இடை அழகி மேடம் சங்கீதா 12 171

“என்னோட ஸ்கூல் ஃபிரண்ட் கார்த்திக்….” – என்று ராகவ் சொன்னதும்…. “கார்த்திக்… ஹ்ம்ம்…” – என்று புருவத்தை உயர்த்தி லேசாக சிரித்து சஞ்சனாவைப் பார்த்து கண் அடித்தாள் சங்கீதா. அதற்கு சஞ்சனாவிடம் இருந்து லேசான புன்னகை மட்டுமே வந்தது.. “சரி நான் இப்போ கிளம்புறேன்….” – என்று எழுந்த ராகவ் சஞ்சனாவைப் பார்த்தான்… அவள் மனதளவில் நிறையவே தன்னை வருத்தி பல காரியங்களை செய்திருக்கிறாள் என்று புரிந்தது அவனுக்கு…. அங்கிருந்து கிளம்பும்போது சஞ்சனாவிடம் “ஐ ம் சாரி சஞ்சனா… எனக்காக நீ நிறைய சிரமப்பட்டிருக்கே.. நீ சொன்ன விஷயம் ரொம்ப முக்கியமானது, அதை வெச்சி நம்ம காளிதாஸ் கிட்ட ஒரு ரிப்போர்ட் எடுத்து பார்த்தால் அதுல ஓவர் டைம் யார் இருந்திருக்காங்களோ கண்டிப்பா அவங்க இந்த விஷயத்துல சம்மந்தப் பட்டிருப்பங்கனு கொஞ்சமாவது உறுதியா சொல்ல முடியும்னு நினைக்கிறேன்.. நீ என்ன சொல்லுற?” – என்றான் ராகவ்.. காளிதாஸ் என்பவர் பல ஆண்டுகளாக IOFIல் விசுவாசியாக வேலை பார்த்து வரும் நம்பிக்கையான மூத்த ஊழியர்.

“சாரி எல்லாம் சொல்ல வேணாம்டா…. போயி உன் மைன்டுக்கு என்ன அடுத்து செய்யனும்னு தோணுதோ அதை செய்…” என்று கூலாக சொன்னாள் சஞ்சனா.. “ராகவ்… அப்படியே காளிதாஸ் குடுக்குற அந்த ரிப்போர்ட்ல யாரோட பேரு அடி படுதோ அவங்க பேரை போலீஸ் கிட்ட இம்மீடியேட்டா சொல்லி என்ன பன்றாங்கன்னு கவனிக்க சொல்லுறதுதான் இன்னும் பெஸ்ட்…” – என்றாள் சங்கீதா. “யேஸ்…. அக்கா சொல்லுறது கரெக்ட்” என்று சஞ்சனாவும் அதை ஆமோதித்தாள். “ஹ்ம்ம்… இன்னிக்கே நான் இன்ஸ்பெக்டர் கிட்ட பேசுறேன்..” என்று சொல்லிவிட்டு சில நொடிகள் அமைதியாய் இருந்தான் ராகவ்.. அவனைப் பொருத்தவரை இவர்கள் மூவரையும் சுத்தி சீக்கிரமே ஏதோ ஒன்று நடக்கப் போகிறது என்று ஒரு இன்ட்யூஷன் இருந்தது. அப்போது “சஞ்சனா.. இஃப் யூ டோன்ட் மைன்ட்.. இன்னைக்கி நீ சங்கீதா கூட இருந்துடேன், நாளைக்கு காலைல நான் கார் அனுப்புறேன். ரெண்டு பேரும் என் இடத்துக்கு வந்துட்டா என் ஃபிரண்ட் கூட சேர்ந்து எங்கயாவது போகலாம்… சீரியஸ்லி வீ ஆல் நீட் ஏ ப்ரேக்” – என்று ராகவ் சொல்ல “ஹ்ம்ம் சவுண்ட்ஸ் குட்..” என்றாள் சஞ்சனா.. ராகவ் IOFI வளாகத்துக்கு கிளம்பினான். இரவு நேரம் நெருங்கி இருந்தது. போகும் வழி யாவும் சஞ்சனா மித்துனிடம் இருந்து கறந்த விஷயங்களை மனதில் எண்ணிக்கொண்டே சென்றான். ஃபாக்டரி கழிவுகள்.. லாரி க்லியரன்ஸ்…. மரத்துண்டுகள்…. அனஸ்தீஷ்யாவால் குமாரைக் கொன்ற விதம்…. என்று பல விஷயங்களையும் மனதில் ஓட்டிக்கொண்டிருந்தான்.

சிந்தித்து சிந்தித்து மிகவும் அசதியானது ராகவ்கு.. அடர்த்தியான வீதியில் கொஞ்சம் வேகமாக ஓட்டி சென்றான். வீதியில் விளக்குகள் கூட இல்லை.. ஏதாவது பாட்டு கேட்கலாம் என்று ரேடியோ ஆன் செய்தான்.. “எந்தன் நெஞ்சில் நீங்காத தென்றல் நீதானா” என்ற பாடல் வர, அதை ஹம் செய்து கொண்டே மனதில் அவனது சாராவை கற்பனை செய்து சீட்டை கொஞ்சமாக பின் பக்கம் சாய்த்தான்…. திடீரென சற்றும் எதிர்பாராதவிதம் காரின் பின் பக்க கண்ணாடியை டமால் என்று உடைத்துக் கொண்டு ஒரு கைப்புடி அளவு கருங்கல் கார் உள்ளே விழுந்தது.

10 Comments

  1. Sir eathu sex story pola thriyala sir eana story onum puriyala please sex part eapo varum tell me

  2. Next post please.

  3. Next post please sir

  4. சூப்பர் கதை

  5. Hello next post varuma varatha. Summa delay panni kadupu ethitu. Story theriuma ella theriyatha. Pls podunga….

  6. Ney la thooku la thoongnum story theeiyala na. Ennum subject ku varave ella.

  7. Next post please

Comments are closed.