ஹஹ்ஹா…முடியாது… எதுக்கு இந்த statement – சிரித்து பதில் கூறினாள் சங்கீதா..
அந்த மாதிரி ஒருத்திய மனசுல commit பண்ணிட்டு இன்னொருத்திய கல்யாணம் பன்னுறவன் ஆம்பலையே இல்ல…. very sorry to say, but மனசுல தோணினத சொல்லாம இருக்க முடியல…
இவ்வளவு அழுத்தமாக இன்று வரை யாரும் சங்கீதாவிடம் பேசியதில்லை… அதே சமயம் ரமேஷை யாரவது தவறாக பேசி அவள் அதை கேட்டு சும்மா இருந்ததும் இல்லை… வாழ்கையில் சில நேரங்களில் நம் மனதுக்கு ஏன் எதற்கு சில விஷயங்கள் நிகழ்கிறது என்று நமக்கே தெளிவாக தெரியாது… அது போல ராகவ் ரமேஷை பற்றி இப்படி பேசியும் இன்னும் அவள் மெளனமாக ஏன் இருக்கிறாள் என்று சந்கீதவுக்கே தெரியவில்லை… இன்னும் மௌனம் தொடர்ந்தது…
நான் பேசிக்குட்டு இருக்கேன் சங்கீதா…. – ராகவ் குரல் ஒரு நிமிஷம் மயக்கத்தில் இருந்தவளை உலுக்கியது…
ஆங்.. நான் கேட்டுகுட்டு இருக்கேன் ராகவ்….
so அந்த மாதிரி ஒரு ஆளை நினைச்சி நீங்க கஷ்டப்படுறது அசிங்கம்… தயவு செய்து அது மாதிரி செய்யாதீங்க….. கண்ணீர் ரொம்ப புனிதம்… அதை வேற எதாவது நல்ல விஷயத்துக்கு பயன் படுத்துங்க… அனாவசிய காரியத்துக்கு வேண்டாம்….
மீண்டும் மௌனம் காத்தாள்….
நான் சொன்னது கேட்டுச்சா?….
சில நொடிகளுக்கு பிறகு… மௌனம் களைந்து இஸ்ஸ்ஹ்ஹ் என்ற விசும்பலுடன் “ஹ்ம்ம்….” என்று பதில் வந்தது சந்கீதவிடமிருந்து….
அப்புறம் விட்டீன்களே இன்னொரு சொற்பொழிவு… கணவன் மார்களை வெச்சி?… நல்லவரா இருந்தாலும் கேட்டவர இருந்தாலும் அவருக்கே hand kerchief அ வாழணும்னு….
ஹஹாஹ் ஹா ஹா ஹாஹ் – அவள் பேசிய வார்த்தைகளை ராகவ் மாற்றி பேசிய விதத்தைக் கேட்டு சத்தமாகவே ஒரு நிமிடம் அடக்க முடியாமல் சிரித்து விட்டாள் சங்கீதா….
ஹ்ம்ம்… என்ன சிரிப்பு?… இந்த குழந்தைய சிரிக்க வைக்க நான் இப்படியெல்லாம் பேச வேண்டியதா இருக்கே…. ச்சா – ராகவும் சிரித்துக்கொண்டே பேசினான்..
This part have next leavel pa
Next time please 5