதற்கு மேல் அவனால் பேச முடியவில்லை. குரல் உடைந்து தலை குனிந்து குலுங்கினான்.

டாக்டர் மதுசூதன் அவன் அருகில் நகர்ந்து அவ தோளை அணைத்து இறுகப் பற்றினார். அந்த அரவணைப்பில் சில நிமிடங்கள் தலை குனிந்து அழுதவன் கண்களைத் துடைத்துக் கொண்டு, “சாரி, இமோஷனல் ஆயிட்டேன்”

டாக்டர் மதுசூதன், “பரவால்லை விஸ்வா. வெரி குட். ஒவ்வொரு உணர்வுக்கும் பின்னால் இருக்கும் காரணங்களை புரிஞ்சுட்டு அதை ஆமோதிச்சா. அந்த உணர்வை எப்படி போக வைக்கறதுன்னு ஈசியா கண்டு பிடிச்சுடலாம் இல்லையா?”

விஸ்வா, “எஸ்”

டாக்டர் மதுசூதன், “மேலே கண்டின்யூ பண்ணறதுக்கு முன்னாடி வேற எதாவுது உன் கோவத்தை குறைச்சுதான்னு தனியா இருக்கும் போது யோசி. ஓ.கே?”

விஸ்வா, “ஓ.கே” என்றாலும் அவர் கண்களை தவிற்பதை டாக்டர் மதுசூதன் உணர்ந்தார். அந்தக் கோணத்தில் மேலும் தக்க சமயத்தில் விஸ்வாவை சிந்திக்க வைக்க முடிவெடுத்தார்.

டாக்டர் மதுசூதன், “வேற ஒரு விஷயமும் சொல்ல ஆசைப் படறேன். உன்னை விட சந்திரசேகரிடம் அவளுக்கு அதிக சுகம் கிடைக்குதுன்னு நீ சொன்னது சரியா?”

விஸ்வா, “இல்லைன்னா எதுக்கு அவ சந்திரசேகர்கிட்டே போகணும்?”

டாக்டர் மதுசூதன், “அப்படி நீ அனுமானம் செஞ்சுட்டு இருக்கே. அவளா அப்படி சொன்னால் ஒழிய திட்டவட்டமா சொல்ல முடியுமா?”

விஸ்வா, “வேற எப்படி இருக்க முடியும்?”