இடை அழகி மேடம் சங்கீதா 4 86

இருவரும் இப்போது காலியான coffee கப்பை எடுத்துக்கொண்டு wash area பக்கம் நகர்கையில், சங்கீதா ஏதோ நினைவில் அவளது coffee கப்பை சாப்பாடு தட்டுகள் wash பண்ணும் இடத்திற்க்கு எடுத்து சென்றாள். இதை கவனித்த ரம்யா, “மேடம், எங்க போறீங்க? இங்க வாங்க…” என்று ஆச்சர்யமாக புருவத்தை உயர்த்தி சிரித்துக்கொண்டே கேட்க்கையில் சங்கீதாவுக்கு சற்று சந்கோஜமானது (embarassed).

இதை சமாளிக்க “ஒஹ்ஹ்.. sorry, சஞ்சனா பேசினதை யோசிச்சேனா அதான்… – என்று ரம்யாவை ப் பார்க்காமல் மெதுவாக தரையை ப் பார்த்து சிரித்துக்கொண்டு சரியான இடத்தில் coffee கப்பை வைத்து விட்டு எதுவும் பேசாமல் தன் இருக்கைக்கு சென்று அமர்ந்தாள் சங்கீதா.

என்ன ஆச்சு, ஏன் இப்படி நான் phone மறந்து வெச்சிட்டு வந்தேன்? ஏன் இப்படி நான் coffee கப்பை வேற எங்கேயோ எடுத்துக்குட்டு போறேன்? என்று தன்னை த் தானே லேசாக கடித்துக்கொண்டாள்.

ரம்யா சில நிமிடங்களுக்குப் பிறகு சங்கீதாவின் இருக்கைக்கு வந்தாள்.

இந்தாங்க மேடம்..

என்னதுடி? ஒஹ் Femina வா, thanks டி, நானே இந்த மாசத்துக்கான edition வாங்கனும்னு இருந்தேன், but நீயே வாங்கிட்ட.

தெரியும் நீங்க படிப்பீங்க னு, அதான் வர வழியில வாங்கினேன். பொறுமையா படிச்சிட்டு தாங்க மேடம். ஒன்னும் அவசரம் இல்ல. இந்த edition ல soch brand sarees collection superb மேடம்…. செம கலக்கலா இருக்கு, அதான் வாங்கினேன். நடு பக்கதுல இருக்குற சில models பார்க்குரதுக்கும் உங்களை மாதிரியே இருந்தாங்க, I mean முகதளவுல சொல்லல, இடுப்பளவுல… ஹாஹாஹ் – என்று தன் இடுப்பின் இரு ஓரங்களிலும் கைகளை அகலமாக சுத்தி காமித்து சங்கீதாவிடம் கிண்டலாக கூறினால் ரம்யா.

ஏய்ய் வாலு, போதும் அடங்கு, இது bank, யாரவது பார்க்கபோறாங்க.

சரி சரி பொறுமையா பார்த்துட்டு தாங்க.

சரி டா..

புத்தகத்தை வாங்கி தன் மேஜையின் மீது வைத்து விட்டு கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் வேலையில் ஆழுந்து இருந்தாள். பிறகு சற்று relax செய்து கொள்ள ரம்யா குடுத்த Femina புத்தகத்தை எடுத்து புரட்டினாள். மேல் அட்டையில் “This is special edition for working women” என்று போட்டிருந்தது. “Interesting…” என்று மனதுக்குள் லேசாக முனுமுனுத்துக்கொண்டு பக்கங்களை புரட்ட ஆரம்பித்தாள். ஒரு பக்கத்தில் “All about Relationships, Dating & healthy sex life” – என்று ஒரு topic இருந்ததை ப் பார்த்து ஆவலுடன் படிக்க ஆரம்பித்தாள். அதில் பலர் தங்களது உருவுகள் பற்றிய கேள்விகளை எழுப்பி இருந்தார்கள். அதில் சில கேள்விகளை பார்த்தாள் சங்கீதா..அதில் இரண்டு கேள்விகள் அவளது மனதை லேசாக்கியது

முதல் கேள்வி: கேட்பவர் மல்லிகா, வயது 37 ஆழ்வார்பேட்டை, சென்னை..

கணவன் மனைவி உறவுக்குள் பல சண்டைகள் வரும் போகும். ஆனால் எப்போதுமே நான் வைத்ததுதான் சட்டம் என்கிற வகையில் எதற்கெடுத்தாலும் சண்டை மட்டுமே போடுவேன் என்பதுபோல் கணவர்கள் நடந்துகொண்டால் ஒரு அளவுக்கு மீறி விட்டுக்குடுத்து போவதற்கு மணம் ஒத்துழைக்க வில்லை. பல முறை யோசித்து விட்டேன் என்ன செய்வதென்றே தெரியவில்லை. எனக்கு ரெண்டு குழந்தைகளும் உண்டு, வேலைக்கு சென்று குடும்பத்தை சரியாக கவனிக்க வேண்டிய பொறுப்பும் உண்டு. என் கணவருடன் நடக்கும் வாக்குவாதத்தில் மணம் அதிக உளைச்சலுக்கு ஆளாகிறது, உண்மையில் எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை.

பதில்: இது இந்திய பெண்களுக்கு, அதிலும் குறிப்பாக தமிழ் நாட்டு பெண்களுக்கு இன்னும் அதிகமாக வரக்கூடிய ப்பிரச்சினை தான், உங்களின் மணது குடும்பத்தில் அனைத்தையும் கட்டிக்காப்பாத்த வேண்டும், இல்லையென்றால் அனைத்தும் சரி இல்லாமல் போய்விடும் என்று சற்று அளவுக்கு அதிகமாகவே குடும்பம் மீது அக்கறை கொண்ட மணது. அதில் பயபக்தியுடன் செயல் படுவீர்கள். அதே சமயம் இதற்கு நேர்மாறாக வாழ்க்கையில் மிகவும் சௌகரியம் வேண்டும் என்று எண்ணும் மனது ஆணுக்கு. அடிப்படையில் இந்த இரு குணாதிசயம் தான் பலவிதமான பிரச்சினைகளுக்கு காரணம். அவ்வப்பொழுது சண்டை போடும் கணவனை குடும்ப பெண்களால் சமாளிக்க முடியும். எப்பொழுதுமே விட்டுக்குடுத்து போகும் மனைவியிடமும் சலிக்காமல் சண்டை போடுகிறார்கள் என்றாள் அதற்க்கு வேறு ஒரு முக்கிய காரணம் இருக்க வாய்பிருக்கிறது. அது வெளியில் மனைவியிடம் கூற விரும்பாமல் உள்ளுக்குள் வைத்து புழுங்கும் Inferiority complex ஆகவும் இருக்கலாம். தாழ்வு மனப்பான்மைக்கு காரணம் வளர்ப்பு முறை, அதை சீர்திருத்துவது உங்களுக்கு மிகவும் கடினமானது. சில பெண்கள் தங்களிடம் தான் ஏதோ குறை இருக்கிறதோ என்று எண்ணி தங்களை காரணமே இல்லாமல் கணவனுக்கு எப்பொழுதும் அடிமையாக வாழ்வதுதான் correct என்று எண்ணிக்கொள்வார்கள், ஆனால் அது தவறு. எப்போதுமே உங்களின் சுயகௌரவத்தை விட்டுக்குடுக்காமல் உங்களை நம்பி வாழ்வதுதான் நல்ல திடமான வாழ்க்கையை குடுக்கும். இப்படி எப்பொழுதுமே சண்டை மட்டுமே போட்டுக்கொண்டிருக்கும் கணவர்களுக்கு மணதினில் நீங்கள் இல்லையென்றால் எதுவும் நடக்காது என்கிற பயமும் இருக்கும்!! உங்களை ப் போன்ற பெண்கள் கணவன் கூறும் கடும் வார்த்தைகளை உள்வாங்கிக்கொண்டு மணதை அதிகம் அடக்கி வைக்காமல் மணதில் பட்டதை வார்த்தைகளாக உங்கள் கணவரிடம் வெடித்து விடுவதும் நல்லதே. ஏன் என்றால் அதிகம் அடக்கி வைப்பதன் மூலம் ரத்த அழுத்தம் குறையும் (Low blood pressure) வாய்ப்பிருக்கிறது. அப்படி நிகழ்ந்தால் எந்த நேரத்தில் எந்த இடத்தினில் நீங்கள் மயக்கம் போட்டு விழுவீர்கள் என்று சொல்ல முடியாது. மண அழுத்தம் (Depression) அதிகரிப்பதால் இது போன்ற அபாயங்கள் நிகழும். எனவே நீங்கள் நீங்களாகவே இருங்கள், உள்ளுக்குள் எழும் சிறு சிறு சந்தோஷங்களுக்கு இடம் குடுங்கள். எவ்வளவு சொல்லியும் திருத்த முடியவில்லை என்றால் இரு குழந்தைகளுடன் சேர்த்து மூன்றாவதாக மண வளர்ச்சி குன்றிய இன்னொரு குழந்தை உள்ளதென்று நினைத்து வாழ்கையை நடத்துங்கள். நன்றாக நியாபகம் வைத்துக்கொள்ளுங்கள், உங்கள் குழந்தைகளின் எதிர்காலம் முக்கியமென்றால், அதற்கு முதலில் அவர்களைப் பார்த்துக்கொள்ள உங்கள் உடல் ஆரோக்கியம் மிக முக்கியம். அதை சரியாக வைத்துக்கொள்ள உங்களின் மனதை நீங்கள் சந்தோஷமாக வைத்துக்கொள்ள வேண்டும். உங்கள் வாழ்க்கை உங்கள் கையில். All the best… – இந்த பதிலை படித்து முடித்த பிறகு தன் தோளில் லேசாக தட்டிக்கொண்டு “you are leading a correct life sangeetha….” என்று தனக்குத்தானே சொல்லிக்கொண்டாள்.

2 Comments

  1. This part have next leavel pa

Comments are closed.