இடை அழகி மேடம் சங்கீதா 12 171

“சரா… சீக்கிரம் வா… ஒரு முக்கியமான முதல சிக்கி இருக்கு… போய் பிடிக்கணும்..” என்று சொல்லி சஞ்சனாவையும் கார்திக்கையும் அழைத்து அவர்களுடன் காரில் வேகமாக கிளம்பினான்.. காரில் சஞ்சனா, கார்திக் மற்றும் சங்கீதாவிடம் தன்னை முந்தைய இரவு ஒருத்தன் தாக்கினான் என்றும் அப்போதுதான் போலீசிடம் தான் சந்தேகப்பட்ட விஷயங்களை கூறியதாகவும் சொல்லிக்கொண்டே வண்டியை ஓட்டினான் ராகவ்..

“டேய் மச்சி நீ சொல்லுறதெல்லாம் நிஜமாடா?…. தனியா ராத்திரி இருட்டுல ஒருத்தன் கூட ரோட்டுல சண்டை போட்டியா?.. நீ அவளோ பெரிய அப்பாடக்கரா டா..” கார்த்திக் நம்ப முடியாமல் புலம்பினான்.. “யாருடா அவன்?… யார சந்தேகப்பட்ட?… இப்போ ஸ்டேஷன்ல இருக்கிறது யாரு….” – பதட்டத்துடன் கேட்டாள் சங்கீதா.. “இதைப்பாறு..” என்று தன் செல் ஃபோனில் அந்த ஆசாமியின் ஃபோட்டோவை காமித்தான்.. சங்கீதா அதிர்ச்சியாக பார்த்தாள்.. அது வேறு யாருமில்லை, ஒரு காலத்தில் அவளிடம் பப்ளிக்காக அறை வாங்கிய சூப்பர்வைசர் சம்பத் தான்..

“ஹேய்… இந்த ராஸ்கல் எதுக்குடா சம்மந்தபட்டிருக்கன்..” என்று சங்கீதா கேட்க.. “தெரியலையே.. எது எது எதுக்கு நடக்குது, யாரெல்லாம் சம்மந்த பட்டிருக்காங்கன்னு ஒரு ஒரு முதலையா பிடிக்க பிடிக்கத்தான் தெரியவரும்….” என்றான் ராகவ்.. அனைவரும் ஒரு விதமான சீரியஸ்னஸுடன் காரின் உள்ளே அமர்ந்திருக்க.. கார்திக் மெதுவாக “ஹாஹ்… ஹா” என்று சிரித்தான்.. “எதுக்கு சிரிக்கிற?..” – சஞ்சனா உரிமையாக முறைத்து கேட்டாள்.. “இல்ல… நம்ம பய ஏதோ யோசனையில வேகமே இல்லாம வண்டி ஓட்டிட்டு இருக்கான்.. அப்போ ஒன்னு நியாபகம் வந்துச்சி.. சிரிச்சேன்..” என்று சொல்லி சிரித்தான் ராகவ்.. “என்ன யோசிச்ச?..” – ஸ்டீரிங் பிடித்துக்கொண்டு திரும்பி பார்க்காமல் கேட்டான் ராகவ்…. ப்ச்…. அது ஒன்னும் இல்லடா.. எக்ஸ்பில யாரோ மாதவன்னு ஒருத்தன் கதை எழுதுறன்…. அவன் கூட அப்டேட் போட்டுட்டான்.. ஆனா நீ ஆக்ஸலரேட்டர் அழுத்தி வேகம் குடுக்குறதுக்குள்ள நீ புடிக்க வேண்டியவன் லேட் ட்ரெயின் பிடிச்சி கூட போய்டுவான் போல இருக்கு… நீயாடா மச்சி வண்டிய ஓட்டுற… சும்மா மிதிடா நல்லா.. ரைட் ரைட்… என்று விசில் குடுத்து நண்பனை உற்சாகப்படுதினான் கார்த்திக்…. “என்னது அது எக்ஸ்பி?…. எந்த மாதவன்?… என்ன ஒலர்ரான் இவன்..?” – என்று சஞ்சனாவும் சங்கீதாவும் ஒன்னும் புரியாமல் குழம்பினார்கள்..! “அதெல்லாம் உங்களுக்கு புரியாது…. அது எங்களுக்கு ஒரு தனி உலகம்.. ஹா ஹா..” என்று கார்த்திக் சிரிக்க…. பலவிதமான சிந்தனைகளுக்கும் டெண்ஷனுக்கும் மத்தியில் கார்த்திக் அடித்த கமெண்ட்டையும், அதை கேட்டு சஞ்சனாவும் சங்கீதாவும் குழம்புவதைப் பார்த்து கூலாக சிரித்துக் கொண்டே டாப் கியரில் ஆக்ஸலரேட்டரை மொத்தமாய் அழுத்தினான் ராகவ்.. அசுரத்தனமான வேகத்தில் ரயில்வே ஸ்டேஷனை நோக்கி ‘உர்ர்ர்ர்ர்ர்ர்ர்’ என்று எதிர் திசை காற்றை கிழித்துக் கொண்டு சிறுத்தையை போல் பாய்ந்தது ராகவின் BMW கார்….டிக் டிக்… என்று நேரம் பத்து மணியை தொட அந்த பழைய கடிகாரத்தின் முட்கள் சற்று சோம்பேறியாக சுத்திக்கொண்டிருந்தது…. அப்போது “உன்னை அறிந்தால்… நீ உன்னை அறிந்தால்… உலகத்தில் போராடலாம்..” என்று அந்த இடத்தில் ரேடியோ மட்டும் உற்சாகமாக பாடிக்கொண்டிருக்க “யாராவது அத கொஞ்சம் கம்மி பண்ணுங்கயா….” என்று தலையில் கை வைத்து ஏதோ வருத்தி எடுக்கும் சிந்தனையில் ஆழ்ந்திருக்க.. “உயர்ந்தாலும் தாழ்ந்தாலும், தலை வணங்காமல் நீ வாழலாம்..” என்று மீண்டும் சத்தம் குறையாமல் பாடிக்கொண்டிருந்தது..

10 Comments

  1. Sir eathu sex story pola thriyala sir eana story onum puriyala please sex part eapo varum tell me

  2. Next post please.

  3. Next post please sir

  4. சூப்பர் கதை

  5. Hello next post varuma varatha. Summa delay panni kadupu ethitu. Story theriuma ella theriyatha. Pls podunga….

  6. Ney la thooku la thoongnum story theeiyala na. Ennum subject ku varave ella.

  7. Next post please

Comments are closed.