இடை அழகி மேடம் சங்கீதா 12 171

தூரத்தில் இருந்து இன்ஜின் மீதிருக்கும் ஹெட்லைட் வெளிச்சம் தண்டவாளத்தின் மீது படர்ந்து பளபளத்தது… நெஞ்சம் படபடக்க, நெற்றி வியர்க்க… போலீசும், ராகவும், அவன் உடன் இருந்தவர்களும் அவர்களுக்கு பின்னாடி ஒரு கொலையே விழுந்தாலும் திரும்பி பார்க்கபோவதில்லை என்பது போல வைத்த கண் வாங்காமல் அந்த டெலிஃபோன் பூத்தையே பார்த்துக்கொண்டிருந்தனர்…. சம்பத்தும் நீண்ட நேரம் அந்த இடத்தை விட்டு விலகவில்லை… என்ஜின் மெதுவாக நிற்க நேரும்போது ஆமை வேகத்தில் அந்த பூத்தை S1….. S2….. S3…… என்று கம்ப்பார்ட்மென்ட்ஸ் மெதுவாக கடந்து செல்ல S5…. வந்து நின்றது… ராஜேந்திரன் ராகவின் கைகளை லேசாக அழுத்திப் பிடித்தார்… “ஐ குட் சீ மை மேன் இன் தட் கம்பார்ட்மென்ட்….. ஹி வில் கெட் ஹிம்…..” என்று மெதுவாக தன்னம்பிக்கை குரலில் ராகவிடம் பேசினார்….

ராஜேந்திரன் எதிர்பார்த்தது போலவெ மஃடியில் இருக்கும் போலீஸ் சாதாரணமாக ரயிலை விட்டு இறங்கும்போது பார்ப்பவர்கள் யாவருக்கும் அவன் போலீஸ் என்று தெரியாத வண்ணம் இறங்கினான்…. சம்பத் அந்த ரயிலில் பயணம் செய்ய இருந்தான்… இருப்பினும் தன்னை சுத்தி என்ன நடக்கிறதென்று அந்த ரயிலில் இருந்த கூட்டம் இறங்கும்போது கண்காணிக்காமல் இல்லை…. கம்பார்ட்மெண்டில் இருந்து ம்ஃடியில் இறங்கியவன் கீழே இருக்கும்போது பீடி பிடித்துக்கொண்டிருக்கும் போலீசை பார்த்து ஒரு கண நொடி ஏதோ சின்ன செய்கை கொடுக்க… என்ன கெட்டநேரமோ.. அதை சம்பத் பார்த்துவிட்டான்… அவனுக்கும் இதைப் பார்த்ததில் தன்னை சுற்றி ஏதோ நடக்கிறதென்று ஒரு அபாய மணி ஒலிக்க ஆரம்பித்துவிட்டது…

உள்ளே ஏறலாம் என்று மெல்ல நடந்து வந்தவன் சற்று அமைதியாய் அப்படியே ஸ்டில்லில் நிற்க.. மஃடியில் இருக்கும் மீதி இருவரும் ஒரு நிமிடம் அவனை அப்படியே கூர்ந்து கவனித்தனர்.. மூவரும் அப்படியே அங்கும் இங்கும் நகராமல் சற்று நிமிடங்கள் உறைந்து நின்றனர்…. நின்றனர்… நின்றனர்…. ஒருவருக்கொருவர் பார்த்தார்கள்…. மீதி இருவரும் லேசாக அசரும் வேலையில் உடனே அதிவேகமாக அங்கிருந்து வேகம் பிடித்து ஓட ஆரம்பித்தான் சம்பத்…. உடனே மீதி இருவரும் அவனை கூட்டத்தில் பின் தொடர்ந்து ஓடிப் பிடிக்க முயற்சித்தார்கள்.. கிட்டத்தட்ட நெருங்கி விட்டார்கள்.. ராஜேந்திரனுக்கு “ச்ச எவ்வளோ சொல்லியும் சொதப்பிட்டாங்களே..” என்று கடித்துக்கொண்டார்… சம்பத்தை அவனுக்கு பின்னாடி மிகவும் நெருங்கி ஓடி வந்து பிடிக்க முயற்சித்த இருவரை யாருமே எதிர்பார்க்காத வண்ணம் அவன் கையில் இருக்கும் கேமராவில் ஒரு பட்டனை அழுத்த…. லென்ஸ் இருக்கும் வழியே அந்த இருவரின் கால்களில் புல்லெட் பாய்ந்தது… அவன் சுடும் வரை அனைவருமே அது கேமரா என்றுதான் எண்ணி இருந்தார்கள்..

ஆனால் அது கேமராவை போல தோற்றம் கொண்ட துப்பாக்கி என்பது யாருக்கும் தெரியவில்லை…. இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த ராஜேந்திரன் உடனே அந்த சுவரை எகிறி குதித்துக் கொண்டு “யூ ஆல் பீ ஹியர் சேஃப்லி….” என்று கத்திக் கொண்டே சம்பத்தை நோக்கி ஓட…. ஸ்டேஷன் என்ட்ரன்ஸ் அருகே மஃடியில் நின்றிருந்த இரண்டு போலீஸ்காரர்கள் அவனை பிடிக்க நேரும்போது ஒருவனுடைய கையில் மட்டும் சம்பத் சிக்கினான்… ஆனால் பிடித்தவன் கையை தன் கேமரா போன்ற துப்பாக்கியை வைத்து பிடித்தவன் தோளில் ஓங்கி குத்தி அவன் பிடியில் இருந்து தப்பி எஸ்கேப் ஆகி விட்டான்… சில நேரம் கழித்து ராகவும் அவன் உடன் இருந்தவர்களும் ராஜேந்திரனை நோக்கி சென்று என்ன ஆனதென்று கேட்க…. “வெறி சாரி சார்…. ” என்று இன்ஸ்பெக்டர் சொல்ல “உக்கும் நான் தான் அப்போவே சொன்னேனே….” என்று கார்த்திக் முணுமுணுத்தான்..

10 Comments

  1. Sir eathu sex story pola thriyala sir eana story onum puriyala please sex part eapo varum tell me

  2. Next post please.

  3. Next post please sir

  4. சூப்பர் கதை

  5. Hello next post varuma varatha. Summa delay panni kadupu ethitu. Story theriuma ella theriyatha. Pls podunga….

  6. Ney la thooku la thoongnum story theeiyala na. Ennum subject ku varave ella.

  7. Next post please

Comments are closed.