இடை அழகி மேடம் சங்கீதா 12 171

தெருவில் கிறீச் என்று காதைக் கிழிக்கும் சத்தத்துடன் டயரில் புகை வரும்விதம் பிரேக் போட்டான் ராகவ். ரியர் வியூ கண்ணாடி மூலம் ஏதோ ஒரு உருவம் ஓடுவது தெரிந்தது ராகவ்கு… உடனே கார் விட்டு இறங்கி பின் பக்கம் அந்த உருவத்தை நோக்கி மிக வேகமாக ஓடினான், ஒரு கட்டத்தில் அந்த உருவம் கண்ணுக்கு தெரியவில்லை. அவனை சுத்தி முழுவதும் இருட்டும் நிசப்தமும் நிறைந்திருந்தது. சற்று நேரம் இரவு நேர பூச்சிகளின் “க்ரீச்.. க்ரீச் ..” என்ற சத்தம் மட்டும்தான் கேட்டது…. தீடீரென அந்த உருவம் ராகவின் முதுகுக்குப் பின்னால் வந்து அவனை இருக்கி பிடிக்க, அந்த ஒரு கண நொடி எதற்கும் பயப்படாமல் சற்றும் அசராமல் தன் வலது காலால் அந்த உருவத்தின் காலை ஓங்கி மிதித்து தன் தலையால் பின் பக்கம் வேகமாய் அடிக்க, அந்த அடியின் வலியை தாங்கி மீண்டும் ராகவை தாக்க முற்பட்டது அந்த உருவம்…. ஒரு கையைத் தூக்கி அவனை அடிக்க முற்படும்போது அதை கச்சிதமாக இடது கையால் பிடித்து நெஞ்ஜாங்க்கூடுக்கு நடுவில் தோள்களின் தசைகளை இருக்கி ஒட்டுமொத்த பலத்தையும் குடுத்து ஓங்கி தன் முஷ்டியை மடக்கி அடித்த அடியில் உண்மையில் மோசமான உள்காயம் ஏற்பட்டிருக்க வேண்டும்..அதற்க்கு ஆதாரமாக வலி பொருக்க முடியாமல் நெஞ்சைப் பிடித்துக் கொண்டு அந்த இருட்டில் மீண்டும் அந்த உருவம் எங்கோ சென்று மறைந்தது. மீண்டும் அவன் கண்ணுக்கு அது தென்படவில்லை.. “எவனா இருந்தாலும் வாடா…. நான் மட்டும் தான் நிக்குறேன் வா.. எங்கே ஓடுன… வா” என்று மீண்டும் அந்த இருட்டினில் உரக்க கத்தினான் ராகவ்… சில நிமிடங்கள் சுற்றும் முற்றும் பார்த்தான்.. யாரும் தென்படவில்லை.. காரின் லைட் வெளிச்சம் தான் அவன் தெருவில் நடப்பதற்கு உதவியது. காரில் எரி அமர்ந்த பிறகு பின் சீட்டில் உள்ள அந்த கல்லை எடுத்துப் பார்த்தான்,

அதில் ஒரு சிறிய காகிதம் சுருட்டி கட்டப்பட்டிருந்தது. அதைப் பிரித்து படித்தான்…. அதில்.. “எங்களுடைய டார்கெட் நீ மட்டும்தான் ஆனா பாவம் உன் கூட ஒரு சின்ன கூட்டணியும் சேருது, அது அவங்களுக்கு நல்லதில்ல…. நான் வாங்கின வடு சாதாரனமானது இல்ல…. நிச்சயம் திருப்பி குடுப்பேன்..” – கஷ்ட்டப்பட்டு புரிந்து கொள்ளும் கையெழுத்துதான், இருப்பினும் ஒரு வழியாக எழுதியது என்னவென்று புரிந்துகொண்டான் ராகவ். வண்டியை மெதுவாக தனது பர்சனல் வி.ஐ.பி லாஞ்ச் முன்னே நிறுத்திவிட்டு உள்ளே சென்றான்.. இருட்டாக நிசப்தம் நிறைந்த அறையில் மிதமான மஞ்சள் வெளிச்சம் தரும் விளக்கை ஆன் செய்தான். மீண்டும் ஆழ்ந்து சிந்தித்தான். யார் யாரோ மனதுக்குள் நினைவில் வந்தார்கள், “இருக்காது…. அவங்களா இருக்காது” என்று யோசித்துக் கொண்டே இருந்தான்…. பிறகு காளிதாசுக்கு ஃபோன் செய்தான்..

10 Comments

  1. Sir eathu sex story pola thriyala sir eana story onum puriyala please sex part eapo varum tell me

  2. Next post please.

  3. Next post please sir

  4. சூப்பர் கதை

  5. Hello next post varuma varatha. Summa delay panni kadupu ethitu. Story theriuma ella theriyatha. Pls podunga….

  6. Ney la thooku la thoongnum story theeiyala na. Ennum subject ku varave ella.

  7. Next post please

Comments are closed.