ஐ வில் ட்ரை மை பெஸ்ட் டாக்டர் 6 45

டாக்டர் மதுசூதன், “இந்த நிலமைன்னா?”

விஸ்வா, “வனிதா வேற ஒருத்தன் கூட உடலுறவு வெச்சுட்டு இருந்தா”

டாக்டர் மதுசூதன், “சோ வாட்? அது உன்னை எப்படி பாதிக்குது?”

விஸ்வா, “என்ன சொல்லறீங்க? அவ என் மனைவி”

டாக்டர் மதுசூதன், “இருக்கட்டும். சோ? அதனால் உனக்கு என்ன பாதிப்பு? அவளுக்கு வேறு ஒருத்தனுடன் அவளா விரும்பி கலந்துட்ட உடலுறுவினால் சுகம்தான் கிடைச்சு இருக்கும். வலி இல்லை. அவ சுகம் பெற்றது உன்னை எப்படி பாதிக்குது?”

விஸ்வா, “அந்த சுகம் என் மூலம் தான் அவளுக்குக் கிடைக்கணும். ”

டாக்டர் மதுசூதன், “ஏன்?”

விஸ்வா, “ஏன்னா அவ என் மனைவி. கணவன் மனைவியுடனும் மனைவி கணவனுடனும் மட்டும்தான் சுகத்தை பகிர்ந்துக்கணும். அப்படி நடந்துக்குவேன்னு அவ எனக்குக் கொடுத்த ப்ராமிஸ்தான் திருமணம். அதே மாதிரி நானும் அவளுக்குப் ப்ராமிஸ் பண்ணி இருக்கேன். I have kept my promise but she has not”

டாக்டர் மதுசூதன், “சுகத்தைப் பகிர்ந்துக்கணும்ன்னா என்ன?”

விஸ்வா, “அந்த சுகத்தை கணவினிடம் மட்டும்தான் மனைவி அடையணும். அந்த சுகத்துக்காக வேறு ஒருத்தனை நாடிப் போகக் கூடாது”

டாக்டர் மதுசூதன், “அப்படின்னா மனைவிக்கு வேண்டிய அந்த சுகத்தை கொடுக்க வேண்டியது கணவனின் கடமைன்னு சொல்லலாம் இல்லையா?”

விஸ்வா தலை குனிந்து மௌனம் காத்தான் …

அவனைக் கூர்ந்து நோக்கிய டாக்டர் மதுசூதன், “இந்த லைனில் டாக்டர் அமுதாவும் ராமும் உன்னை கேட்ட கேள்விகளை நான் கேட்கப் போறது இல்லை. அப்படிக் கேட்டா உன்னிடம் பதில் இல்லை-ன்னும் தெரியும்” அவரது கண்களை தவிர்த்து மௌனம் காத்த விஸ்வாவை கூர்ந்து நோக்கியபடி தொடர்ந்து, “சோ, வேற சப்ஜெக்டுக்குப் போகலாம். ஓ.கே?”

விஸ்வா, “ஓ.கே”

டாக்டர் மதுசூதன், “விஸ்வா, நான் எந்தக் கேள்வியும் கேட்க விரும்பலை. ஆனா, bottom-line, நீ சந்தோஷமா இல்லை. மறைந்து போன சந்தோஷத்தை, மன நிம்மதியை எப்படி வரவழைக்கறதுன்னு பார்க்கலாமா?”

விஸ்வா விரக்தியுடன், “I don’t think that is possible”